பூச்சி 84

ஹெலன் சிஸூ ரீடர் கிடைத்து விட்டது.   இனி நாடகத் தொகுப்பு மட்டும்தான் தேவை. சிஸூவின் புத்தகங்களின் விலை பற்றி யோசிக்கும்போது நான் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது.  ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள் அந்த நாட்டு அதிபரைப் போன்றவர்கள்.  விலையைப் பார்த்தால் ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.  சமீபத்தில் ஒரு பதிப்பக நண்பரிடம் ஏன் ஐரோப்பிய எழுத்தாளர் பலரும் – குறிப்பாக ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள் – தமிழில் மொழிபெயர்க்கப்படுவதில்லை என்று கேட்டேன்.  சாத்தியமே இல்லை என்றார்.  அவர்கள் கேட்கும் முன்பணத்தைக் கேட்டால் … Read more

பூச்சி 83

கடந்த இரண்டு தினங்களாக அரூ பத்திரிகைக்கான நேர்காணலுக்காக எழுதிக் கொண்டிருந்தேன்.  இரண்டு தினங்களும் வேறு எந்த வேலையும் பார்க்கவில்லை.  அதற்காகப் படிக்கவும் வேண்டியிருந்தது என்பதால் இரவு பகலாக அந்த வேலைதான்.  அநேகமாக என் நேர்காணல்களில் மிக முக்கியமானதாக இருக்கும்.  நேர்காணல் என்கிற போது 2014-ஆம் ஆண்டு நாட்டியக் கலைஞரும் எழுத்தாளருமான Tishani Doshi எடுத்த நீண்ட நேர்காணல்தான் ஞாபகம் வருகிறது.  அது என்னுடைய ஆங்கிலத் தளத்தில் Author’s Parole என்ற தலைப்பில் உள்ளது. (www.charunivedita.com)  அது ஆங்கில … Read more

பூச்சி 82

நேற்று அல்ஹலாஜின் கவிதைகளை ஆறு மணி நேரம் படித்து மூழ்கியதில் முக்கியமான விஷயத்தை விட்டு விட்டேன்.  பரமஹம்ஸா பற்றி நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்த போது – இல்லை, இல்லை, பரமஹம்ஸாவின் வாழ்க்கையில் நடந்ததைப் போலவே ஒரு விஷயம் என் வாழ்வில் அடிக்கடி, ஏன், தினமுமே, நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி, காசும் கல்லும் ஒண்ணுதான் எனக்கு, மண்ணும் பொன்னும் ஒண்ணுதான் எனக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தபோது என் வாய்க்குள் ஒரு ஈ போய் விட்டது.  இப்படியெல்லாம் எதிர்பாராத … Read more

பூச்சி 81

இன்று காலை பத்து மணிக்கு இந்தக் கணினியில் அமர்ந்தேன்.  சாப்பிட மட்டும்தான் இடையில் எழுந்தேன்.  முழுநாளும் அல்ஹலாஜின் கவிதைகளில் மூழ்கியிருந்தேன்.  கவிதையா அது.  சந்நதம்.  கடவுளோடு ஒன்றிய நிலை.  பரமஹம்ஸாவின் பித்தநிலை.  அல்ஹலாஜ் சூஃபி கவி மட்டும் அல்ல.  கலகக்காரர். தெருவில் நின்று போராடியவர்.  அடுத்த யேசு.  அந்தக் கட்டுரையை எழுத கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் படித்தேன்.  இரண்டு மணி நேரம் கணினியில் பேய் வேகத்தில் தட்டினேன்.  நரம்புகள் தெறித்து விழுந்தன.  ஒரு கிளாஸ் ஒயின் … Read more

பூச்சி 80

இஸ்லாத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம், எந்தக் காரணத்துக்காகவும் – அதிலும் குறிப்பாக கடவுளின் பெயரைச் சொல்லி, ஆன்மீகத்தின் பெயரால் உடலின் இயல்பான இச்சைகளை அடக்க மாட்டார்கள்.  உலகில் உள்ள மதங்களிலேயே உடலை அடக்கி ஒடுக்காத ஒரு மதம் எதுவென்றால், அது இஸ்லாம்தான்.  அதிலும் குறிப்பாக, விசேஷமாக பெண்கள்.  முத்துசாமியின் நீர்மை என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  அசோகமித்திரனின் இருவர் என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  லா.ச.ரா.வின் பாற்கடல் என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  நீர்மையில் வரும் அந்தப் பெண்மணிக்குப் பெயர் … Read more