நெகிழ்ச்சி

ரோஜா முத்தையா நூலகத்திலிருந்து புத்தகம் எடுக்க உதவி கேட்டு எழுதினேன் இல்லையா, எழுதின பத்து மணி நேரத்துக்குள் சுமார் ஐம்பது பேர் தாங்கள் செல்வதாக எழுதினார்கள். ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைந்தேன். இதில் பத்து பேர் மிக நெருங்கிய நண்பர்கள். ஒரு நண்பர் தமிழக அரசில் ஒரு துறையின் தலைவராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். அவர்தான் முதலில் தொடர்பு கொண்டவர் என்பதால் அவரிடமே பொறுப்பைக் கொடுத்தேன். வேலை முடிந்தது. இவ்வளவு அன்புக்கும் என் பிரதி உபகாரம் என் … Read more

இந்த ஊரில் எப்படி வாழ்கிறீர்கள்? – சிறுகதை

ஒரு நிறுவனம் எப்படி உயர்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்து காணாமல் போகிறது என்பதை ஏர்டெல் நிறுவனத்தின் மூலமே அவதானித்து வருகிறேன்.  இண்டர்நெட் என்பது எனக்கு அறிமுகமான நாளிலிருந்தே ஏர்டெல் இணைப்புதான் வைத்திருக்கிறேன்.  சுமார் பதினைந்து ஆண்டுகளாக. சென்னையே வெள்ளத்தில் மிதந்தபோது கூட எனக்கு இண்டர்நெட் இல்லாமல் இருந்ததில்லை.  இண்டர்நெட் இல்லை என்ற பேச்சே பதினைந்து ஆண்டுகளில் இல்லை.  ஆனால் கடந்த ஆறு மாதங்களாக இடி இடித்தால் இண்டர்நெட் வெட்டு, மழை பெய்தால் வெட்டு, புயலடித்தால் தொடர்ந்தாற்போல் மூன்று … Read more

மன்னித்து விடு மாயா

நீ எங்கும் நிறைந்தவள் என்பதை மறந்து விட்டு இந்த ஊருக்கு வந்தேன் நீ சிந்தனைக்கும் அப்பாற்பட்டவள் என்பதை மறந்து விட்டு உன்னைப் பற்றி சிந்தித்து விட்டேன் நீ வார்த்தைகளுக்குள் அடங்காதவள் என்பதை மறந்து விட்டு உன்னைப் பாடி விட்டேன்

ZDP & எழுத்து பிரசுரம்

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்து இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  அதன் தமிழ்ப் பதிப்பு எழுத்து பிரசுரம்.  குழந்தைகளுக்கான இம்ப்ரிண்ட் கமர்கட்.  இந்தியா முழுவதுமாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நல்ல பெயரை ஈட்டியிருக்கிறது.  பல வட இந்திய எழுத்தாளர்கள் ZDP-இன் புத்தகங்களின் தரத்தைப் பற்றி வியந்து பேசியதை நேரில் பார்த்திருக்கிறேன்.  இன்னும் வேகமாகச் செயல்படுங்கள் என்று சொல்லி ZDP நண்பர்களை ஆசீர்வதிக்கிறேன்.  தரத்தில் எப்போதுமே உங்களுடைய இலக்கு அந்தக் காலத்து வாசகர் … Read more

13. ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்

இந்திரா நகரில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்தில் எனக்கு இரண்டு நூல்களை ஸ்கேன் செய்ய வேண்டும்.  கடந்த இரண்டு மாதங்களாக முயற்சி செய்து வருகிறேன்.  முடியாமல் கிடக்கிறது.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் சின்மயா நகரிலிருந்து மைலாப்பூருக்கு வந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, இந்த ரோஜா முத்தையா நூலகம்.  இந்திரா நகரில் இருந்தாலும் கூட சின்மயா நகரிலிருந்து அங்கே போவது எனக்கு சிரமமாக இருந்தது.  ஆனால் இப்போதைய நேர நெருக்கடியில் என்னால் இந்திரா நகர் வரை செல்ல … Read more

12. Aura…

வாசகர்கள் இன்னும் ஒரு மாத காலத்துக்கு க்ஷமிக்க வேண்டும்.  காலை நாலு மணிக்கு எழுந்து முன்பெல்லாம் ஒரு மணி நேரம் தியானம் செய்வேன்.  இப்போது அந்த தியானத்தை விட மேன்மையான ஒரு பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.  நான் இப்படிச் சொல்வதன் பொருள் உங்களுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் என் நாவலை வாசிக்கும்போது தெரியும்.  It’s not a transgressive novel as has always been.  இது வேறு வகையானது.  மும்முரமாக அதில் ஈடுபட்டிருப்பதால் இந்தப் பக்கம் எட்டிப் … Read more