மதுரை புத்தக விழா

மதுரை புத்தக விழாவில் கலந்து கொள்கிறேன்.  வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மதுரையில் இருப்பேன்.  அதாவது, 4, 5 செப்டம்பர் தேதிகளில்.  என்னைச் சந்திக்க வரும் நண்பர்கள்/அன்பர்கள் அப்துல் கலாம் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்கவும்.  கலாம் பற்றி நான் சொல்ல வேண்டியதையெல்லாம் உயிர்மையில் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.  செப்டம்பர் முதல் தேதி வரும் உயிர்மையில் அந்தக் கட்டுரை வரலாம்.  உங்களுக்கு அதில் ஏதேனும் மறுப்பு இருந்தால் உயிர்மைக்கு எழுதிப் போடவும்.  விவாதம் செய்வதற்கும் பேசுவதற்கும் வேறு பல முக்கியமான விஷயங்கள் உள்ளன.  யாரும் மூணு ரவுண்டுக்கு மேல் போட்டு விட்டு வந்து உரையாட வேண்டாம்.  இரண்டு ரவுண்டு என்றால் நலம்.  குடிக்காமலேயே வந்தால் உத்தமம்.  ஆனால் யாரும் நான் தங்கியிருக்கும் அறையில் புகைப் பிடிக்க வேண்டாம்.  புகைப் பிடிக்க வேண்டுமானால் வெளியே சென்று பிடித்து விட்டு வரலாம்.

மதுரை புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 7 வரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிடைக்கும்.

கிழக்கு அரங்கு எண் – 192, 193
உயிர்மை அரங்கு எண் – 218, 219