பூச்சி 98

I was astounded by the range of books you have read on what can I call it philosophy.  How without a guru? You may have your own reasons for not writing simplifying  these treatises. One existing poor readership or the dryness of subject for the majority. People with less than half your knowledge, roam  as … Read more

பூச்சி 97

நேர விஷயத்தில் எப்போதுமே நான் ராணுவ ஒழுங்குதான்.  பல நண்பர்கள் இத்தனைக்கும் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்பார்கள்.  நான் செய்யும் சில தியாகங்கள்தான் காரணம்.  முதல் விஷயம்.  மனித உறவுகளை, நட்புகளைப் பேணுவதில்லை.  டாக்டர் குமரவேல் மூன்று தினங்களுக்கு முன் போனில் அழைத்தார்.  நாளை அழைக்கிறேன் என்று மெஸேஜ் பண்ணினேன்.  இன்னமும் அழைக்கவில்லை.  ராமசேஷன் பல தினங்களுக்கு முன்பு போன் செய்தார்.  இன்னும் நான் அழைக்கவில்லை.  ராம்ஜியின் குரலே மறந்து விட்டது.  சீனியுடன் பேசி … Read more

பூச்சி 96

அன்பு சாருவுக்கு, உங்களைப்பற்றிய அற்புதமான கட்டுரை அராத்துவின் கட்டுரை. “சாரு சொல்வது முற்றிலும் புது வடிவம். ஓர் இலக்கிய ஆளுமையை எடுத்துக்கொண்டு அவருடைய படைப்புகள், அவருடைய பார்வை, அவர் உருவாக்கிய தாக்கம், அவருடைய வாழ்க்கை, அந்த ஆளுமையின் வரலாறு, அவர் வாழ்ந்த காலத்தில் மற்ற கலைஞர்கள் அவரைப்பற்றிச் சொல்லியவைகள், மற்ற கலைஞர்களுடனான அவருடைய சந்திப்புகள், அவருக்கும் அரசுக்கும் இருந்த உறவு அல்லது தொடர்பு, அந்தக் காலத்தில் மக்கள் அந்தக் கலைஞரை எப்படிக் கொண்டாடினார்கள் அல்லது எதிர்கொண்டார்கள் என … Read more

பூச்சி 95

நேற்றைய கதையில் எங்கெங்கோ போய் கடைசியில் செல்வகுமாருக்கு ஃபோன் செய்த கதையை அப்படியே தொங்கலில் விட்டு விட்டேன்.  இப்போது அந்த சங்கிலியைப் பிடிப்போம். நேற்று நடந்த கதையைக் கேளுங்கள்.  இரண்டு மாதம் கழித்து செல்வகுமாரிடம் பேசினேன்.  பேச ஆரம்பித்து ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது.  காதுகளில் சாரூஊஊஊஉ என்ற ரீங்காரம்.  இருங்கள், பிறகு கூப்பிடுகிறேன் என்று அவசரமாகச் சொல்லி விட்டு கதவைத் திறக்க விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன்.  கைகளில் பெரும் பளுவைச் சுமந்து கொண்டு அவந்திகா அது … Read more

அடியேனின் நேர்காணல்

அரூ இதழில் வெளியாகியுள்ள இந்த நேர்காணல்தான் அடியேனின் இதுவரையிலான நேர்காணல்களில் ஆக முக்கியமானது எனக் கருதுகிறேன். அரூ இதழில் அராத்து, செல்வேந்திரன் ஆகியோரும் என் எழுத்து பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. அரூ குழுவினர் சுஜா, ராம், பாலா ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி. பின்னர் அரூ இதழைப் படித்து விட்டு விரிவாக எழுதுகிறேன்.

பூச்சி 94

எத்தனையோ எழுத்தாளர்கள் எத்தனையோ இன்னல்களுக்கு இடையே எழுதியிருக்கிறார்கள்.  பெரும்பாலான கதைகள் நமக்குத் தெரியும்.  லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் என்றால், ஒன்று, நாடு கடத்தி விடுவார்கள்.  அல்லது, தூதராக ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.  அது ஏன் ஐரோப்பிய நாடு என்றால், அங்கே போனால்தான் திரும்பி சொந்த நாட்டுக்கு வர மனசு வராது.  பாப்லோ நெரூதா எல்லாம் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் தூதராகவே கழித்தவர்.  துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்றால், … Read more