குறுநாவல்கள் குறித்த ஓர் உரையாடல்

வரும் ஞாயிறு மாலை இந்திய நேரம் 3.30 மணி சிங்கப்பூர் நேரம் மாலை 6 மணிக்கு குறுநாவல்கள் குறித்து ஒரு கலந்துரையாடலை சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்திருக்கிறது. ஆர்வம் உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். சில ஆலோசனைகள்: நான் ஒரு குறுநாவல் படித்தேன் சாரு என்று ஆரம்பித்து ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு அந்தக் குறுநாவலை எனக்கு விளக்கக் கூடாது. அது ஒன்றுதான் நிபந்தனை. மற்றபடி அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறேன்.