கம்மட்டி பாடம்

முதலில் நான் கம்னாட்டி படம் என்றே படித்துக் கொண்டிருந்தேன்.  இன்றுதான் முகநூலில் பிரபு காளிதாஸ் இந்தப் படத்தைப் புகழ்ந்து எழுதித் தள்ளியிருப்பதைப் படித்து விட்டு சரியாக எழுத்துக் கூட்டிப் படித்தேன்.  பொதுவாக எனக்கு மலையாளப் படங்கள் பிடிக்காது.  அவர்களின் சென்ஸிபிலிட்டிக்குள் என்னால் நுழைய முடிவதில்லை.  முன்பு மலையாள செக்ஸ் படங்களும் அப்படித்தான்.  பிடிக்காது.  மலையாள கலைப் படங்கள் (அடூர்) என்றால் காத தூரம் ஓடி விடுவேன். ரொம்பப் பேர் பிரேமம் பாருங்கள் என்றார்கள்.  அந்தப் பெயரே எனக்கு … Read more

படிக்க வேண்டிய புத்தகங்கள்

இப்படி ஒரு பட்டியல் போடுவதற்கு எனக்குத் தகுதி இல்லை.  ஏனென்றால், சமீபத்தில் வந்த நூல்கள் பலவற்றை அல்லது அநேகமாக எல்லாவற்றையுமே நான் வாசித்ததில்லை.  இப்போதுதான் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி என்று படித்து வருகிறேன்.  என்றாலும் பெரியவர் ஆசீர்வாதம் மாதிரி பத்து பெயர்களைச் சொல்லுங்கள் என்றார்கள் ஒரு தொலைக்காட்சியில்.  படிக்க வேண்டிய புத்தகங்கள்தான்.  ஆனால் நிறைவான பட்டியல் அல்ல.  ஏனென்றால், தமிழ்மகனின் மெட்ராஸ் பற்றிய புத்தகம் வந்திருப்பதாக அறிந்தேன்.  இன்னும் கிடைக்கவில்லை, படிக்கவில்லை.  நேற்று மனுஷ்ய … Read more

ஒரு இரங்கல் கட்டுரை

பின்வரும் கட்டுரையை எழுதியவர் நண்பர் கருந்தேள் ராஜேஷ்.  என்னுடைய சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஒரு முக்கியமான இழப்பை, மரணத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இனி வருவது கருந்தேள் ராஜேஷ்: எரியும் உடலின் வாய் அரிசியை நோண்டித் தின்பவர்கள் நம்மூருல ஒரு மனுசன் செத்துப்போனா என்னலாம் பிரச்னை என்பதை ப்ராக்டிகலாக உணர்ந்துகொண்டிருக்கிறேன். அப்பா கடந்த வெள்ளியன்று மதியம் இறந்துவிட்டார். வயது 78. கிட்னி பிரச்னை. டயாலிசிஸ் வேண்டாம் என்று உறுதியாக இருந்து, நினைத்தபடி ஜாலியாக … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: சுந்தர ராமசாமி (பகுதி 2)

சி.சு. செல்லப்பா, க.நா.சு.வின் அடிச்சுவட்டில் தீவிரமான இலக்கியம் ஏகப்பட்ட சிறுபத்திரிகைகளின் மூலம் வளர்ந்துகொண்டிருந்த நிலையில் சுஜாதா என்ற ஒரே மனிதரின் அசுர பலத்தினால் வெகுஜன எழுத்துக்கு மட்டுமே தமிழகத்தில் இடம் உண்டு என்ற நிலை ஏற்பட்டது. *** அகிலனுக்கு ஞான பீடம் கிடைத்தது பற்றி சு.ரா.: “அகிலன் பரிசு பெற்றதைப் பத்திரிகைச் சக்திகளும் சக கேளிக்கையாளர்களும் கொண்டாடுவது இயற்கையான காரியம். ஜிப்பா தேசிய உடையாவதை ஜேப்படித் திருடர்கள் வரவேற்பது மாதிரி இது. சீரழிந்த மதிப்பீடுகள் ஒன்று மற்றொன்றைத் … Read more

சீமானுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சகோதரர் சீமான் அவர்களுக்கு,      வணக்கம். இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதும் காணம், நீங்கள் மற்ற அரசியல்வாதிகளிலிருந்து தனித்து இருக்கிறீர்கள் என்பதுதான். முக்கியமாக எந்தப் பெரிய கட்சியுடனும் நீங்கள் சேரவில்லை. சேர்ந்திருந்தால் நாலைந்து சட்டசபை உறுப்பினர்களோடு கணக்கைத் துவக்கியிருக்கலாம். மேலும், உங்கள் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட செயல்திட்டத்தைக் கொண்டிருந்தது. ஆனால், உங்கள் கட்சியின் அடிப்படையான கொள்கையில் சில ஆபத்தான அம்சங்கள் உள்ளன. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும் என்பது அதில் … Read more

நிலவு தேயாத தேசம் – 29

இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகள் ஆகி விட்டன.  மேற்கு ஐரோப்பிய நாடுகள் அந்தப் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அந்த மனநிலையிலிருந்து விலகி வெகுதூரம் வந்து விட்டன.  இன்றைய தினம் தேசியவாதம், தேசப் பற்று போன்ற வார்த்தைகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மனித குலத்துக்கு விரோதமான கருத்துருவங்களாகக் கருதப்படுகின்றன; அவற்றை ஹிட்லரின் தேச பக்தி என்ற சித்தாந்தத்தோடு தவிர்க்க முடியாமல் சம்பந்தப்படுத்தி மனம் நடுங்குகிறார்கள்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்  நிலைமை அப்படி இல்லை.  … Read more