ஒரு சிறிய ஐரோப்பியப் பயணம்

வழக்கமாக இந்த நேரத்தில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப் பயிற்சி முடித்து விட்டு மஹாமுத்ராவில் காஃபி குடித்துக் கொண்டிருப்பேன்.  அல்லது, அதையும் முடித்து விட்டு பாபா கோவிலின் வெளியே நின்று கொண்டிருப்பேன்.  தேகத்தில் வியர்வை ஆறாய்ப் பெருகி ஊற்றிக் கொண்டிருக்கும் என்பதால் மற்றவர்களுக்குத் தொந்தரவாக உள்ளே செல்வதில்லை.  நேற்று இரவு ஒரு சம்பவம் நடந்தது.  தினமணி தொடருக்கு எழுதுவதற்காக ஒரு தமிழ் நாவலைப் படிக்க எடுத்தேன்.  முடித்த போது வெள்ளி முளைத்து விட்டது.  இப்படிப் படித்து பல காலம் ஆகிறது.  ராணுவ ஒழுங்குடன் இரவு பத்தரைக்கெல்லாம் உறங்கச் சென்று விடுவேன்.  நேற்று அது நடக்கவில்லை.  என் உடல்நலனுக்கு இது ஆகாது.  ஆனாலும் ஒருநாள் இறைசக்தியிடம் பாரத்தைப் போட்டு விட்டு வாசித்தேன். இடையில் புத்தகத்தை வைக்க முடியவில்லை.  1952-இல் வெளிவந்த நாவல்.

விஷயத்துக்கு வருகிறேன்.  ஒரு நண்பர் விமானச் செலவை ஏற்றுக் கொண்டிருப்பதால் மே மாதத் துவக்கத்தில் ஒரு வார காலம் ஐரோப்பா செல்கிறேன்.   தங்குதல், ஊர் சுற்றல், உணவு போன்ற செலவுகள் தான் அதிகம்.  விமானக் கட்டணம் குறைவுதான்.  எனவே மீண்டும் உண்டியல் குலுக்குகிறேன்.  முடிந்தவர்கள் என் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம்.  முடியாதவர்கள் இதைப் பொருட்படுத்த வேண்டாம்.  தூற்ற நினைப்பவர்கள் அந்த வேலையை இனிதே செய்யலாம்.  என் மகிழ்ச்சிக்காக எதையுமே நான் செய்வதில்லை.  எல்லாமே என் எழுத்துக்கான கச்சாப் பொருள்தான்.  சிறிது உணர்ச்சிவசப்பட்டதால் தினமணி தொடர் பற்றிய எதிர்வினைகளுக்குச் சற்று காரமாக பதில் எழுதி விட்டேன்.  யோசிக்கும் போது நான் எழுதியது என்னுடைய முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.  இன்னும் நான் சமநிலை அடைய வேண்டும்.  எழுத்து எனக்கு தவம்.  அதைப் புரிந்து கொண்ட சில நல்ல ஆத்மாக்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்காகவே திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அவர்களுக்காகவே இன்னும் எழுத வேண்டும், இன்னும் எழுத வேண்டும் என்ற வெறி பிறக்கிறது. அப்படி ஒரு நண்பரின் கடிதம் இது:

மதிற்பிற்குரிய சாரு அவர்களுக்கு,
தங்களின் மழையை பற்றிய ஒப்பீட்டைக் கண்டு மனம் வருந்தினேன்.  ஒரு தன்னலமற்ற அர்ப்பணிப்பைப் பாராட்டாவிட்டாலும் தூற்றாமலிருக்கலாம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் எத்தனை பேர் உலவுகிறார்கள் என்று நினைத்தால் மலைப்பே மேலிடுகிறது.  இந்த சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பு கடுகளவும் இல்லை என்பது யார் சொல்லியும் தெரிய வேண்டியது இல்லை.  எனக்கிருக்கும் கவலையெல்லாம்  இந்த த்வேஷிகள் உங்களை இத்தனை மன உளைச்சலுக்குள்ளாக்கி  உடல் நலக்குறைவை ஏற்படுதிவிடுவார்களோ  என்பதுதான்!  உங்கள் மூலம் இந்த நாசமாய்ப்போன தமிழ் சமூகம் கற்க வேண்டியதும்  கடைத்தேற வேண்டியதும் இன்னும் அநேகம் உள்ளது.  கிளிஷே வான எழுத்துக்களால் நோய் வாய்ப்பட்டிருக்கும் நாங்கள் உங்களைபோன்ற வெகு சிலர்களின் படைப்புக்களாலேயே இன்னும் ஸ்வாசிகிறோம் .  உங்களின் எழுத்தைப் படிக்காமல் அவர்களாலும் இருக்க இயலாது என்பதும் தாங்கள் அறிந்ததே.  எனவே இது ஒரு வித மன நோய் அன்றி வேறில்லை. உங்களை இந்த சமூகம் உங்கள் வாழ்நாளிலேயே முழுவதுமாய் அறிந்து போற்றாதா என்று விரும்புவுகளில் நானும் ஒருவன்.  சற்றும் சமரசம் செய்யா தங்கள் எழுத்து மற்றும் தவறு என்று தெரிந்தால் உடனே திருத்தி அதற்கு மன்னிப்பும் வேண்டும் தங்களின் நற்பண்பு கற்றுத்தேர்ந்த அறிஞர்களிடம் நான் காணாதது. எனவே மூடர்களை ஒதுக்கி தங்களின் மதிப்பிடற்கரிய பணியைத் தொடர வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தங்களின் நலம் வேண்டும்,
ஜெகன்

 

என் வங்கிக் கணக்கு விபரங்கள்:

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI A/c No. 602601 505045

Branch: T. Nagar, Chennai

A/c holder’s  Name: K. ARIVAZHAGAN

IFSC code ICIC0006026

MICR Code: 600229010

Comments are closed.