மனு ஸ்மிருதி: ஒரு சிறிய விளக்கம்

இப்போதைய என்னுடைய நேர நெருக்கடியில் மனு ஸ்மிருதியில் நான் கை வைத்திருக்கக் கூடாது. வைத்தாயிற்று.  இனி மீள முடியாது.  என் நேற்றைய பதிவுக்கு செல்வகுமாரின் எதிர்வினை கீழே:

மனுதர்மம் புழக்கத்தில் மறைந்துவிட்ட பழைய சமாச்சாரம் என்றுதான் நம்பிவந்தேன். ஆனால், அதன் நெருப்பை பத்திரமாகக் காப்பாற்றி வருபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பொது சமூகத்தில் மிக நல்லவர்கள் என்று அறியப்படுபவர்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் எகிப்திய பிரமிடுகளில் இருக்கும் மம்மியை எழுப்புவது போல மனுவை எழுப்பிவிடுவார்கள்.

மனுதர்மம் எல்லா மனிதர்களையும் கீழ்மைப்படுத்துகிறது. அது கேவலமாக சித்தரிக்கும் பலரையும் மட்டுமல்ல, அவர்களை விட நீ உயர்ந்தவன் என கற்பிக்கும் மனிதர்களையும் சாத்தானின் பிள்ளைகளாக ஆக்குகிறது.

சக மனிதனுக்குக் கெடுதி நினை என சொல்லித் தருவது, உனக்கு நீயே சவக் குழியைத் தோண்டிக்கொள் என ஊக்கப் படுத்துவதுதான்.

அதே சமயம், மக்களாட்சியின் நூற்றாண்டு நிறைவுறும் வரை இது மாதிரி பழைய, ஜனநாயகத்திற்கு ஒவ்வாத, வெளிப்படையாக இந்திய அரசியல் சாசனத்தை எதிர்க்கும் சட்டங்களை கொண்ட, மதவாதப் புத்தகங்களை தடை செய்யாத அரசின் கையாலாகாத்தனம்…

அரசியல் சாசனப்படி எந்த ஒருவனும் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை உண்டென்றால், அனைத்து மத நூல்களையும் அரசியல் சட்டத்தை மீறாத வகையில் எடிட் செய்து (கிட்டதட்ட காயடித்து) மறு வெளியீடு கொண்டுவந்து புழக்கத்தில் வைக்கலாம். அல்லது மிக எளிமையாக மதங்களை தடை செய்யும் சட்டத்தை இயற்றலாம்.

இந்தியா அதன் மனிதவளம் + திறமையாளர்கள் மூலம் உலகில் அடைந்திருக்க வேண்டிய உயரம் மிக அதிகம். அதை நண்டுகளை போல அதன் மனிதர்களே பின்னுக்கிழுக்கும் ஒரே குறைபாடு, மதங்களும் ஜாதிகளும்தான்.

மதத்திற்கு வெளியில், ஜாதிக்கு வெளியில் நாம் செயல்பட வேண்டிய காலம். உண்மையில் அந்த காலம் கடந்து மிக தாமதமும் ஆகிவிட்டது. இன்னும் இந்தியர்கள் காத்திருப்பது கேவலம்.

***

மனு ஸ்மிருதிக்கு ஆதரவாகப் பேசும் இந்துத்துவர்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை.  அப்படிப் பேசுவது இந்து மதத்தை அழித்து விடும்.  அப்படி ஒரு மதம் அழிந்து போவது பற்றியும் எனக்குக் கவலை இல்லை.  இந்தப் பல கோடி ஜன சமுத்திரத்தில் பல கோடி நட்சத்திரக் கூட்டத்தில் நான் ஒரு தூசு.  நான் இப்படியான சாதி மதங்களைக் கடந்தவன்.  ஆனால் எனக்கு வரலாறு தெரியும்.  ஹிட்லர் இப்படித்தான் வளர்ந்தான்.  நாஸி கோட்பாடு இப்படித்தான் வளர்ந்தது.  இப்போது ஹிட்லர் என்றாலே ஜெர்மானியர்கள் அவமானத்தினால் கூனிக் குறுகிப் போகிறார்கள்.   

