ஜனவரி 9

யாரையும் வேலை நாளில் வறுத்து எடுக்க இனியும் விருப்பம் இல்லை.  சாவகாசமாக சனிக்கிழமையே வரலாம்.  ஜனவரி ஒன்பது அன்று என்னுடைய பத்துப் பனிரண்டு புத்தகங்கள் வெளியாகும்.  வாசகர் வட்ட நண்பர்களின் ஆறு ஏழு புத்தகங்கள் வெளியாகும். சென்ற ஆண்டு தருண் தேஜ்பாலைப் போல் இந்த ஆண்டு மனுஷ்ய புத்திரனை அழைக்கலாம் என்று இருக்கிறேன்.  நேரில் போய் தான் அழைக்க வேண்டும்.    நட்சத்திரப் பேச்சாளர் என்பதால் இப்போதே ‘புக்’ பண்ணி விட வேண்டும் இல்லையா? அரங்கம் பற்றிய விபரம் இப்போதைக்கு சஸ்பென்ஸ்.  காமராஜர் அரங்கம் கிடைக்கவில்லை.  நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களிலும் சனி ஞாயிறுகளில் அங்கே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.  ஒரு ஆண்டுக்கு முன்பே முன்பதிவு செய்வார்களாம்.  நான் ஆறு மாதம் முன்னால் கேட்டேன். வெள்ளிக்கிழமை கிடைத்தது.  உங்களைத் தொந்தரவு செய்ய விருப்பம் இல்லாததால் வேறு அரங்கம்.  அந்த அரங்கத்திலும் 1200 பேர் கொள்ளளவு.  இடுக்கு முடுக்கில் இல்லாமல் பிரதானமான இடம்.

காத்திருங்கள்…