விவாதம்

அந்திமழையில் நான் எழுதியிருந்தது பற்றி மனுஷ்ய புத்திரன் எழுப்பியுள்ள கேள்விகள் மிகவும் முக்கியமானவை.  இப்போது அவர் எழுதிய அந்நிய நிலத்தின் பெண்ணைப் படித்துக் கொண்டிருப்பதால் பதில் எழுத நேரம் இல்லை.  முடித்ததும் எழுதுவேன்.

Manushya Puthiran:

பிராமணர்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை என்று ஒரு தவறான கருத்து வேறு சமூகத்தில் நிலவுகிறது. கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களின் நிலை வயலில் நின்று வேலை பார்க்கும் குடியானவர்களின் நிலையை விட மோசமானது. நாள் முழுவதும் அக்கினிக்கு (தீபாராதனை) அருகிலேயே நின்று அவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. ஏழு எட்டு மணி நேரம் அவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட வெளியே போக முடியாமல் அவஸ்தைப் படுகின்றனர். போனால் விக்ரகங்களின் மீது உள்ள விலை மதிக்க முடியாத ஆபரணங்கள் திருடு போய் விடும். இதேபோல் சவுண்டிப் பிராமணர்களின் நிலையும் மிகவும் துயரமானது- சாரு நிவேதிதா

அதைவிட கொடுமை இரண்டு இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு ஐ,டி நிறுவங்களில் எனது சில பிராமண நண்பர்கள் படும் பாடு. அது மலம் அள்ளும் தலித்துகளின் வேலையை விட கடினமானது. இதையெல்லாம் தட்டிக் கேட்க சாருவைவிடடால் வேறு யார் இருக்கிறார்கள்? பாவ்ம் பத்ரி. தனது எதிரிகளைவிட நண்பர்களைக் கண்டு இப்போது பயப்பட ஆரம்பித்திருப்பார்.

தமிழை வளர்த்ததாக திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சொல்லித் திரிந்தாலும் அவர்களுடைய ஆட்சியில் தான் தமிழ் அழிந்தது. கடந்த முப்பது ஆண்டுகளில் மெல்ல மெல்ல தமிழ் பேச்சு மொழி ஆனதற்கு திராவிடக் கட்சிகளே காரணம். மாறாக, பிராமணர்கள் இதுவரை தமிழை வளர்த்தே வந்திருக்கின்றனர். உ.வே.சாமிநாதைய்யர் இல்லாவிட்டால் இன்று சங்கத் தமிழ் இலக்கியமே கிடைத்திருக்காது. தமிழ் வேதம் என்று கருதப்படும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆழ்வார்கள் நமக்கு அளித்த சொத்து. அவர்களைப் போல் தமிழ் வளர்த்தவர்கள் யார்? இன்றளவும் பெருமாள் கோவில்களில் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிப் பாடித்தான் தமிழ் வளர்க்கிறார்கள் பிராமணர்கள். மேடைகளில் தமிழ் தமிழ் என்று வாய் கிழியக் கத்தும் திராவிடக் கட்சிகளின் அரசியல்வாதிகள் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதோடு மட்டும் அல்லாமல் தமிழ் இன்று பேச்சு மொழியாகி விட்டதற்கும் அவர்களே காரணம். – சாரு நிவேதிதா.

சமஸ்கிருத கலப்பால் அழிந்த தமிழை மீட்டதில் திராவிட இயக்கதின் பங்கை சாரு மறுப்பது அவர் தன்னைத்தானே மறுப்பதற்க்கு சமம். தமிழ் அடைந்த நவீனத்துவத்த்தில் திராவிட இயக்க அரசியலுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. திராவிட இயக்கம் இங்கு எழுச்சி பெறுவதற்கு முன்பு எழுதபட்ட மணிப்பிரவாள நடை என்பது தமிழைக் கொலைச் செய்த ஒரு காலத்தின் விளைவு. அதில் பிராமணர்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா? ஒரு சமூகத்தில் ஒரு மொழி எப்படிஅழிகிறது, எப்படி வளர்ச்சி பெறுகிறது என்பது மிகப்பெரிய அறிவியல். பிராமணர்கள்தான் தமிழைக் காத்தார்கள் என்று குன்ஸாக அடித்துவிட்டால் எப்படி? பிராமணர்களுக்கு மட்டுமல்ல, தமிழை வளர்த்தத்தில் சாரு போன்ற நாய்க்கர்களுக்கும் முக்கிய பங்குண்டு. என்னைப் போன்ற மிலேச்சர்களுக்கும் ஒரு சிறிய பாத்திரமுண்டு.

Charu rocks!

http://www.bestessaysample.com/

Comments are closed.