கிண்டில்

சில தினங்களுக்கு முன் செல்வேந்திரனின் பதிவு ஒன்றை இங்கே பகிர்ந்திருந்தேன். அவருடைய மூன்று புத்தகங்கள் ஒருசில மாதங்களிலேயே அமேஸான் கிண்டிலில் ஆயிரம் பிரதிகளைத் தாண்டி விற்றதை எழுதியிருந்தார். அமேஸான் கிண்டிலில் ஒரு புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு என் நண்பர் நிர்மலின் கீழ்வரும் பதிவே சாட்சி. ஆறு மாதங்களில் அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் கிண்டில் மூலம் வந்துள்ளது. அதுவும் அவ்வளவாகப் பிரபலம் ஆகாத புத்தகம். கிண்டிலில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது. பின்வருவது நிர்மல்: இன்றுதான் கணக்கு பார்த்தேன். … Read more

பூச்சி 66

பாதாள் லோக் என்று ஒரு சீரீஸ் வருகிறது.  அமேஸான் ப்ரைம்.  இதைப் பார்க்கச் சொல்லி பல நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.  பார்க்கவில்லை.  அப்போது தருண் தேஜ்பால் ஒரு லிங்க் அனுப்பியிருந்தார்.  பார்த்தால் தருண் எழுதிய The Story of My Assassins என்ற நாவலை அப்படியே திருடி, தருண் தேஜ்பால் பெயரையே போடாமல் பாதாள் லோக் என்ற தொடரை எடுத்திருக்கிறார்கள் என்று ஒரு பத்திரிகை கட்டுரை சொன்னது.  அதைத்தான் தருண் எனக்கு அனுப்பியிருந்தார்.  அப்புறம் அது பற்றி … Read more

பூச்சி 65

ஊரடங்கு, தனிமைப்படுத்தல் ஆகிய காரணங்களால் என்னுடைய இரண்டு நண்பர்கள் தங்கள் இளம்பிராயத்து நினைவுகளை அப்படியே நாஸ்டால்ஜியாவாக எழுத ஆரம்பித்தனர்.  இருவருமே நாவலெல்லாம் எழுதுவார்கள் என்று அவர்களே நம்பியதில்லை.  கொரோனாவினால் உலகமே துயரத்தில் இருக்கிறது, அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றாலும் ஒருசில நன்மைகளும் விளைந்திருக்கிறதுதானே?  கங்கை நதி சுத்தமாகி விட்டது.  எடுத்ததற்கெல்லாம் மருத்துவர்களிடம் ஓடிக் கொண்டிருந்த ஜனம் இப்போது அடங்கி இருக்கிறது.  பச்சிலை, மூலிகை என்று பாரம்பரிய மருத்துவத்திடம் நம்பிக்கை வந்திருக்கிறது.  வீட்டில் இருந்ததே இல்லை என்று இருந்தவர்களெல்லாம் … Read more

zoom meeting 31 may

மே 31, ஞாயிறு காலை இந்திய நேரம் ஆறு மணிக்கு Zoom மூலமான இலக்கியச் சந்திப்பு பற்றி குறித்து வைத்துக் கொண்டீர்களா?  நண்பர் மனோகர் சொன்னார், நூறு பேர்தான் கலந்து கொள்ள முடியும் என்ற கணக்கெல்லாம் இல்லை, எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று.  மாயா இலக்கிய வட்டத்தில் நூறு என வரையறை செய்திருக்கலாம்.  நாம் எத்தனை பேரை உள்ளடக்கலாம் என்று சதீஷ்வரைக் கேட்டு எழுதுகிறேன்.  சில நண்பர்கள் சதீஷ்வரைத் தொடர்பு கொண்டதாக அறிந்தேன்.  நல்லது.  … Read more

பூச்சி 64

குடி பற்றி நான் இவ்வளவு எழுதியும் அதைப் படிக்காமல், அல்லது படித்து விட்டும் அதைக் கண்டு கொள்ளாமல் குடித்து விட்டு ரோட்டில் கிடக்கிறான், குடித்து விட்டுப் பெண்டாட்டியை அடிக்கிறான் என்றே எழுதிக் கொண்டிருக்கும் சமூக சிந்தனையாளர்களை என்ன செய்யலாம் என்று தெரியவில்லை.  ஏனய்யா, தமிழ்நாட்டுக் குடிகாரர்கள் மட்டும்தான் நரகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறார்களா?  இதே துப்புரவுத் தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், மற்றும் இன்னோரன்ன உதிரித் தொழிலாளி வர்க்கத்தினர், பாட்டாளி மக்கள் எல்லோரும் கர்னாடகாவில் குடித்து விட்டு எப்படி … Read more

பூச்சி 63

பூச்சியை முடித்து விட்டு வேறு வேலையைப் பார்க்கலாம் என்றால், இதை இன்னும் ஆரம்பித்தது போலவே இல்லை என்கிறாற்போல் இருக்கிறது.  இந்த உணர்வு வரும் போதெல்லாம் எனக்கு இரண்டு பேரின் ஞாபகம் தொற்றும்.  அசோகமித்திரன், ஜான் பால் சார்த்தர்.  86 வயதில் அவர் காலமாகும் வரை – ஏன், சாகும் தருணத்தில் கூட அசோகமித்திரன் நம்மிடம் சொல்வதற்குப் புதிது புதிதாகக் கதைகள் வைத்திருந்தார்.  ஆச்சரியம் என்னவென்றால், அந்தக் கதைகள் அவரது இளம் பிராயத்துக் கதைகளாக இருந்தன.  ஜெமினி ஸ்டியோவில் … Read more