மன்னித்து விடு மாயா

நீ எங்கும் நிறைந்தவள்

என்பதை மறந்து விட்டு

இந்த ஊருக்கு வந்தேன்

நீ சிந்தனைக்கும் அப்பாற்பட்டவள்

என்பதை மறந்து விட்டு

உன்னைப் பற்றி சிந்தித்து விட்டேன்

நீ வார்த்தைகளுக்குள் அடங்காதவள்

என்பதை மறந்து விட்டு

உன்னைப் பாடி விட்டேன்