ஜனவரி 7, அடியேனும் ஜெயமோகனும்…

வருகின்ற சனிக்கிழமை 7-ஆம் தேதி மாலை தி.நகர் சர் பிட்டி தியாகராயா அரங்கில் அடியேனும் ஜெயமோகனும் மனுஷ்ய புத்திரனும் அராத்துவின் புதிய நூல்களைப் பற்றிப் பேச இருக்கிறோம். ஆமாம், ஒரே மேடையில்தான். இதுவரை நிகழ்ந்திராத நிகழ்வு. இனிமேலும் நிகழ சாத்தியமில்லை. மனுஷ்ய புத்திரனின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் எஸ்.ரா. இரவு எட்டேகாலுக்குப் பேசத் துவங்கி மைக்கை ஒன்பதே முக்காலுக்கு என்னிடம் கொடுத்தார். அதற்குள் முக்கால்வாசிக் கூட்டம் போய் விட்டது. மீதிப் பேருக்கு செம பசி. 64 வயதிலும் கேணப் பயலாகவே இருக்கிறேன். அது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் இங்கே நடக்காது. ஜெயமோகன் ஜனநாயகத் தன்மை கொண்டவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவசியம் வந்து விடுங்கள்…