தஞ்சை ப்ரகாஷ்

என்னை ஆசிரியனாக நினைக்கும் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த வேண்டுகோள். அதேபோல் தஞ்சை ப்ரகாஷை மதிக்கும் மற்றவர்களும் இந்த வேண்டுகோளை செவி மடுக்கலாம்.  காரியத்தில் இறங்கலாம்.  எனக்காக இல்லாவிட்டாலும் தஞ்சை ப்ரகாஷுக்காக இதை நீங்கள் (அதாவது, லட்சுமி சரவணகுமார் போன்று தஞ்சை ப்ரகாஷை தமிழ் இலக்கியத்தில் முக்கியமாக நினைப்பவர்கள்). மற்றவர்கள் வெறுமனே படித்து விட்டுக் கடந்து விடலாம். தஞ்சை ப்ரகாஷ் பற்றி மிக விரிவாக என் பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதி இருக்கிறேன்.  அவரைச் சுற்றி பல இலக்கிய … Read more

மீண்டும் ஒரு கடிதம், ஒரு பதில்…

அன்புள்ள சாரு..இன்றைய இலக்கிய இதழ்களின் போதாமை குறித்தும் ஓர் இதழ் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் மூத்த எழுத்தாளர்களை எப்படி இன்றைய தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது குறித்தும் அக்கறையுடன் ஆக்கப்பூர்வமாக தர்க்கரீதியாக நீங்கள் முன்வைத்த கருத்தை ஒரு இலக்கியவாதி தனக்கே உரிய அறியாமையுடன் துவேஷத்துடன் எள்ளி நகையாடியிருக்கிறார்கடந்த சில ஆண்டுகளில் வாசிப்பு பன்மடங்கு அதிகமாகியிருக்கிறது..  தமிழைப்பொருத்தவரை இதற்கு நீங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதை நீண்டகால இணையவாசிகள் அறிவார்கள்..இணையம் வெகுஜன பயன்பாட்டுக்கு வந்த … Read more

ஒரு கடிதம்…

அன்புள்ள சாரு…ஓஷோ ஒரு உதாரணம் சொல்கிறார்..இனிப்புக் கடைக்காரர் ஒருவருக்கு யார் மீதோ கோபம்.. கோபத்தில் தன் கடைசியில் இருந்த  இனிப்புகளை அவன் மீது எறிகிறார்.  அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகள் கிடைக்கின்றன..  ஒரு சராசரி மனிதன் காட்டும் அன்புகூட பிறருக்கு இம்சைதான். ஆனால் படைப்பின் உச்சத்தில் இருப்பவனின் கோபம்கூட அவனது படைப்பாற்றலின் வெளிப்பாடு என்பதால் பிறருக்கு நன்மைதான் என்கிறார் அவர்..அதுபோல  ஒரு சம்பவத்திற்கான உங்கள் கோபமான எதிர்வினையால் “பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் ”   என்ற மகத்தான சிறுகதை மீண்டும் … Read more

தடம் நின்றதில் ஆச்சரியமில்லை…

தடம் இதழ் நின்று போன விஷயத்தை நேற்று சாதனா செய்தியாக அனுப்பியிருந்தார்.  அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று பதில் அனுப்பினேன்.  இன்று காயத்ரி சொன்ன போது ரொம்ப நல்ல விஷயம், சந்தோஷமாக இருக்கிறது என்றேன். ஒரு இலக்கியவாதியான நான் அப்படிச் சொன்னது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  அந்த ஆச்சரியத்தை மட்டுப்படுத்துவதற்காக ஏதேதோ உளறி விட்டு உரையாடல் திசையை மாற்றி விட்டேன். உங்களுக்குத் தெரிந்திருக்கும், நான் தடம் இதழில் எதுவும் எழுதியதில்லை.  ஆரம்பத்தில் என்னுடைய ஒரு பேட்டி வந்ததோடு … Read more

பூனைகளும் நானும்…

அவந்திகாவுக்கும் எனக்கும் தங்கள் வீட்டில் இடம் கொடுத்துப் பராமரிக்க முன்வந்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றி. நன்றி என்ற உணர்வை நெகிழ்வான முறையில் வேறு எந்த வார்த்தைகளால் சொல்வது என்று தெரியவில்லை. இனிமேலும் ட்ரில்லிங் போட்டால் நேராக கமிஷனரிடம் போய்த்தான் புகார் கொடுப்பேன் என்கிறாள் அவந்திகா. வீட்டுக்கு வந்து விட்டோம். இன்னொரு விஷயம். சமீபத்தில் ஒரு கடையில் பூனைகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த ஒருவர் எத்தனை பூனை என்றார். அப்படிக் கேட்டால் … Read more