ஸீரோ டிகிரி – மாத இதழ்

சாரு நிவேதிதா வாசகர் வட்ட நண்பர்கள் ஸீரோ டிகிரி என்ற பெயரில் ஒரு மாதப் பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.  ஏப்ரல் மாதம் முதல் இதழ் வெளிவரும்.  புதிய எழுத்தாளர்களுக்கும் பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.  திரும்பவும் சொல்கிறேன்.  ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கும் இப்போது ஆரம்பிக்கப்பட இருக்கும் ஸீரோ டிகிரி பத்திரிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  மாதாமாதம் நான் அதில் எழுதுவேன்.  உயிர்மையில் நான் முதல் இதழிலிருந்து பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரு மாதம் கூட … Read more

வியாசரின் கொடி மரபு – செல்வேந்திரன்

செல்வேந்திரன் முகநூலில் எழுதிய பதிவை கீழே தருகிறேன். அருட்செல்வ பேரரசனின் மகாபாரதம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மகாபாரத மொழிபெயர்ப்பு என்ற மகத்தான பணியைச் செய்து முடித்த அரசனுக்கு என் வாழ்த்துக்கள். வியாசரின் கொடி மரபு –செல்வேந்திரன் அருட்செல்வபேரரசனுக்குப் பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக திட்டமிட நண்பர்கள் அவ்வப்போது கூடினோம். ஒவ்வொருமுறையும் டைனமிக் நடராஜன் பேரரசனின் இம்முயற்சி எத்தகையது, இந்நிகழ்ச்சி எதற்காக என்பதை ஒருவர் ‘தெளிவாகப்’ பேசி நிகழ்வைத் துவக்க வேண்டும் என வலியுறுத்திக்கொண்டே இருந்தார். வாழ்த்துரைப்பவர்கள் எப்படியும் … Read more

தி.ஜா.வின் மோக முள்

கல்கியில் 1961இல்வெளிவந்த இந்தக் கட்டுரையை சொல்வனத்தில் படித்தேன். படித்த போது கடவுளின் பேச்சைக் கேட்பது போல் இருந்தது. மோகமுள் – நாவல் பிறந்த கதை   தி.ஜானகிராமன் ஏப்ரல் 7, 2011  ரோஜா முத்தையா நூலகத்தில் படிக்கக் கிடைத்த, 1961-ஆம் ஆண்டு வெளிவந்த கல்கி வார இதழில் இடம்பெற்றிருந்த தி.ஜானகிராமன் எழுதிய இக்கட்டுரையை, ஸ்கேன் செய்து அனுப்பிய திரு.லலிதா ராம்அவர்களுக்கு சொல்வனத்தின் நன்றிகள். கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” … Read more

அன்ஃபூ

என்னை ரவி என்று அழைக்கக் கூடிய நண்பர்கள் கவிஞர் சுகுமாரனும் கவிஞர் கலாப்ரியாவும் ஆவர். அந்த அளவுக்கு நெருக்கமானவர்கள் இருவரும். அதிலும் கலாப்ரியா என் குடும்ப நண்பரைப் போல. அவரது வேனல் நாவல் சரியானபடி பேசப்படாதது பற்றி என் ஆதங்கத்தை எழுதியிருந்தேன். அதற்கு கலாப்ரியா தன் முகநூலில் பின்வரும் பதிலை எழுதியிருந்தார். அதை நான் புரிந்து கொள்கிறேன். கலாப்ரியாவின் இந்தப் பதிவுக்கு தமிழ் இலக்கிய உலக தாதாவான வண்ணதாசனும் அவரது அடிப்பொடிகளும் பின்னூட்டம் என்ற பெயரில் என்னைத் … Read more

ஊரின் மிக அழகான பெண் (தொடர்ச்சி)

பத்தோரி சீமாட்டி இளம் பெண்களின் ரத்தத்தில் குளிப்பாள் என்றேன்.  வெறும் இளம் பெண்கள் அல்ல; அவர்கள் கன்னிப் பெண்களாக இருக்க வேண்டும்.  ஒரு கட்டத்தில் பத்தோரிக்கு இந்த ரத்தச் சடங்குகளெல்லாம் வீண் என்று தோன்றியது.  காரணம், அவளுக்கு ஐம்பது வயது ஆன போது தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பித்தன.  சரி, சூன்யக்காரியை வதை செய்து கொன்று விடலாம் என்று முடிவு செய்தாள்.  ஆனால் சூன்யக்காரி பத்தோரி சீமாட்டியிடமிருந்து தப்பிக்கவும், சீமாட்டியையே சிக்கலில் மாட்டி வைக்கவும் ஒரு சதி … Read more