நண்பர்களை ப்ளாக் பண்ணிய காதை (சற்றே மாற்றியது!)

முகநூலில் நண்பர்களை அவ்வப்போது ப்ளாக் செய்வது என் வழக்கம்.  சென்ற வாரம் அப்படி இரண்டு நண்பர்களை ப்ளாக் செய்யும்படி நேர்ந்தது.  அதை உங்களுக்கும் சொல்ல வேண்டும்.  முதல் நண்பர் செல்வா.  அவர் என் ஆளுமையில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தவர்.  அவருடைய மேனரிஸங்களில் ஒன்று, ”எப்போ வர்றீங்க செல்வா?” என்றால், இதோ கிளம்பிட்டேன் சாரு என்பார்.  ஆனால் மறுநாள்தான் வருவார்.  அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றிக் கொள்ள பெரும் பிரச்சினை ஆகி விட்டது.  சில நிபுணர்கள் இருப்பார்கள்.  … Read more

4. ஒரு சிறிய கூழாங்கல் போதும்… (தொடர்ச்சி)

உங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  ரொம்பப் பழைய விஷயம்.  எனினும் படித்திருக்கலாம்.  தாகூருக்கு சும்மா லாட்டரி அடிப்பது போல் நோபல் பரிசு கிடைக்கவில்லை.  அவர் அதற்காகக் கடுமையாக PR வேலை செய்தார்.  கீதாஞ்சலியை எழுதி அதை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எடுத்துக் கொண்டு இங்கிலாந்தோ அயர்லாந்தோ போய் W.B. யேட்ஸைப் பார்த்து முன்னுரை வாங்கிப் பதிப்பித்தார்.  அப்போது உலக அளவில் யேட்ஸ் ஒரு சூப்பர் ஸ்டார்.  அதோடு நிற்கவில்லை.  தாகூர் கோடீஸ்வரர் என்பதால் காசுக்குப் … Read more

3. ஒரு சிறிய கூழாங்கல் போதும்…

ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள்.  அழகாக இருக்கிறாள்.  உங்கள் நண்பனின் நண்பனின் தங்கையின் நண்பனின் தோழி.  சந்தர்ப்பவசமாகச் சந்திக்க நேர்கிறது.  பார்த்ததும் எடுத்த எடுப்பில் அவளிடம் “நாம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்கிறீர்கள்.  பிஞ்ச செருப்பால் அடிக்க மாட்டாளா?  அதே மாதிரியான ஒரு கேள்வியை இன்று – ஒரு ஐந்து நிமிடத்துக்கு முன்னால் என் நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார். டியர் சாரு அப்பா, ஹௌ ஆர் யூ.  உருட்டி பொரட்டி ஒரு‌நாவல் எழுதி இருக்கிறேன்.  நீங்க படிச்சுட்டு … Read more

2. இன்று pet shop செல்ல வேண்டும்…

கடந்த மார்ச்சிலிருந்து வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை.  ஏப்ரல் மாதமோ என்னவோ ஒருநாள் காய்கறிக் கடைக்கு செல்ல வேண்டி வந்தது.  திருவிழாக் கூட்டம். என்னதான் residency on earth எவ்வளவு காலம் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என நான் நம்பினாலும் இந்த மண்ணில் இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கிறது என்பதால் ஆபத்தை விலைக்கு வாங்க விருப்பம் இல்லை. அதனால் கடைக்குச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்து விட்டாள் அவந்திகா.  எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு மேனேஜரும் பணியாளர்களும் சமயங்களில் … Read more

ஷோபா சக்தியின் இச்சா

ஷோபா சக்தியின் இச்சா நாவலுக்கு கடைந்தெடுத்த கயவாளித்தனமான ஒரு மதிப்புரை பார்த்தேன். ஒரு இலக்கியப் பத்திரிகையில். இலக்கியம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு பல சமூக விரோதிகள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். மதிப்புரை எழுதியவரை விட அந்தப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருப்பவர்கள்தான் சமூகத்துக்கு அபாயகரமானவர்கள் என்று தோன்றுகிறது. சமூகம் ரேப்பிஸ்டுகளால் நிரம்பியிருப்பது போல் இலக்கிய உலகம் ரவுடிகளாலும் லும்பன்களாலும் சமூக விரோதிகளாலும் நிரம்பியிருக்கிறது.

கௌஹர் ஜான்

1902 நவம்பர் 14-ஆம் தேதி.  கல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அடுத்தடுத்த அறைகளில் ஒரு ரெடிமேட் ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைக்கப்பட்டது.  இந்தியாவின் முதல் ரெக்கார்டிங் அன்றுதான் நடக்கப் போகிறது.  அதுவரை எந்தப் பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டதில்லை.  சினிமாப் பாட்டு அல்ல.  அந்தக் காலத்து சாஸ்த்ரீய சங்கீதம்.   தென்னிந்தியாவின் கர்னாடக சங்கீதம் மாதிரி வடக்கில் ஹிந்துஸ்தானி. அதில் அப்போது உலகப் புகழ் பெற்று விளங்கியவர் கௌஹர் ஜான்.  இந்தியாவில் வேலை செய்த வில்லியம் என்ற ஆர்மீனிய … Read more