ஒரு முக்கியத் திருத்தம்

பூச்சி – 14இல் வரும் நாயகன் கையில் வைத்திருப்பது மெழுகுவர்த்தி அல்ல. தோன் கெஹோத்தே (Don Quixote) நாவல். பாருங்கள், மோடியின் மெழுகுவர்த்தி என்னென்ன ஜாலமெல்லாம் காட்டுகிறது என்று. புத்தகம் – அதுவும் என்ன மாதிரி ஒரு புத்தகம் – மெழுகுவர்த்தியாக மாறி விட்டது என்றால், இது நிச்சயம் மஸ்தான் வேலை.

பூச்சி – 14

இல்லை, இன்னமுமே பதில் சொல்லி முடித்து விட்டதாகத் தோன்ற மாட்டேன் என்கிறது.  ஏனென்றால், இலக்கியத்தினால் எந்தப் பயனும் இல்லை; ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு நான் நாற்பது ஆண்டுகளாக பதில் சொல்லிக்கொண்டு வந்தாலும் எனக்கு இன்னும் சரியான பதிலை சொல்லி விட்டதாகத் தோன்றவில்லை.  ஒரே வார்த்தையில் சொல்கிறேன்.  நேற்று நான் எழுதிய மூன்று கட்டுரைகளின் மொத்த வார்த்தைகள் 4267.   இன்னும் நேரம் கிடைத்திருந்தால் இன்னும் நாலாயிரம் வார்த்தைகளை எழுதியிருப்பேன்.  இத்தனை வார்த்தைகளை எந்தச் … Read more

பூச்சி – 13

சரி, இப்போதாவது இந்த எழுத்தாளர் மேட்டருக்கு வருவோம்.  அது ஒன்றுமில்லை.  முகநூலில் பிரபலமாக இருக்கும் நம் ராஜ் சிவா இருக்கிறாரே, அவர் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  என் குடும்பத்தில் ஒருத்தர்.  அவரோடுதான் இப்போது பஞ்சாயத்து.  அதை அவர் எழுதிய அன்றே போட்டிருக்க வேண்டும்.  நேரம் கிடைக்கவில்லை.  ”இப்போ புரிகிறதா? எந்தவொரு இலக்கியவாதியோ, எந்தவொரு எழுத்தாளனோ, எந்தவொரு நடிகனோ, எந்தவொரு அரசியல்வாதியோ, எந்தவொரு மதத் தலைவனோ, எந்தவொரு ஆன்மீகச் சாமியாரோ, எந்தவொரு கோடீஸ்வரனோ… யாருமே பெரியவனில்லை. நீ அவன் … Read more

பூச்சி – 12

கஎழுதும் வேகத்தில் பல நுணுக்கங்கள் விடுபட்டு விடுகின்றன.  அதெல்லாம் புத்தகமாக வரும்போதுதான் சரி செய்யப்படும்.  இப்போது எல்லாமே அவசரம்.  ந. முத்துசாமி தன்னுடைய ஒவ்வொரு கதையையும் பல முறை திரும்ப எழுதுவாராம்.   பல முறை என்றால் என்ன அர்த்தம்?  உங்கள் மனதில் என்ன எண்ணிக்கை வருகிறது?  அஞ்சு?  பத்து?  ம்ஹும்.  திருப்தி வரும் வரை எழுதிக் கொண்டே இருப்பாராம்.  நீர்மை கதையை அவர் அப்படி 70 முறை திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறார்.  இப்போதோ நாம் ஹாயாக தட்டச்சு … Read more

பூச்சி – 11

ஆஹா, மணி எட்டரை ஆகியிருக்கிறது.  இதோ எழுத வந்து விட்டேன்.  இன்னும் ஃபாக்டரி திறக்கவில்லை.  அது வரை தட்டச்சு செய்து கொண்டிருக்கலாம்.  நேற்று இரவும் பதினொன்றரை மணிக்கு அவந்திகா ஏகப்பட்ட பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.  என்னம்மா இது என்று வருத்தத்துடன் கேட்டேன்.  ”ஆமாம்ப்பா, நீ காலையில் பாத்திரம் தேய்ப்பதைப் பார்க்கும் போது எனக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது.  இப்பவே முடிச்சுடறேன்.” இம்மாதிரி தருணங்களும் உண்டு.  ஆனாலும் ஃபாக்டரி ஃபாக்டரிதான்.  ஸ்விக்கிக்கு வீட்டுக்குள் அனுமதி இருந்தால் இத்தனை கஷ்டம் … Read more

பூச்சி – 10

இப்போது மணி 3.30.  மதியம்.  காலையில் ஐந்து மணிக்கு எழுந்து இப்போதுதான் கணினியில் தட்டச்சு செய்ய அமர முடிந்தது.  இதுவரை என்ன வேலை செய்தேன்?  ’நாய்க்கு நிய்க்க நேரமில்லை; செய்ய வேலையும் இல்லை’ கதைதான்.  எடுபிடி வேலையிலேயே நாளில் பாதி நேரம் போய் விடுகிறது. இத்தனைக்கும் இன்று சமையல் வேலை வேறு இல்லை.  நேற்று வைத்த சாம்பார், நேற்று வைத்த ரசம், நேற்று வறுத்த உருளைக் கிழங்குக் கறி – இதைக் கொண்டே ஒப்பேற்றிக் கொண்டேன். சாப்பாட்டு … Read more