விவேகம் விவகாரம் தொடர்பாக…

பின்வருவது முகநூலில் லுலு தேவ ஜம்லா எழுதியது.  லுலுவுக்கு என் நன்றி: சாரு அஜித்துக்கு எழுதியிருக்கிற கடிதத்தை வாசிச்சேன். என் மனசுக்குள்ள ஏற்கனவே அந்த தமிழ் சமூகத்து மேல இருந்த கோவம், ஆத்திரம் எல்லாம் இன்னும் இரட்டிப்பா ரௌத்திரமா மாறியிருக்கு. இப்படி ஒரு குறிப்பிட்ட நடிகனின் படத்தை உண்மை மாறாம விமர்சனம் செய்திட்டார் என்கிற ஒரே செயலுக்காக முகந்தெரியாத மாக்களின் மிரட்டல்களை எதிர் கொள்வது என்பது எவ்வளவு கொடுமையான வேதனை தெரியுமா? அதில அவரு பொண்ணோட பிறப்புறுப்பில் … Read more

நடிகர் அஜித்துக்கு ஒரு பகிரங்கக் கடிதம்…

மை டியர் அஜித், மார்ஜினல் மேன் எடிட்டிங் வேலையில் மூழ்கியிருப்பதால் எனக்குக் கொலை மிரட்டல் விட்ட உங்கள் ரசிகர் மேல் போலீஸில் புகார் கொடுக்க முடியவில்லை.  உங்கள் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு பல எண்களிலிருந்து ஆபாச வசைகள் வந்தன.  மெட்ராஸ் செண்ட்ரல் தளத்தில் என் பேச்சுக்குக் கீழே உள்ள பின்னூட்டங்களில் தங்கள் அடையாளத்துடன் தங்கள் தொலைபேசி எண்ணுடன் என்னை ஆபாசமாகப் பேசியிருக்கிறார்கள்.  ”உன் மகள் —————(ஜனன உறுப்புக்கான தமிழ்க் கொச்சை) காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொருக … Read more

விவேகம் – 6

அஜீத்தின் ரசிகர்கள் விவேகம் படத்தை விமர்சிப்பவர்களைக் கொலைவெறியோடு தாக்குகிறார்கள்.  இதுவரை வாழ்வில் நான் இத்தனை பெரிய எதிர்ப்பை நேரடியாக எதிர்கொண்டதில்லை.  வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது.  அடையாளம் கண்டு அடித்து விடுவார்களோ என்று.  ஆனாலும் விமர்சனத்தை நிறுத்த மாட்டேன்.  இந்தப் பதிவை எழுதுவதன் காரணம், என்னைப் பற்றி எனக்கே நேற்று தான் ஒரு விஷயம் தெரிந்தது.  எழுத்தில் இருக்கும் கடுமை பேச்சில் இல்லை.  இருந்திருந்தால் விவேகத்தை குப்பை என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.  இறைவி பற்றிய விமர்சனத்தில் – … Read more

விவேகம் சர்ச்சை – 6 (இயக்குனர் அருண் வைத்தியநாதனின் பதில்)

நான் பெரிதும் மதிக்கும் சாரு அவர்களுக்கு, விமர்சனமே செய்யக்கூடாது என்றோ, சினிமா விமர்சனம் செய்பவர்களை ஜெயிலில் போட வேண்டும் என்று கதறும் அளவுக்கோ சின்னபுத்திக்காரன் நானில்லை. விமர்சனமென்பது எந்த ஒரு கலைக்குமே வேண்டும் – சினிமாவிற்கு கண்டிப்பாய் வேண்டும். அது குத்திக் குதறி, வன்மத்தை கக்கும் ஒரு விஷ அருவியாய் வெளியே விழக்கூடாது. எவ்வளவு மோசமான விஷயத்தையும், செய்தவரே நாணுமளவுக்கு, அவர்களே அடுத்த முறை அதை செய்யத் தயங்கும் அளவுக்கு, ஒரு கண்ணாடி போல் செயல்பட வேண்டும். … Read more