மூன்று ரவுடிகள்

என் மகன் கார்த்திக்குக்கு பையன் பிறந்திருக்கிறான். நேற்று ராம்ஜி வாழ்த்து சொன்னார். அவந்திகாவுக்குத்தான் இப்போது மூன்று ரவுடிகளை சமாளிக்க வேண்டியிருக்கும் என்றேன். பாவம் சார் கார்த்திக், அவன் சாது பையன் ஆயிற்றே என்கிறார். எப்படி இருக்கு? என் பப்ளிஷரே என்னை ரவுடி என்று ஒத்துக் கொள்கிறார். ஏதோ கோபத்தில் ஏதாவது உளறியிருப்பேன், அதெல்லாம் ரவுடித்தனமா? நான் செய்யும் ரவுடித்தனமெல்லாம் நம் வடிவேலு சேஷ்டை மாதிரிதான். எல்லோரும்இப்போது என்னை தாத்தா என்று சொல்லும்போதுதான் பேஜாராக இருக்கிறது. சரி, கமலே தாத்தா (விக்ரம்) ஆகி விட்ட பிறகு நமக்கென்ன என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.