பூச்சி 42

அய்யங்கார்களின் மரபணு – பொதுவாகவே பிராமணர்களின் மரபணு பற்றி எழுதினேன்.  அதில் இன்னும் நிறைய பாக்கி உள்ளது.  ஸ்ரீரங்கத்தில் பார்த்திருக்கிறேன்.  அய்யங்கார் பையனும் அ-பிராமணப் பையன்களும் ஒன்றாகச் சேர்ந்து குடித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டு கிடப்பான்கள்.  கல்லூரி மாணவர்கள்.  தேர்வுகள் வரும்.  அ-பிராமணப் பையன்கள் தேர்வில் தோல்வி அடைந்து விடுவான்கள். அய்யங்கார் பையன் மட்டும் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டு வாங்கித் தேர்ச்சி அடைவான்.  இத்தனை எடுத்தும் மெடிக்கல் கிடைக்கவில்லை; இட ஒதுக்கீடே கூடாது என்றும் புலம்புவான்.   அதன் பிறகு … Read more

பூச்சி – 41

கம்யு ஒரு அல்ஜீரியனாகவே இருந்தாலும், தன் வாழ்நாள் முழுதும் மக்ரிப் அரபிகளையே ஆதரித்தாலும் அல்ஜீரியர்கள் கம்யூவைத் தங்கள் நினைவிலிருந்து துடைத்து அழித்து விட்டதற்குக் காரணத்தை உங்களில் யாராவது என்னுடைய சார்த்தர் பற்றிய கட்டுரைகளை ஞாபகத்தில் வைத்திருந்தால் இப்போது சொல்லி விடலாம்.  சார்த்தருக்கு அல்ஜீரியர்களை நேரடியாகத் தெரியாது.  அவர் ஒரு தத்துவவாதி.  அதிலும் அவரது தத்துவத்தின் மூலக்கூறுகளை அவர் ஜெர்மன் தத்துவவாதிகளிடமிருந்து பெற்றிருந்தார்.  ஜெர்மன் தத்துவவாதிகளோ – நீட்ஷேவையும் மார்க்ஸையும் தவிர்த்து – நேரடி வாழ்விலிருந்து பெரிதும் அந்நியமானவர்கள்.  … Read more

பூச்சி 40

வரலாற்றுத் தகவல்களைக் கொடுக்கும்போது அந்தக் காலத்து சினிமா பாட்டுப் புத்தகங்களில் கதைச் சுருக்கம் என்று போடுவார்களே அதை விடவும் கம்மியான அளவில்தான் விபரங்களைத் தெளித்துச் செல்கிறேன்.  இல்லாவிட்டால் இந்த நூல் ஆயிரம் பக்கங்களையும் தாண்டி விடும்.  உதாரணமாக, ஸ்பெய்னிலிருந்து தென்னமெரிக்கா சென்ற பாதிரியார்களில் ஒருவரான பார்த்தொலோமெ தெ லாஸ் காஸாஸ் (Bartolome de Las Casas) எழுதிய A Brief Account of the Destruction of the Indies என்ற 50 பக்க புத்தகத்திலிருந்து ஒரு … Read more

யானையைத் தின்பது : வளன்

ஒரு யானையைத் தின்பது எப்படி? பொறுமையாக  ஒரு வேளைக்கு ஒரு கடி. இப்படி யானையைத் தின்பது போலதான் இந்த மரணத்தின் நாட்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. சுத்தமாக இருக்கச் சொல்லி எங்கிருந்தோ உத்தரவு வருகிறது பத்து நபர்களுக்கு மேல்  யாரும் சேர்ந்திருக்கக் கூடாது என்கிறார்கள் தனித்திருக்கச் சொல்கிறார்கள் இருமினாலோ தும்மினாலோ அனைத்து கண்களும் பயத்தையும் சந்தேகத்தையும் உமிழ்கின்றன மூடப்பட்ட வழிபாட்டுத்தலங்களில் கடவுளர்கள் தனிமையிலிருக்கிறார்கள் எப்போது மாறும் இந்த நிலை  என்பதுதான் பலரது கேள்வி. இந்த நிலை மாறும் இன்னொரு … Read more

பூச்சி – 39

முடிதிருத்தும் கலைஞர் பெயர் ரமேஷ் என்றா சொன்னேன்?  அடடா, தவறு.  ரமேஷ் என்ற பெயரிலும் ஒரு கலைஞர் இருக்கிறார்.  நான் குறிப்பிட்டது மகேஷ்.  நேற்று எழுதியதை நான் திரும்பப் படிக்கவில்லை.  ஆனால் கனவில் நான் எழுதியது ரமேஷ் என்று புலப்பட்டது.  இப்படி பகலில் செய்யும் தவறுகள் இரவில் கனவில் சுட்டிக்காட்டப்படும்.  உங்களுக்கும் இப்படி நடக்குமா தெரியவில்லை.  எனக்குப் பல முறை நடந்துள்ளது.  ரமேஷ், மகேஷ் இருவருமே கலைஞர்கள்.  இருவருமே ஜெமினி அருகில் முடிதிருத்தகம் வைத்திருக்கிறார்கள்.  இருவருமே வி.ஐ.பி.  … Read more

பூச்சி – 38

புவி என் நெடுநாள் தோழி.  அவர் என்னுடைய சமீபத்திய பூச்சி கட்டுரைகளைப் படித்து விட்டு “நீங்கள் ரொம்பவும் மென்மையாகி விட்டீர்கள்.  ரெண்டு பத்திகளைத் தாண்டிய பிறகுதான் நீங்கள் அவரைப் பாராட்டவில்லை, விமர்சிக்கிறீர்கள் என்றே தெரிய வந்தது.  முன்பெல்லாம் முதல் வாக்கியத்திலேயே சொருகி எடுத்தால் குடல் வெளியே சரிந்து விடும்.  அதோடும் விடாமல் அந்தக் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு ஒரு ருத்ர தாண்டவம் வேறு.  பார்க்க ஜோராக இருக்கும்.  அந்த சாரு இப்போது இல்லை.  அது … Read more