ஹலோ கூட சொல்ல மாட்டேன்…

2013-இல் எழுதிய ஒரு கடிதம் இது: சாரு அவர்களுக்கு, உங்களுடைய ஹலோ கூட சொல்ல மாட்டேன் பதிவில், இரண்டு துணுக்குகளைச் சொல்லி இருந்தீர்கள். ஒன்று, சார்த்தரைப் பற்றி. மற்றது  பர்ரௌஸைப் பற்றி. இரண்டு துணுக்குகளிலும் நிறைய தகவல்/கருத்துப் பிழைகள். பர்ரௌஸைப் பற்றிய விஷயம்  முதலில் பர்ரௌஸ்.  அவர்  தன் மனைவியைக் கொன்றது தஞ்ஜியரில் அல்ல.  அது நடந்தது மெஹிகோவில்.  அந்த துர்சம்பவம் நடந்த சமயம் அவர் அமெரிக்க அரசாங்கத்தின் சிறையில் இருந்து தப்பிப்பதற்காக மெஹிகோ ஓடி ஒளிந்து கொண்டு இருந்தார்.  … Read more

அக்கப்போர் – 2

கார்ல் மார்க்ஸ் ஒரு விளக்கம் எழுதியிருக்கிறார். எனக்கு வயதாகி விட்டது, கனிந்து விட்டேன் என்று சொல்லும் யார் மீதும் நான் அப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் எப்போதும் பிரயோகிக்கிறேன். அதையேதான் இப்போதும் செய்தேன். ஆனால் என் வார்த்தைகள் கார்ல் மார்க்ஸை பெரிதும் பதற்றமடைய வைத்திருக்கிறது என்பதை அவர் மேலும் ஒரு அவதூறையும் ஒரு மிரட்டலையும் வைத்திருப்பதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அவதூறும் மிரட்டலும் கீழே: ”நீங்கள் விதந்தோதும் ஒரு படைப்பை அது குப்பை என்று உங்களிடம் நேரில் சொல்லும் … Read more

அக்கப்போர்

ஏராளமாக வேலை இருக்கிறது. ஒரு நாளில் நாற்பது மணி நேரம் இருந்தால் தேவலாம் போல் இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் எழுதிக் குவித்ததையெல்லாம் தொகுக்க வேண்டும். நாவல், பயணக் கட்டுரை, அடுத்த பயணத்துக்கான ஏற்பாடு, உடல் நலம், இத்யாதி இத்யாதி. இந்தக் கொடூர அவசர வாழ்வில் கண்ட கண்ட விவகாரத்தில் எல்லாம் ஈடுபட நேரம் இருப்பதில்லை. இந்த நிலையில் கார்ல் மார்க்ஸ் தனது பதிவு ஒன்றில் என்னையும் இழுத்து அவதூறு செய்திருக்கிறார். முன்பு போல் இருந்தால் வேறு … Read more

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்…

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற என் நூலை உங்களில் யாரும் படித்திருக்க வாய்ப்பே இல்லை. அதில் நேற்று முழுவதும் ஆழ்ந்து பிழைதிருத்தம் செய்து ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்குக் கொடுத்தேன். அதை ஏன் நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னேன் என்றால், அதில் உள்ள கட்டுரைகள் புதிய தலைமுறை இதழில் வந்தவை. நான் பொதுவாக ஒரு அச்சு இதழில் வந்ததை என் இணைய தளத்திலோ முகநூலிலோ பகிரும் வழக்கம் இல்லாதவன். உதாரணமாக, இப்போது குமுதத்தில் வரும் கட்டுரைகளை அவை … Read more

ஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)

திட்டம் போட்டு என்னை ஏமாற்ற நினைத்த ஒரு கூட்டத்தின் தலைவன் தானே ஒரு பஞ்சாயத்தை அரசால் அமைக்க பெற்ற ஒரு குழுவின் முன் கூட்டி, அமாம் நான் இவரை ஏமாற்ற நினைத்தது உண்மை தான் என சொன்னதோடு அல்லாமல் எழுதியும் கொடுக்கிறான். இருவரோடு ஆரம்பித்த குழு மதியத்திற்குள் மூவரானது பல கோட்டைகளை தன் வாழ்நாளில் கட்டி சில சக்திகளை தன் வசப்படுத்தியவராக காட்சி அளித்தார் ஒருவர் .தீர்க்கமான குரலோடு குற்றத்தை நிமிடத்தில் கடிந்தார் ஒருவர். ஏனோ தெரியவில்லை … Read more

கீழடியும் ஸ்டாலினும்…

திமுக தலைவர் ஸ்டாலின் பி.ஏ. படித்தவர். அவரை நான் மதிக்கிறேன். நானோ பியுசி ஃபெயில். ஆனால் ஸ்கூலில் படித்த ஹிஸ்ட்ரி ஏதோ கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது.ஸ்டாலின் அவர்கள் இனி இந்திய வரலாற்றைக் கீழடியிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சிந்து சமவெளி நாகரீகம் கி.மு. 3300 இலிருந்து கி.மு. 1300 வரை இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று எட்டாங்கிளாஸில் படித்திருக்கிறோமே. அதை என்ன செய்வது? ஏற்கனவே உலக வரலாற்றில் இடம் பெற்று விட்ட … Read more