ஒரு சந்தேகம்…

பூலோகத்தில் சொர்க்கத்தைப் பார்க்க வேண்டுமானால் தாய்லாந்து செல்லுங்கள்.  உடனே பாங்காக், பட்டாயா என்று தப்பு தப்பாக நினைக்காதீர்கள்.  நான் சொல்வது தென் தாய்லாந்தில் உள்ள யாவ் நாய் என்ற இடம்.  அது ஒரு தீவு.  அந்தத் தீவைச் சுற்றிலும் குட்டி குட்டியாக ஆள் இல்லாத பல தீவுகள் உள்ளன.  ஹாலிவுட் சினிமாக்களில் வரும்.  அப்படி ஒரு தீவுக்கு ஒரு படகுக்காரப் பெண்ணின் உதவியுடன் நானும் அராத்துவும் கருப்பசாமியும் போனோம்.  கடலில் நின்றால் உடம்பெல்லாம் தெரிகிறது.  உள்ளே உள்ள வண்ண மீன்களும் தெரிகிறது.  தரை தெரிகிறது.  தண்ணீர் வெளிர் பச்சை நிறம்.  அங்கே ஒரு ஜோடி கடலில் நின்று கலவி செய்து கொண்டிருந்ததைக் கண்டு வேறொரு தீவுக்குப் படகைச் செலுத்தினாள் படகோட்டி.

அந்தச் சம்பவம் இன்று இந்தச் செய்தியைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது.  இந்த செய்தியை அனுப்பி இருப்பது ஒரு கல்லூரி மாணவி.  இப்போதெல்லாம் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் அதகளம் செய்கிறார்கள்.  கடைசியில் பெண் சுதந்திரம் வந்தே விட்டது.   வாழ்க.  இதுவரை உங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

செய்தி:

http://m.indiatoday.in/story/sex-ocean-beach-couple-genitals-stuck-detached-hospital-italy-italian/1/396437.html

இனிமேல் நீங்களும் கடலில் எச்சரிக்கையாக இருங்கள்.  இப்போது எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.  நம் ஊரில் கள்ளக் காதல் அதிகம்.  ஆக, கடலில் மாட்டிக் கொண்ட ஜோடி கள்ளக் காதல் ஜோடியாக இருந்தால் என்ன செய்வார்கள்?

 

 

Comments are closed.