வாழ்க நீ எம்மான்…: அ. மார்க்ஸ் (முகநூலில் எழுதியது)

இரவு மணி பத்து 12.35. மகாகவி பாரதியின் கால வரிசைப்படுத்தப்பட்ட படைப்புகளில் 1908 ஆம் ஆண்டு ஜனவரி நாட்களின் அவரது பதிவுகளைப் பார்த்துக் கொண்டுள்ளேன்.ஏற்கனவே பலமுறை நான் எழுதியுள்ள ஒன்று இங்கே நிரூபணம் ஆவதைக் காண்கிறேன். 1907 இல் இந்தியத் துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒரு எழுச்சி ஏற்பட்டது. பல இளைஞர்கள் அரவிந்தர் முதலான அன்றைய தலைவர்களின் கருத்துக்களால் எழுச்சி பெற்றிருந்தனர். அந்நிய வெள்ளை ஆட்சியை அழித்தொழிக்க அவர்கள் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் … Read more

நஷ்டம் எனக்குத்தான்…

வினித் போன்றவர்களைப் பற்றி விமர்சித்து எழுதுவதால் வினித்துக்கு மனக்கஷ்டம் என்பது போக, இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நான்தான்.  உதாரணமாக, பொள்ளாச்சி மகாலிங்கம் மாதிரி ஒரு கோடீஸ்வரருக்கு என் எழுத்து பிடிக்கிறது, சந்திக்க நினைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  உடனே வினித் பற்றிய கட்டுரைதான் அவருக்கு முன்னே காண்பிக்கப் படும்.  அதைப் படித்த பிறகு மனிதர் என் பக்கம் திரும்பிப் பார்ப்பாரா?  அதனால்தான் சொல்கிறேன், என் நண்பர்கள்தான் எனக்குப் பெரிதும் பிரச்சினையாக இருக்கிறார்கள் என்று.  எழுதாமல் இரேன் என்றால் … Read more

வாழ்விலே ஒரு முறை…

பொதுவாக என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குப் புரியும்.  நான் மனிதர்களை விரும்பவில்லை.  குறிப்பாக இந்தியர்களின் பழக்க வழக்கங்கள் எனக்கு மிகுந்த எரிச்சலைத் தருகின்றன.  இந்தியர்கள் ஒன்றும் நரகத்திலிருந்து வரவில்லைதான்.  ஆனால் இவர்கள் இவர்களின் பெற்றோரினால் இப்படியாகத்தான் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்.  எங்கள் வீட்டுக்கு மேல் வீட்டில் குடியிருப்பவர்கள் பெரும் கோடீஸ்வரர்கள்.  ஆனால் மேல் வீட்டிலிருந்து எங்கள் பால்கனியில் சகலமும் வந்து விழுகிறது.  வாழைப்பழத் தோல், சாக்லெட் காகிதங்கள், கோழி மற்றும் ஆட்டு எலும்புத் துண்டு, தரை பெருக்கும் துடைப்பானிலிருந்து விழும் … Read more

அவனா நீ?

குமரேசன் ஃபோன் செய்தார்.  “பதற்றம் கொள்ளாதீர்கள்.  இந்த வினீத் பிரச்சினையால் உங்கள் வேலை எதுவும் கெட்டு விடக் கூடாது” என்றார்.  ஔரங்கசீப் படிப்பவர்களுக்குத் தெரியும்.  மாத ஆரம்பத்திலேயே பதினைந்து அத்தியாயங்களை அனுப்பி விடுவேன்.  பிறகு அந்த மாதம் பூராவும் படித்துக் கொண்டிருப்பேன்.  ஆனால் இன்று தேதி ஐந்து ஆகி விட்டது.  ஒரே ஒரு அத்தியாயம்தான் அத்தியாயப் பட்டியலில் இருப்பதை நீங்கள் காண முடியும்.  அவ்வளவுதான் அங்கே உள்ளது.  பதினைந்தில் இன்னும் ஒன்று கூட அனுப்பவில்லை.  நாளைக்குள் இரண்டாவது அனுப்ப வேண்டும்.  விழா முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன்.  வினீத் பிரச்சினை குறுக்கிட்டு விட்டது.  அதை … Read more

ஓராண்டுப் பயிற்சி

ஸீரோ டிகிரி பதிப்பகம் மற்றும் தமிழரசி அறக்கட்டளை இணைந்து நடத்திய பரிசளிப்பு விழா நேற்று இனிதே நடந்தது.  இப்படித்தான் மற்றவர்கள் எழுதுவார்கள்.  நான் அப்படிப்பட்ட ஆள் இல்லையே?  அதனால் அந்த இனிய விழாவில் என் நண்பன் செய்த குளறுபடியால் நேர்ந்த பிரச்சினைகளையும் எழுதித்தான் ஆக வேண்டும்.   கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபாய் செலவாகியிருக்கும் என்று நினைக்கிறேன்.  அத்தனை பிரம்மாண்டமான விழா.  அதை சாத்தியப்படுத்திய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.  முக்கியமாக தமிழரசி அறக்கட்டளையின் நிர்வாகிகளும் ஸீரோ டிகிரி பதிப்பக நண்பர்களும்.  அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். மிகச் சிறப்பான இலக்கிய … Read more

எழுதிக் கொண்டே இருக்கலாம்…

ஔரங்கசீப் நாவலுக்காக நூறு புத்தகங்கள் வாங்கியிருப்பேன்.  ஒவ்வொன்றுமே ஆயிரம் ரெண்டாயிரம் இருக்கும்.  இதில் ஒருசில தான் நானே காசு போட்டு வாங்கியது.  மற்றவை வாசகர்கள்/நண்பர்கள் வாங்கிக் கொடுத்தது.  இன்னொரு அம்பதோ நூறோ நூலகங்களில் திரட்டியது.  ஒரு நாவலுக்காக இந்த அளவு படித்தது இதுதான் முதல்.  புத்தகங்கள் மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் ஆகியிருக்கும். நேற்றோடு ஒரு ஐநூறு பக்க நூலைப் படித்து முடித்தேன்.  ஒரே ஒரு தகவலைத்தான் எடுத்துக் கொண்டேன்.  ஆனால் அது ஒரு அதி முக்கியமான … Read more