நேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்

ஜீனியஸ் என்று நான் மதிக்கக் கூடியவர்களை வெகு அரிதாகவே சந்தித்திருக்கிறேன்.  எழுத்து உலகில் தேவதச்சனை சந்தேகமில்லாமல் ஒரு ஜீனியஸ் என்று சொல்லலாம்.  அந்தக் காலத்து சாக்ரடீஸைப் போல அவரைச் சுற்றி எப்போதும் பத்து இளைஞர்கள் குழுமியிருப்பார்கள்.  ஜீனியஸ்களின் ஒரு முக்கிய அடையாளம், நல்ல உரையாடல்.  தேவதச்சன் குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் பேசுவார்.  பேச்சு என்றால் மேடைப் பேச்சு அல்ல; உரையாடல்.  அதிக பட்சம், நாள் கணக்கில்.  தேவதச்சனுக்கு அடுத்தபடியாக நான் பார்த்த ஜீனியஸ் நேசமித்ரன்.  … Read more

சக்ரவாகம்

ஒரு முதிர்ந்த அல்லது இப்படி சொல்லலாம் ஒரு பழுத்த பெண்ணுடன் முயங்கியிருக்கிறீர்களா? முயங்கலில் அங்கமெங்கும் ஒளிந்துகிடக்கும் அவள் இளமையை தேடித்தேடி வேட்டை நாய்போல் அவள் தேகமெங்கும் நாவால் அலைந்துண்டா? அவ்விளமையைத் தேடிக்கண்டடைந்ததுண்டா? பாவாடை சட்டையிலிருந்து தாவணிக்கு மாறிய காலத்திலிருந்து இன்று வரையான அவளுடைய சரீரத்தின் ஒவ்வவொரு இனுக்குககளையும் பரவசத்தோடு சுவைத்ததுண்டா? அப்படியானால் நீங்கள் தைரியமாக ந. சிதம்பர சுப்பிரமணியனின் “சக்ரவாகம் ” என்கிற சிறுகதைத் தொகுப்பை வாசிக்கத்தொடங்கலாம். அவருடைய “மண்ணில் தெரியுது வானம்” என்கிற புதினத்தை விடுங்கள், … Read more

எழுத்தாளர் முற்றம்

நாளை எழுத்தாளர் முற்றத்தில் 7 மணிக்கு என் எழுத்துலகம் பற்றி நேசமித்திரன் பேச இருக்கிறார். தவற விடாதிர்கள். சாருவின் பாலியல், porn writing இலிருந்து சாருவின் எழுத்து எப்படி கலையாக மாறுபடுகிறது – நேசமித்திரனின் பேச்சு இதை மையப்படுத்தி இருக்கும்.

அற்புதம்

கடந்த ஐம்பது ஆண்டுகளில் வாழ்ந்த இசைக் கலைஞர்களில் மேதை என்று சொல்லத்தக்க அத்தனை பேரையும் நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.  பண்டிட் ஜஸ்ராஜ், மல்லிகார்ஜுன் மன்ஸூர், கான் ஸாஹிப் என்று ஏராளமான பெயர்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.  நான் அடிக்கடி சொல்வதுண்டு, தியாகய்யர் திருவையாற்றின் தெருக்களில் ராம பிரானைத் துதித்தபடி பாடி நடந்து சென்ற போது அவர் காலடி பட்ட ஒரு புழுவாகவோ பூச்சியாகவோ நான் இருந்திருக்கிறேன்; அதனால்தான் இசையின் மீது இத்தனை பித்து என்று.  மைலாப்பூர் என்ன அத்தனை உசத்தியா … Read more

இந்தப் புத்தக விழாவில் என்னைக் கவர்ந்த புத்தகம்

அந்தப் புத்தகத்தின் பெயர் கடலெனும் வசீகர மீன்தொட்டி. கவிதைத் தொகுப்பு. ஆனாலும் ஒரு நாவலுக்குரிய உள்ளடக்கத்துடன் இருக்கிறது. ஒரு நாவலைப் படிப்பது போல் படிக்க முடிகிறது. சுபா செந்தில்குமார் எழுதிய கவிதைகள். முந்தாநாள் வரை கூட இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. எதேச்சையாக இந்த நூல் என் கவனத்துக்கு வந்தது. மிகுந்த அவநம்பிக்கையுடன் படிக்க முனைந்தேன். ஒரே வாசிப்பில், ஒரே பக்கத்தில், ஒரே கவிதையில் என்னை சரக்கென்று உள்ளே இழுத்துக் கொண்டது. கவிதைகள் கூட இத்தனை வசீகரமாகவும் … Read more