லால்குடியில் லா.ச.ரா. பற்றிப் பேச இருக்கிறேன்…
நாளை திருச்சி கிளம்புகிறேன். நாளை இரவு திருச்சியில் தங்கல். நாளை மறுநாள் ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் லால்குடி வினோபா கல்வி நிலைய வளாகத்தில் லா.ச.ரா. பற்றிப் பேசுகிறேன். லா.ச.ரா.வின் புதல்வர் சப்தரிஷியும் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் ஒரு அபாரமான மனிதர். திங்கள் மாலைதான் சென்னை எக்ஸ்பிரஸில் சென்னை திரும்புகிறேன். இரண்டு தினங்களும் திருச்சியில் என் நண்பன் சுதிர் செந்தில் இல்லாதது எனக்கு வருத்தம். வெளியூர் போயிருப்பதாகத் தகவல் அறிந்தேன். … Read more