உலக மதங்களிலேயே இந்த அளவுக்குப் பன்மைத்துவம் கொண்டது இந்து மதம்தான். அதில் இருக்கும் சாதீய ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தனம் போன்ற கசடுகளையும் தாண்டி அந்தப் பன்மைத்துவம் மற்ற மதங்களில் இல்லை.  ஆனால் இப்போதைய இந்துத்துவ மீட்டுருவாக்கம் இந்து மதத்தின் சிறப்பான தன்மையான பன்மைத்துவத்தை அழிக்கிறது.  இதன் முதல் விளைவு என்னவாக இருக்கும் என்றால், இந்து மதம் அழிந்து போகும்.  இந்துத்துவர்கள் இந்து மதத்தைக் காப்பாற்றுவதாக எண்ணி அதைக் குழி தோண்டிப் புதைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  நல்லது.  வரலாற்றின் கதியை யார் தடுக்க முடியும்?  இந்தியாவும் ஆஃப்கானிஸ்தானைப் போல் ஆக வேண்டும் என்பது இந்தியாவின் ஜாதகமாக இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. 

ஆனால் செல்வகுமார் சொல்வது போல் இந்தக் காலத்துக்கு ஒவ்வாத, மனித குலத்துக்கு விரோதமான எல்லாவற்றையும் தடை செய்ய முடியாது.  அது ஆஃபனில் புத்தர் சிலையை உடைத்த தீவிரவாதிகளின் செயலுக்கு ஒப்பானதாகும்.  மனு அவன் காலத்துக்கான சட்டங்களை வகுத்தான்.  இதுகாறும் வரலாறு அதன் அடிப்படையில்தான் இருந்தது.  புத்தர் கொஞ்சம் அந்த வரலாற்றுக்குத் தீயை வைக்கப் பார்த்தார்.  அவரை அவருடைய சீடர்களே ஜப்பானை நோக்கித் தள்ளி விட்டார்கள்.  பௌத்தம் இந்தியாவில் அழிந்ததற்குக் காரணம் சங்கரர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  புத்தரை விரட்டியதில் சங்கரர் செய்தது ரொம்பக் கொஞ்சம்.  பௌத்த பிக்குகளின் ஊழல்தான் அடிப்படைக் காரணம்.  இன்னொன்று, மொழி.  பிக்குகள் மக்களின் மொழியாக இருந்த பாலியை விட்டுவிட்டு மேட்டுக்குடி அறிஞர்களின் மொழியாகிய சம்ஸ்கிருதத்துக்குத் தாவினர்.  அரச உதவிகள் நின்று போயிற்று.  அதற்குக் காரணம், அசோகனின் பேராசை.  கலிங்கத்தை அழித்தான்.  அவன் செத்ததும் கலிங்கம் மௌரிய சாம்ராஜ்யத்தையே காலி பண்ணியது.  மிகப் பெரிய அரசியல், சமூகப் புரட்சியாக எழுந்த பௌத்தம் இந்தியாவில் காணாமல் போனதற்கு அடிப்படைக் காரணம், பிக்குகள்தான்.  மடத்துக்கு மடம் ஒரு பிரிவு ஏற்பட்டது. 

அப்போது பௌத்தத்துக்கு அதன் பிக்குகள் செய்ததை இன்று இந்து மதத்துக்கு இந்துத்துவர்கள் செய்கிறார்கள்.  நல்லதுதான்.  அப்படியும் இந்து மதம் அழியாது.  அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ முளைக்கும், பௌத்தம் ஜப்பானில் பரவியது போல. 

