சுஜாதாவின் தொடர்
தமிழில் வெகுஜன எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. அது வேறு; இது வேறு. ஆனால் வெகுஜனப் பத்திரிகைகளில் இலக்கியம் வரும். லா.ச.ரா.வின் எழுத்து முழுக்கவும் வெகுஜனப் பத்திரிகைகளில் வந்தவைதான். அசோகமித்திரனின் எழுத்தும்தான். இந்திரா பார்த்தசாரதி அநேகமாக கல்கியில் எழுதினார். மற்றபடி வெகுஜனப் பத்திரிகைகளில் வரும் பொழுதுபோக்கு எழுத்தை என்னால் ஒருபோதும் வாசிக்க முடிந்ததில்லை. அதற்கு ஒரே ஒரு விதிவிலக்காக இருந்தவர் சுஜாதா மட்டுமே. காரணம், அவர் எழுத்து வெறும் வணிக எழுத்து என்று ஒதுக்கித் தள்ள முடியாமல் … Read more