பொலிக! பொலிக!

நாலைந்து தினங்களுக்கு முன்பாகவே எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நேரம் இல்லை. தினமலரில் பொலிக பொலிக என்ற தலைப்பில் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக எழுதிக் கொண்டிருக்கிறார் பா. ராகவன். அவர் கல்கியில் பணி புரிந்து கொண்டிருந்த காலத்திலிருந்து என் நண்பர். 25 ஆண்டுகள் இருக்கும். அந்தத் தொடரில் அவரது மொழி நடை பிரமாதமாக இருக்கிறது. (பொதுவாக அவருடைய நடை எனக்கு அந்நியமாக இருக்கும்.) மேலும் மிக நீண்ட கால ஆய்வுகளைச் செய்திருந்தால்தான் இத்தனைத் துல்லியமான வரலாற்றை எழுத முடியும். ஒவ்வொரு வார்த்தையும் என் ஆன்மாவில் போய் உட்கார்ந்து கொள்கிறது என்று ராகவனுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினேன். தினந்தோறும் தினமலரில் பொலிக பொலிக என்ற தலைப்பில் 108 தினங்களுக்கு வரும் இந்தத் தொடர். இப்போது ஐந்தாறு அத்தியாயங்கள் போய் விட்டன.