மனு ஸ்மிருதி ஒரு சட்டப் புத்தகம்.  மனித குலத்துக்கே எதிரான சட்டங்கள்தான் அவை.  அவைதான் அப்போது நடைமுறையில் இருந்தன.  ஆனால் அளவு அடிப்படையில் பார்த்தால் அப்படிப்பட்ட மனித குல விரோதமான கருத்துக்கள் வேதங்களிலும் உண்டு, இந்துக்களின் புனித நூலான கீதையிலும் உண்டு.  எல்லா மதங்களின் புனித நூல்களிலும் உண்டு.  இந்த உலகத்திலேயே சமத்துவத்தை மிக அதிக அளவில் பேசும் ஒரே புத்தகமான குறளில் கூட பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் உண்டு.  சிந்தனை உலகில் புரட்சியை உண்டு பண்ணிய சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் ஆகியோர் கூட அடிமைத்தனத்தை ஆதரித்துத்தான் பேசியிருக்கிறார்கள்.  இதனால் அரிஸ்டாட்டிலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கி விடலாமா என்று அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களிடையே ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.  அடிமைகள் மனித உருவில் உள்ள விலங்குகள், அவர்களால் ‘நம்மைப்’ போல் சிந்திக்க இயலாது என்கிறார் அரிஸ்டாட்டில்.  பெண்களைக் குறித்தும் இவ்வாறே பேசுகிறார்.  இதைத்தான் வேறு வார்த்தைகளில் இன்னும் விரிவாகப் பேசுகிறான் மனு.  மனுவைத் தடை செய்தால் இது எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டும்.  அப்படித் தடை செய்தால் மீண்டும் மீண்டும் மனுவின் வாரிசுகளே தோன்றுவார்கள்.  நம்முடைய வரலாறு எப்படி இருந்ததென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  அப்போதுதான் தவறுகளைக் களைந்து கொள்ள முடியும்.  அப்போதுதான் சமத்துவம் பற்றிய சிந்தனை அறிமுகமாகும்.  வரலாற்றின் அவமானச் சின்னங்களாகவாவது அவையெல்லாம் இருந்துதான் ஆக வேண்டும். 

கவித்திறனின் உச்சங்களைத் தொட்ட ஞானசம்பந்தரின் சமண வெறுப்பை நினைத்தும் பார்க்கக் கூசும்.  தேவாரம் மூன்றாம் திருமுறையில் காட்டுமாவது உரித்து என்று பாடலிலிருந்து தொடங்கி பத்து பாடல்களும் ரத்த வெறியில் தோய்ந்தவை.  காரணம், அப்போதைய காலகட்டம்.  இரண்டு சாராருமே ரத்த வெறி பிடித்து அலைந்து கொண்டிருந்தார்கள்.  இரண்டு சாராருமே தாந்த்ரீகத்தில் கரை கண்டவர்களாக இருந்தார்கள்.  அரசன் சமணத்தைச் சேர்ந்தவன்.  தாந்த்ரீகத்தின் மூலமாக மட்டுமே அரசனின் கண்ணைக் கட்ட வேண்டும்.  உடம்பெல்லாம் கோபம் பொங்கப் பொங்கப் பாடுகிறார் ஞானசம்பந்தர்.  கடைசிப் பாடலில் கோபம் உச்சத்துக்குப் போய் பெண்ணகத்து எழிற் சாக்கிய்ப் பேய் அமண் தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே என்கிறார்.  சமணப் பெண்களைக் கற்பழித்துப் போட திருவுள்ளம் செய் என்று அர்த்தம் அல்ல; அந்தக் காலத்தில் கற்பு என்றால், இப்போது சொல்கிறோமே table manners என்று, அம்மாதிரி உயர்குலப் பெண்டிரின் மேட்டிமைக் குணம்தான் என்கிறார்கள் சிலர்.  எப்படி இருந்தாலும் அந்தப் பத்துப் பாடல்களிலும் பொங்கும் ரத்த வெறி பயங்கரம்தான்.  இதன் காரணமாக தேவாரத்தைத் தடை செய்ய முடியுமா என்ன?  இதையெல்லாம் ஒதுக்கி விட்டு நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.  மனுவில் நல்லது கொஞ்சம்தான் இருக்கிறது.   அதைவிடப் பல நூறு மடங்கு நல்லது வள்ளுவனிடம் உள்ளது.  பேசாமல் அந்த ஆள் ’நான் ஒரு பிராமணன்’ என்று பொய்யாகவாவது சொல்லி விட்டுப் போயிருக்கலாம்.   நாடு கொஞ்சம் உருப்பட்டிருக்கும். 

புதுமைப்பித்தனின் நாசகாரக் கும்பல் கதையைப் படித்துப் பாருங்கள்.  இந்து மதத்தின் அழிவுக்குக் காரணம் என்ன என்று அதில் பிரமாதமாகச் சொல்கிறார் பித்தன்.   

https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D

வரும் ஞாயிறு காலை ஆறு மணிக்கு புதுமைப்பித்தன் உரைக்குத் தயாராகுங்கள். 

ஆமாம், சந்தா என்று ஒரு விஷயம் இருக்கிறதே, மறந்து போனீர்களா என்ன?

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai