2. சிவப்புக் கலர் பால் பாய்ண்ட் பேனா

இன்று ஒரு பிரபல பில்டர் போன் செய்து உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் சார் என்றார். ரொம்ப நாளாக எனக்கு சிவப்பு நிற பால் பாய்ண்ட் பேனா தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் நோட்டுப் புத்தகத்தில்தான் எழுதுகிறேன். ஒரு நண்பர் நோட்டுப் புத்தகமும் வாங்கிக் கொடுத்து விட்டார். நாலு நோட்டு ஆர்டர் பண்ணி ஒண்ணுதான் வந்தது. மூணுக்கு புகார் செய்திருக்கிறார். அமேஸான். ஆக, இன்றைய தேவை சிவப்புக் கலர் பால் பாய்ண்ட் பேனா. அதைக் கேட்டேன். நாளை … Read more

நாகார்ஜுனர் – அபிலாஷ்

தமிழ்நாட்டில் செக்ஸ் ஸ்டார்வேஷன் பற்றித்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஃபிலாசஃபி ஸ்டார்வேஷனும் இந்த அளவுக்கு இருந்திருக்கிறதா என்கிற அளவில் பிய்த்துக் கொண்டு போகிறது அபிலாஷின் நாகார்ஜுனா தத்துவ விவாதம். அபிலாஷ் நாகார்ஜுனரின் Mulamadyamakakarika என்ற நூலைப் பற்றி தினமும் அரை மணி நேரம் உரையாற்றப் போகிறேன் என்று சொன்னதும் புத்தாண்டு தினத்தில் ஏன் இந்த சோகச் செய்தி என்றே முதலில் நினைத்தேன். முதலில் அந்த நூலின் பெயரையே சரியா உச்சரிக்க வராதே? சம்ஸ்கிருதத்தில் பிரித்துப் பிரித்துப் போட … Read more

ஒரு அற்புதமான இலக்கிய அனுபவம்

கடந்த ஒரு ஆண்டாக பிரபலமாகப் பேசப்பட்டு வரும் ஒரு நாவலைப் படிக்க எடுத்தேன். பின்னட்டையிலேயே தப்பு. முருகண் என்று வருகிறது. ஒரு எழுத்தாளரின் பெயரை இப்படி முருகண் என்று போட்டிருக்கிறார்கள். அந்த நாவலை எழுதியவர் முருகண் அல்ல. அவர் வேறு. அவர் பெயரில் தப்பு செய்யவில்லை. என்ன ஆகிறது என்றால், இப்படி அட்டையிலேயே தப்பு இருந்தால் உள்ளே எப்படி இருக்கும் என்று பயம் உண்டாகி விடுகிறது. இருந்தாலும் நாவலைப் படித்து விடுவேன். வலுவான சிபாரிசு. எதையும் சுலபத்தில் … Read more

1.

எதையெல்லாம் நீ துறக்கிறாயோ… புத்தாண்டில் எழுதும் முதல் கட்டுரை.  கிருமி முற்றாகப் போகவில்லை என்றாலும் நாம் பூச்சியை முடித்து விடுவோம்.  இதற்கு வேறு ஏதாவது ஒரு தலைப்பு வைக்க  வேண்டும்.  அதுவரை எண்கள். சென்ற ஆண்டு நிறைய எழுதியவர்களில் என்னையும் சேர்த்திருந்தார் பா. ராகவன்.  சந்தோஷமாக இருந்தது.  ஆனால் வேறொரு விஷயத்தை நான் உங்களுக்கு இதுவரை சொல்லவில்லையே என நினைத்து சற்று என் மீதே வருத்தமாகவும் இருந்தது.  நான் எழுதிய பூச்சி அனைத்தும் நான் ஈடுபட்ட வேலையிலிருந்து … Read more

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சஞ்சய் சுப்ரமணியம் அவர்களுக்கு,

வணக்கம்.  உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுத எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.  இருந்தாலும் கடைக்கோடி ரசிகனின் ஏதோ ஒரு மனத்தாங்கலை உங்களிடம் கொட்டி விடலாம் என்று எழுதுகிறேன்.  நான் சொல்வது முழுக்கவே தவறாக இருக்கலாம். இருந்தாலும் என் மனசாட்சி ‘இப்படி ஒரு பார்வையும் இருக்கலாம்தானே?  இதை சம்பந்தப்பட்டவரிடமே சொல்லி விடலாமே?’ என்று சொன்னதால் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு இதை எழுதத் துணிந்தேன்.  சமீபத்தில் ரா. கணபதி எழுதிய மகா பெரியவர் விருந்து என்ற நூலில் மகா … Read more

2021

2020 முடிய இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் இருக்கிறது.  இதுவரை எந்த ஆண்டும் புத்தாண்டு பற்றிப் பெரிதாக யோசித்ததில்லை.  எல்லா நாளும் ஒரே நாளே என்ற மனநிலையே எனக்கு.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காட்டில் அராத்து புத்தக வெளியீட்டு விழா.  கோலாகலம்.  சென்ற ஆண்டு கிழக்குக் கடற்கரைச் சாலை.  அராத்து புத்தக வெளியீடு.  இந்த ஆண்டு புத்தக வெளியீடு இருந்தாலும் நான் வருவதற்கில்லை என்று சொல்லியிருந்தேன்.  இப்போது நண்பர்கள் ஏற்காட்டில் சந்திப்பதாக அறிந்தேன்.  எனக்கு மிக … Read more