அன்புள்ள சாரு,
வணக்கம்.
அந்தி மழை மின் இதழில் வரும் தங்கள் கேள்வி பதில் (6) இன்று படித்தேன்.
சிறுத் தொண்டரும் அவரது மனைவியும் தங்கள் பிள்ளையை இறைவனுக்கு உணவாகப் படைக்கச்செய்த ஏற்பாடுகள் பற்றிய புராணச் செய்யுளுடன் நீங்கள் எழுதியிருந்த விதம் என் கண்களில் நீர் வரச் செய்தது. அதுவும் சக எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி அவர்களைப் பாராட்டி எழுதிய தங்களின் பண்பு நன்று.
ஒரு வேண்டுகோள்.
இது போன்ற தமிழ் இலக்கியச் சுவைகளை முடிந்தபோது எழுதுங்கள்.
நன்றி.
அன்புடன்,
மு. மனோகரன்