விஜய் ரசிகரிடமிருந்து மிரட்டல்

மெர்சல் படம் பற்றி பின்வரும் வார்த்தைகளை ட்விட்டரில் இன்று காலை பதிவு செய்திருந்தேன்.

”வெற்றி – விஜய் – ஹீரோ டேனியல் – எஸ்.ஜே. சூர்யா – வில்லன் இந்தக் காலத்திலுமா இப்படி? இன்னும் நீங்க திருந்தவே மாட்டீங்களா?”

மேற்கண்ட குறிப்புக்கு வந்த மிரட்டல் கடிதம் கீழே:

 

mersal vijay <61mersalvijay@gmail.com>

1:37 PM (2 hours ago)

to me
sir if u give any negative reviews about vijay starrer mersal movie…U WILL FACE SOME SERIOUS *****. i know ur home address…where u going walking for daily…
so please stay away from such incidents….
இந்தக் கடிதம் எழுதியவரை சைபர் க்ரைம் மூலம் கண்டு பிடித்து விடலாம்.  ஆனால் மெர்சல் விமர்சனம் எழுதினால் இன்னும் பெரிய மிரட்டல் எல்லாம் வரும்.  கொலை கூட செய்வார்கள்.  விஜய் ரசிகர்களே, உங்களால் எனக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் விஜய்க்குத்தான் தீராப் பழி ஏற்படும்.  தன்னுடைய ரசிகர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல் வளர்த்து வைத்திருக்கிறார் விஜய்.  இந்த மிரட்டலுக்கு விஜய் பதில் சொல்ல வேண்டும்.
மேலும், எந்த விஜய் ரசிகராலும் என் உயிர் போனாலோ நான் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டாலோ அதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்பட மாட்டேன்.  எனக்கு மரணம் உங்கள் மூலம் தான் வரும் என்றால் வரட்டும்.  எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்.  நான் பயப்படுவது என் கடவுளுக்கு மட்டும்தான்.  என் உயிருக்கு பயந்து மெர்சலைப் பற்றி விமர்சிக்காமல் இருந்தால் ஒரு தும்மல் வந்து கூட சாவேன்.  சாவுக்குப் பயந்தவனா எழுத்தாளன்?  என் வீட்டுக்கு வா தம்பி.  நான் தினந்தோறும் போகும் நாகேஸ்வர ராவ் பார்க்குக்கும் வா.  நாட்டில் போலீஸ் இருக்கிறது; கோர்ட் இருக்கிறது; கடவுளும் இருக்கிறார்.
ஒளிந்து கொண்டு எனக்கு மிரட்டல் விடும் விஜய் ரசிகரே, உங்கள் உண்மைப் பெயரையும் உங்கள் விலாசத்தையும் தருவீரா?  தராவிட்டாலும் பரவாயில்லை, சைபர் க்ரைமில் கண்டு பிடித்து விடுவார்கள்.