கவி அய்யப்பன் நினைவு நாள் விழா

15-ஆம் தேதி மாலை திருவனந்தபுரம் செல்கிறேன். அன்று இரவும் மறுநாள் முழுவதும் திருவனந்தபுரத்தில்தான் இருப்பேன். 17-ஆம் தேதி காலை அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். மலையாளக் கவி அய்யப்பன் நினைவு நாள் விழாவில் கலந்து கொண்டு அய்யப்பன் மெமேரியல் லெக்சரும் கொடுக்க இருக்கிறேன். அய்யப்பனுடன் பழகியிருக்கிறேன். திருவனந்தபுரம் போகும்போதெல்லாம் அவரும் நானும் ஏதாவது ஒரு மதுபான விடுதியில் அமர்ந்து ஐந்தாறு மணி நேரம் பேசிக் கொண்டிருப்போம். ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்களின் கவிதைகளை சினிமா பாடலைப் போல் ராகத்தோடு பாடுவார். … Read more