186. இசையும் கொண்டாட்டமும்

பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஹேங் ஓவர் நேற்று வரை நீடித்தது.  எல்லாம் ஓய்ந்தது என்று வேலையைத் தொடங்கிய போது சுநீல் கிருஷ்ணனின் வாழ்த்து வந்தது.  சுநீல் கிருஷ்ணன் போன்ற ஒரு முக்கியமான படைப்பாளியை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்தது பற்றிய வருத்தத்துடன் சென்ற ஆண்டுதான் அவருடைய நூல்களை வாங்கி வந்தேன்.  எடுத்திருக்கும் வேலையை முடித்து விட்டு அவரை வாசிக்க வேண்டும்.  இடையில் அவருடைய தளத்தில் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகளை வாசித்தபோது எக்ஸைல் நாவலின் அடியோட்டமாக நான் தொட்டிருக்கும் … Read more

வித்தியாசமான நாள்

இந்த ஆண்டுப் பிறந்த நாள் மிக வித்தியாசமாகக் கடந்தது. வைன் இல்லாதபடி. நண்பர்களை virtual-ஆகப் பார்த்தபடி. வீட்டில் இருந்தபடியே. ஒருபோதும் இப்படி வீட்டிலேயே இருந்ததில்லை. எல்லாம் கொரோனா. என் சகா கிம் கி டுக்கும் போய் விட்ட பிறகு இன்னும் உஷாராக வேண்டி வந்து விட்டது. மார்ஷல் ஆர்ட்ஸ் வீரன். ப்ரூஸ்லீ மாதிரி இருப்பான். ஸ்ப்ரிங் ஸம்மர் படத்தின் அசகாயசூரன் கிம் கி டுக் தான் என்பது பலரும் அறியாதது. பலரும் அவனை இயக்குனர் என்றே அறிவர். … Read more

என் எழுத்து பற்றிய மிகச் சிறந்த ஆய்வு

இதுவரை என் எழுத்து பற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள். முதலில் எழுதியவர்கள் ஜமாலன், நாகார்ச்சுனன். பிறகு இந்திரா பார்த்தசாரதி. அ. மார்க்ஸ். அதற்குப் பிறகு சிலர். இவர்கள் அத்தனை பேரையும் நான் எப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பதுண்டு. சென்ற ஆண்டு புத்தக விழாவின்போது எஸ். சண்முகத்துடன் ஜமாலனைப் பார்த்த போது அது ஜமாலன் என்று தெரியாமல் விட்டு விட்டேன். பிறகுதான் சண்முகம் சொன்ன போது அடடா, பேசாமல் போனோமே என்று மிகவும் வருத்தப்பட்டேன். போன் பண்ணிச் சொல்லியிருக்கலாம். அதையும் … Read more

எழுத்தறிவித்தவன்

அன்புள்ள சாரு ,  வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே நீங்கள் தான். 15 அல்லது 16 வயது இருக்குமென்று நினைக்கிறேன் முதன் முதலில் தேகத்தை கையில் ஏந்திய போது , என்ன இது அடல்ட் கண்டன்ட் நாவல் போலிருக்கிறதே என்று தான் வாசிக்க ஆரம்பித்தேன். அந்த வயதில் அது எதைப்பற்றிப் பேசுகின்றதென்று சுத்தமாகப் புரியவில்லை ஆனாலும் அது எழுதப்பட்டிருந்த விதம் என்னை அப்போது வாசிக்கத் தூண்டியது. அப்போதிருந்தே தேகம் என்பது மனதில் பதிந்த ஒரு … Read more

184. அந்த வெளிர்நீலப் புள்ளி…

அன்புள்ள சாரு,  எப்போதும் எனக்குள்ளே ஒரு கர்வம் இருக்கும் – என் சிந்தனைகள் என் சார்புகள் எல்லாம் என்னாலே என் மூலம் உருவானது, நான் சுயம்பானவன் என நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் என் சிந்தனைகளின் ஆழத்தில் சென்று பாத்த்தால் அது எல்லாமே உங்களைப் படித்து, நீங்கள் பேசியதைக் கேட்டு உங்கள் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு அதுவாகவே நான் மாறியிருக்கிறேன் என்பதே நிஜம்.  என்னை உருவாக்கிய உங்களுக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரு. இந்த வீடீயோவை உங்களுக்கு சமர்பிக்கிறேன் சாரு, இதில் இருக்கும் ஒவ்வொரு வாக்கியமும் நீங்கள் என்னிடம் சொல்வது போலவே இருக்கும். இந்த வீடியோவில் சொல்ல வரும் கருத்துக்கள் கூட நீங்கள் ஏற்கனவே பல முறை கூறியவை தான் சாரு, இறைவன் படைத்ததை மீண்டும் அவருக்கே படைப்பது போல் இதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சாரு இன்று மாலைக்கான zoom meetigல் கலந்துக்கொள்ள விருப்பமாக இருக்கிறேன், link தர முடியுமா? அன்புடன் கார்த்திக் வளனைப் போலவே கார்த்திக் என்னுடைய இன்னொரு பிள்ளை.  கார்த்திக், முத்துக்குமார், ஸ்ரீராம் போன்ற நண்பர்கள் இல்லையேல் என்னால் இத்தனை எழுதியிருக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.  என் குடும்பத்தில் ஒருவர் கார்த்திக்.  நானாக யாருக்கும் லிங்க் அனுப்பாததன் காரணம், நான் அனுப்பி அவர்களால் வர முடியாத சூழல் இருந்தால் அவர்களுக்கு மிகவும் தர்மசங்கடமாகப் போகுமே என்றுதான்.  மேலும், கார்த்திக் எல்லாம் மனோவிடம் … Read more

இனிது இனிது

சாரு, நீங்கள் எனக்குப் பொருள்வயமாக ஒன்றைக் கொடுத்தாக நான் கருதவில்லை நீங்கள் எனக்குள் இருளை நகர்த்தி இருக்கிறீர்கள் அதனால் அதுவரை நான் உணர்ந்திராத ஒரு விசாலமான அறையின் கதவு திறந்தது எனக்கு நீங்கள் அதை அடையாளம் காட்டினீர்கள் என் அம்மா அப்பா இவரெனச் சொன்னது போலிருந்தது இதெல்லாம் சொல்லியாக வேண்டும் அல்லது சொல்ல வேண்டாம் என்னுமளவு நீங்கள் அன்னியருமில்லை இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் *** செல்வகுமார்