எனக்குப் பிடித்த எழுத்தாளர்
ஒரு நண்பர் முகநூலில் ரகளை பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு ரஜினி ரசிகன் மாதிரி அவர் போடும் போஸ்ட்டுகளைப் படித்துத் திளைத்துக் கொண்டிருந்தேன். அவருக்குமே போதையில் நிலை கொள்ளவில்லை. யாருக்குத்தான் புகழ்ச்சி பிடிக்காது. பிறகு ஒரு நாவல் எழுதினார். படித்தேன். முடிந்தது கதை. திட்டுவதற்குக் கூட லாயக்கு இல்லை. விமர்சனம் செய்வதற்குக் கூட லாயக்கு இல்லை. கொடுமை, கொடுமையிலும் கொடுமை. முகநூலில் தெரிந்த அந்த சரவெடி சரவணனை நாவலில் காணவே காணோம். (சும்மா எதுகை முகனைக்காகச் சொன்னேன். நீங்கள் … Read more