8. மறுமை நோக்கியதன்று, வறுமை நோக்கியது…

சில மாதங்களுக்கு முன்பு கோவிட் தொற்று உச்சத்தில் இருந்தபோது ஒரு அமெரிக்க வாழ் வாசக நண்பரிடமிருந்து ஒரு செய்தி வந்தது.  எங்கள் நகரத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில், வர இருக்கும் ஒரு தமிழ் விசேஷ நாளை ஒட்டி உரையாற்ற முடியுமா?  அவர் என்னுடைய இருபது ஆண்டுக் கால நண்பர்.  முடியும் என்றேன். இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர். சரி, மகிழ்ச்சி, அவர்களைக் கேட்டு அடுத்து தொடர்பு கொள்கிறேன் என்றார்.  சரி என்று சொல்லியிருப்பேன், அமெரிக்கத் தூதரகத்தில் இரண்டு … Read more

சி.சு. செல்லப்பா – சாரு நிவேதிதா உரை

சி.சு. செல்லப்பா பற்றிய என் உரை 31.5.2020 அன்று நடந்தது. காலை ஆறு மணி. இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடம் பேச்சு. நீங்கள் இதை முழுமையாக ஒரே மூச்சில் கேட்க முடியாமல் போனால் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கலாம். செல்லப்பாவின் எழுத்தில் ஒரு பதினைந்து ஆண்டு காலம் செலவிட்டிருக்கிறேன். இதை ஸூம் சந்திப்பின் மூலம் சாத்தியப்படுத்தினோம்.  உலகின் பல மூலைகளிலிருந்து வாசகர்கள் கேட்டனர்.  சதீஷ்வர் ஒருங்கிணைத்துக் கொடுத்தார். ஸூமின் பாஸ்வேர்ட் போன்ற விவரங்களைக் கொண்டுதான் கூட்டத்தில் கலந்து … Read more

9. இசை பற்றிய சில குறிப்புகள்

இந்தத் தொடரின் எட்டாவது அத்தியாயம் டிசம்பர் எட்டாம் தேதி (2020) வெளியாகி இருக்கிறது.  சில வாசகர்கள் இந்தத் தொடரை ஆழமாக வாசிக்கிறார்கள் என்று தெரிகிறது.  அவர்கள் மீண்டும் ஒருமுறை தொடரை வாசித்து விட்டு இதைத் தொடரலாம்.  அல்லது, இதைத் தனியாகவும் வாசிக்கலாம்.  இந்த அத்தியாயத்தில் அவ்வளவு ஆழமாகச் செல்லப் போவதில்லை.  வேறொரு பணியில் இருப்பதால்.  பா.ராகவன் சமீபத்தில் எனக்கு ஒரு ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரை அறிமுகம் செய்தார்.   இசைக்கும் எனக்குமான தீவிரமான சம்பந்தம் கடந்த இருபது ஆண்டுகளாக … Read more

பாகவதம்

இப்போது பாகவதம் படித்துக் கொண்டிருக்கிறேன். கடலங்குடி நடேச சாஸ்திரிகள் மொழிபெயர்த்தது. 1935-இல் வெளியானது. மூன்று ரூபாய் எட்டணா விலை. இதை முடித்து விட்டு, அல்லது, இதோடு கூட சேர்த்து ஸ்வாமி பிரபுபாதா மொழிபெயர்த்ததும் படித்தால் நல்லது என்று தோன்றியது. அதை யாரேனும் நண்பர்கள் வாங்கித் தர முடியுமா? முடிந்தால் எழுதுங்கள். விலாசம் தருகிறேன். எங்கே கிடைக்கும் என்ற விவரம் கூட தெரியாது. charu.nivedita.india@gmail.com

ஜெயமோகனின் வாசகர்களுக்கு…

அன்புள்ள சாறு, தங்களின் எந்த புத்தகத்தையும் படித்தது இல்லை . புத்தக கண்காட்சியில் தங்களை பார்த்தும், முகத்தை திருப்பி கொண்டுபோனவன் நான். பாலகுமாரனில் தொடங்கி, ஜெயகாந்தன், சுஜாதா, தி. ஜா, ஜெயமோகன், லியோ டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, அமி  என்று எல்லோரையும் படித்துள்ளேன். ஏனோ ஜெயமோகனின் தாக்கத்தால் என்னை அறியாமலேயே தங்களை அணுக தடுத்தது. அமி பற்றி தாங்கள் பேசியது யூடியூபில் கேட்டேன். இவ்வளவுநாள் நான் இறுக்கமாக தங்களின் எழுத்தையோ, பேட்சையோ செவிசாய்க்காதது  என் தவறென உணர்கிறேன்.  புதுமைபித்தனை … Read more

6. நிகழும் அற்புதம்

நான் யாருக்கும் ஒருபோதும் அறிவுரை சொல்வதில்லை.  சுய அனுபவம்தான் காரணம்.  இருபத்தைந்து வயது வரை யாரும் எனக்கு அறிவுரை சொன்னதில்லை.  குறிப்பாக என் பெற்றோர்.  அதற்குப் பின் யார் யாரெல்லாம் எனக்கு அறிவுரை சொல்கிறார்களோ அவர்களையெல்லாம் நான் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தேன்.  இருபத்தைந்து வயது வரை அறிவுரை சொல்லாத பெற்றோர் அதற்குப் பிறகு எனக்கு அறிவுரை சொன்னார்கள்.  வீடு வாங்கு.  ஒரு வருடம் போய்ப் பார்க்க மாட்டேன்.  குடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சில அன்பர்கள் அதிகம் குடிக்காதீர்கள் … Read more