12. இசை பற்றிய குறிப்புகள்

இந்தச் சம்பவம் நடந்தது 1926.  ஒரு பத்து வயதுச் சிறுமி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வருகிறாள்.  அவளை அவளுடைய அம்மா திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலிருந்து ஒரு லாலி பாடச் சொல்கிறாள்.  அம்மாவே பக்கத்தில் அமர்ந்து வீணையை மீட்டுகிறாள்.  சிறுமி பாடுவதை ஓரியண்டல் ரெகார்ட்ஸ் நிறுவனம் ஒலிப்பதிவு செய்து கொள்கிறது.  அதுதான் கீழே வருவது.  அதில் சில அபூர்வமான புகைப்படங்களும் உள்ளன.  சிறுமியின் அம்மாவின் பெயர் மதுரை சண்முகவடிவு.  சிறுமியின் பெயர் சுப்புலட்சுமி. பின்னாளில் உலகப் பிரசித்தி பெற்ற அச்சிறுமியின் … Read more

11. கூழாங்கல் தொடர்கிறது…

(இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன் எண் 9-இல் உள்ள “மீண்டும் ஒருவர்” என்ற பதிவையும், 5ஆம் 3-ஆம் எண்களில் உள்ள கூழாங்கல் கட்டுரைகளையும் படித்து விட்டு இதைத் தொடரவும்.  அவற்றின் தொடர்ச்சிதான் இது.)  அன்புள்ள சாரு அவர்களுக்கு, வணக்கம். உங்களுக்கு நாவலை அனுப்பி வைத்த ஒரு இளம் எழுத்தாளர் பற்றி நீங்கள் எழுதிய இரண்டு பதிவுகளுக்குமான என் கேள்விகளும் சந்தேகங்களும் இவை. இதை எழுத முதலில் தயங்கினாலும் உங்கள் எழுத்தை இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து இணையத்திலும் புத்தகங்களிலும் … Read more

11. இசை பற்றிய சில குறிப்புகள் – பொன்னையா பிள்ளை

இரண்டு தினங்களாக இடைவிடாமல் அமர்ந்து கே. பொன்னையா பிள்ளை இயற்றி 1940-ஆம் ஆண்டு வெளிவந்த “தஞ்சை பெருவுடையான் பேரிசை : தான வர்ணங்களும் கீர்த்தனங்களும், ஸ்வர ஸாஹித்தியங்களுடன்” என்ற அரிய நூலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  நான் இதைப் படித்து எந்தப் பயனும் இல்லை.  இது சங்கீதக் கலைஞர்கள் பயில வேண்டிய நூல்.  ஒவ்வொரு கீர்த்தனத்துக்கும் notations இருக்கின்றன.  ஓதுவா மூர்த்திகள் மரபில் வந்தவர்களும் முத்துஸ்வாமி தீட்சிதரின் மாணவர்களும், தஞ்சை-திருவனந்தபுரம்-மைசூர் முதலிய சமஸ்தான வித்வான்களும், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் … Read more

திருக்கல்யாணம் (தொடர்ச்சி)

ஒரு பிழை இருந்தது. என் குருநாதரைத் தவிர வேறு யாரும் குறிப்பிடவில்லை. ஹெச்சரிககா என்பதில் ரி-யை முழுங்கி விட்டேன். தட்டச்சுப் பிழை. ஆனால் இன்னொரு பிழை முக்கியமானது. குருநாதரோடு கூட வினித்தும் குறிப்பிட்டார். கே.வி.என். என் குருநாதர் கே.வி.என்.னின் சிஷ்யர் வேறு. கே.வி.என்.னை எப்படி மறந்தேன் எனத் தெரியவில்லை. அரியக்குடி, கே.வி.என். இருவருமே ஹெச்சரிககாவில் முழுமை.

10. இசை பற்றிய சில குறிப்புகள்: திருக்கல்யாணம்

காலையிலிருந்து சீதா – ராமனின் திருக்கல்யாண வைபவத்தை விலாவாரியாக எழுதிக் கொண்டிருக்கிறேன். வெறுமனே எழுத முடியாது.  தியாகராஜரின் உத்ஸவ ஸம்பிரதாயக் கீர்த்தனையான ஹெச்சரிககாவை பற்பல இசைக் கலைஞர்களும் பாடியிருப்பதைக் கேட்டேன்.  பாம்பே ஜெயஸ்ரீ, எம்.எஸ். மேலும் சிலரைக் கேட்டு சிறிதும் திருப்தி இல்லை.  அரியக்குடியைக் கேட்கும் போது மட்டுமே கீர்த்தனையிலும் சங்கீதத்திலும் மனம் லயித்தது.  வேறு யாரேனும் அரியக்குடியின் தரத்தில் பாடியிருந்தால் எனக்கு தயவுசெய்து தெரிவியுங்கள்.  (தம்பி வினித், சஞ்சய், டி.எம். கிருஷ்ணா என்று அனுப்பி வைத்து … Read more

10. நகைச்சுவை மறந்த சமூகம்

ஒரு கவர்ச்சி நடிகை உச்சத்தில் இருந்த சமயம்.  பொறுங்கள், எடுத்த எடுப்பில் அந்த நடிகையின் பெயரைத்தான் தட்டச்சு செய்தேன்.  ஆனால் இப்போதெல்லாம் எந்தப் பெயரைப் போட்டாலும் குண்டாந்தடி அடி விழுகிறது என்பதால் மீண்டும் ஆரம்ப இடத்துக்குப் போய் நடிகையின் பெயரை நீக்கி விட்டு, ஒரு கவர்ச்சி நடிகை என்று போட்டேன்.  அந்த அளவுக்கு ஆகியிருக்கிறது நிலைமை.  சரி, ஆரம்பிக்கிறேன்.  ஒரு கவர்ச்சி நடிகை உச்சத்தில் இருந்த சமயம்.  அவரைச் சந்திக்க நேர்ந்தது.  பேசிக் கொண்டிருந்து விட்டு அன்றைய … Read more