வினித்துக்குப் பிறந்த நாள்

குடிக்க மாட்டான், ஆனாலும் ஆறேழு லார்ஜ் போட்ட மாதிரியே கண்கள். எல்லாம் சிந்தனையும் தத்துவமும் தந்த போதை. புகைக்கவும் மாட்டான். பெண்கள்? மூச். ஹலோ சொல்லும் பெண்களிடமும் மிலோராத் பாவிச் தெரியுமா ப. சிங்காரம் தெரியுமா என்று பயமுறுத்தி விரட்டி விடுவான். மூன்று மாதம் பழகிய பெண், உன்னை நெனச்சா பயமா இருக்குடா என்று பிரேக் அப் பண்ணி விட்டது. எங்கள் ஊர்க்காரன். இந்தக் காலத்து இளைஞனிடம் காணும் எந்த அடையாளமும் இல்லாதவன். என் காலத்துக்குப் பிறகு … Read more

ஒண்ணு, ரெண்டு, மூணு…

நேற்று என்னுடைய கவிதைத் தொகுதி ஸ்மாஷன் தாரா நூலின் முன்வெளியீட்டுத் திட்டம் குறித்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டேன்.  அது குறித்து சில விஷயங்களும் எழுதினேன்.  முன்பெல்லாம் 1200 பிரதிகள் போடுவார்கள்.  அதில் 200 மதிப்புரைக்கான இலவசப் பிரதிகள்.  இப்போது போடுவதே 200 தான்.  அதிலும் எனக்கே இந்த நிலை.  ஏகாரத்து மன்னித்து விடுங்கள்.  எல்லோருக்கும் இதே நிலைதான்.  ஜனநாயகம்.  இன்று காலையில் ஸீரோ டிகிரி அலுவலகத்துக்கு ஃபோன் செய்து வித்யாவிடம் முன்பதிவுத் திட்டத்துக்கு யாரும் பணம் அனுப்பினார்களா, … Read more

எழுத்தாளனை சந்தித்தல்

ஒரு நீண்ட நாள் வாசகர்/நண்பர் ஜூனில் சென்னை வருவதாகவும், சந்திக்க விருப்பம் என்றும் வாட்ஸப்பில் தெரிவித்திருந்தார்.  அமெரிக்காவில் வசிக்கிறார்.  இதை வாசித்ததிலிருந்து இது பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  அந்த யோசனைகளையெல்லாம் தொகுத்தால் பல பக்கங்கள் போகும்.  கொஞ்சம் சுருக்கமாக எழுதி விடலாம்.  எழுத்தாளர்களை சந்திப்பது பற்றி சுஜாதா சொன்னது மிகவும் தவறானது.  அவர் அப்படி நினைத்திருந்தால் அவர் ஏன் சுந்தர ராமசாமியை சந்திக்க விரும்பி சு.ரா.விடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்?  சு.ரா. கடைசி வரை சுஜாதாவை சந்திப்பதைத் தவிர்த்து … Read more

அடியேனின் உரை

எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளை நிறப் பறவை என்ற கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவில் அடியேனின் பேச்சு. பதிவு செய்து வெளியிட்ட ஷ்ருதி டிவி கபிலனுக்கும் அவர் குழுவுக்கும் நன்றி.

ஸ்மாஷன் தாரா: முன் வெளியீட்டுத் திட்டம்

ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது மொழி ஒரு உருவமற்ற அரங்கமாக மாறுகிறது. நிழல்களும் பிம்பங்களும் ஒரு புகை நடனமாக மேக உருவுகளின் ஓயாத சலன இசையாக வெளிப்படுகின்றன. காலம் ஒரு நீர்க்கடிகாரமாய் மழையாகவும் ஆவியாகவும் வானத்திற்கும் பூமிக்குமாக பொழிவதும் பறப்பதுமாக சாருவின் கவிதைகளில் இயங்குகிறது. இது வாழ்வின் … Read more