அவந்திகாவுக்கும் எனக்கும் தங்கள் வீட்டில் இடம் கொடுத்துப் பராமரிக்க முன்வந்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றி. நன்றி என்ற உணர்வை நெகிழ்வான முறையில் வேறு எந்த வார்த்தைகளால் சொல்வது என்று தெரியவில்லை. இனிமேலும் ட்ரில்லிங் போட்டால் நேராக கமிஷனரிடம் போய்த்தான் புகார் கொடுப்பேன் என்கிறாள் அவந்திகா. வீட்டுக்கு வந்து விட்டோம்.
இன்னொரு விஷயம். சமீபத்தில் ஒரு கடையில் பூனைகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த ஒருவர் எத்தனை பூனை என்றார். அப்படிக் கேட்டால் அவருக்குப் பூனைகளின் உலகம் தெரிந்திருக்கிறது என்று அர்த்தம். ஏனென்றால் யாரும் ஒரு பூனைக்கு சாப்பாடு வாங்க மாட்டார்கள். பூனைகள் தனியாக வாழ்பவை அல்ல. வீட்டில் வளர்க்கும் பெர்ஷியன் பூனை மட்டும் விதிவிலக்கு. நான் பத்து பூனை என்றேன். அவர் நான் நூறு பூனை என்றார் சிரித்தபடி. கபாலி கோவிலில் 25 பூனையாம். மற்ற 75 கோவிலைச் சுற்றி வெளியே.
என்னிடமும் சிஸ்ஸியும் கெய்ரோவும் மட்டும்தான் இருந்தன. இப்போது கெய்ரோ போனதும் ஒன்று இரண்டு மூன்று என பத்து ஆகி விட்டது. என்னுடைய நண்பர் ஒருவரும் என்னோடு சேர்ந்து பூனைக்கான உணவுச் செலவை ஏற்கிறார். ஆனால் அவரை மட்டுமே சிரமப்படுத்த தயக்கம். அதனால் முடிந்தவர்கள் கீழ்க்கண்ட பூனை உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடிந்தால் மிகுந்த உதவியாக இருக்கும். என் முகவரி தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com
Whiskas adult cat food Tuna flavor or any other ocean food flavor. No Chicken flavor
Whiskas kitten cat food tuna flavor or any other ocean food flavor. No Chicken flavor
இங்கே சோத்துக்கே வழியைக் காணும்; பூனைக்கு வேற பணம் அனுப்பணுமா என்று கேட்பவர்கள் இதிலிருந்தெல்லாம் ஒதுங்கி நிற்கலாம். நான் அப்படிப்பட்டவர்களிடம் உதவி கேட்கவில்லை. இப்படி நக்கல் செய்பவர்கள் அனைவருமே சொத்துக்கு வழி இல்லாதவர்கள் அல்ல. கிரிக்கெட் மேட்சுக்கு பத்தாயிரம் செலவு செய்பவர்கள். ஆனால் மற்றவர்கள் எனக்கு உதவுவதைத் தடுக்கும் இவர்களுக்கு போட்டுக் கொள்ள உடையும் உண்ண உணவும் கிடைக்காது என்று சபிக்கிறார் திருவள்ளுவர்.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூம்
உண்பதூம் இன்றிக் கெடும்
அர்த்தம் சொல்ல வேண்டுமா? பிறருக்கு உதவி செய்பவர்களைத் தடுப்பவர்களுக்கு உணவும் உடையும் கூடக் கிடைக்காது.
ஏன் இத்தனைக் காட்டம் என்றால், பார்க்கில் ஒருவன் என்னிடம் நேரிலேயே சொன்னான். ”ரீடர்ஸ் கிட்ட காசு வாங்கி பூனைக்குப் போட்றியா?” அப்படிக் கேட்ட அவனை நான் அறைய நேர்ந்ததைப் பற்றி எழுதியிருக்கிறேன். நானாவது அறைந்தேன். வள்ளுவர் சாபமே விட்டு விட்டார். உனக்கு சோறும் கிடைக்காது; உடுத்திக் கொள்ள ஆடையும் கிடைக்காது என்று. அப்படியென்றால் என்ன அர்த்தம்? யாருக்காவது உடுத்த ஆடையில்லாமல் போகுமா? ஆடையில்லாமல் திரிவது யார்? பைத்தியமாகப் போவாய் என்று பொருள். எனவே என்னை நக்கல் செய்பவர்களுக்கு வள்ளுவர் வாக்குதான் நடக்கும். மற்றபடி நாம் அனைவரும் அறம் வழிச் சென்று பல்லுயிர் ஓம்புவோம். உலகம் தழைக்கும். அறம் பெருகும்.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai