அய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் உரையாடல்… (தொடர்ச்சி)

கேள்வி:  இங்கே தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைப்பதில்லை.  தி.ஜ.ரங்கநாதன் பற்றிய கட்டுரையை பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதியில் சேர்த்து விட்டு, தி.ஜ.ர.வின் புகைப்படத்தையும் இணைத்திருந்தேன்.  பதிப்பாளரிடமும் போன் செய்து எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினேன்.  மாதிரி பிரதி என் பார்வைக்கு வந்தது.  பார்த்தால் தி.ஜ.ர.வின் கட்டுரையில் தி.ஜானகிராமனின் புகைப்படம்.  கோபத்தில் உடல் நடுங்க பதிப்பாளரை அழைத்தேன்.  அவரோ அழாக்குறையாக ஒரு விசாரணை கமிஷன் அமைத்தார்.  விஷயம் என்னவென்றால், தி.ஜா. பற்றிய … Read more

சமூக விரோதிகள்…

நான் பிராமினாப் பிறந்ததைப் பெருமையா நினைக்கிறேன்; பிராமினுக்கு புத்தி அதிகம்; க்ஷத்ரியாளுக்கு உடல் வலிமை அதிகம் என்று சொன்ன ஒய்ஜி மகேந்திரன் மகளை பிராமண நண்பர்கள் காறித்துப்பி இருக்க வேண்டும். செய்யவில்லை. வருத்தமாக இருக்கிறது. நீங்கள் அப்படிக் காறித் துப்பாவிட்டால் பிராமண துவேஷம் அதிகமாகிக் கொண்டேதான் போகும். ஒரு கட்டத்தில் பெரியார் சொன்ன மாதிரி, பாம்பையும் பாப்பானையும் கண்டா பாம்பை விட்டு விட்டு பாப்பானை அடி என்ற நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. நான் எந்த சாதியையும் ஆதரிப்பவன் … Read more

saturday night fever… (இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன்)

கடந்த 25 ஆண்டு தாம்பத்ய வாழ்வில் இன்றுதான் முதல்முறையாக அவந்திகா தன் அம்மா வீட்டில் இரவு தங்குவதற்குப் போயிருக்கிறாள். ஏனென்றால், நாளை ஞாயிற்றுக்கிழமையும் ட்ரில்லிங் போடுவார்களாம். நான் மாலை நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை போன் செய்து எப்போது வருவாய் என்று கேட்டுக் கொண்டே இருப்பாள் அவந்திகா. அதிலும் பத்து மணி ஆகி விட்டால் பத்து நிமிடத்துக்கு ஒருமுறை வரும் போன். அதனால் அதிகபட்சம் பத்தரைக்கே விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து … Read more

தெருநாய் வாழ்க்கை

மீண்டும் கொடூரமான முறையில் ட்ரில்லிங் போட ஆரம்பித்து விட்டார்கள். அவந்திகா இந்த முறை ஃபிட்ஸ் வருவதற்கு முன்பே சட்டென்று கீழே இறங்கி இந்த வளாகத்துக்கு வெளியே போய் விட்டாள். பிறகு இன்று பகல் முழுவதும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி அங்கே போய் விட்டாள். இப்படி இந்திய வாழ்க்கை நாய்ப் பிழைப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. போலீஸில் புகார் செய்தோம். போலீஸ் வந்தது. எங்களைத் தவிர மீதி பேரிடம் கேட்டார்களாம். எங்களுக்குத் தெரியாது. … Read more

ஊருக்கே சொந்தமானவன்…

எந்த ஆணுமே தன் மனைவிக்கு ஹீரோ அல்ல என்று ஒரு நண்பர் பார்க்கில் வைத்து சொன்னார். அதை ஒரு நண்பர் ஆமோதித்தார். எனக்கு அது பொருந்தாது என்றேன். அவந்திகா எனக்கு பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும் (குடிக்காதே, அராத்துவடன் சேராதே, இன்ன பிற) அவளுக்கு நான் ஹீரோ தான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். நேற்று மாலை மீண்டும் கொடூரமாக ட்ரில்லிங் போட்டார்கள். ஐயோ, அவந்திகாவை பாதிக்குமே என்று நினைத்தே பதற்றத்தில் எனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது.  … Read more

நாகூர் நேஷனல் ஹை ஸ்கூல்…

செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாம்.  அன்றைய தினம் காலை பத்து மணிக்கு நாகூர் நேஷனல் ஹைஸ்கூலில் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களிடையே உரையாற்றுகிறேன்.  பழைய மாணவர் சந்திப்பு என்றுதான் பழைய மாணவர்கள் சொன்னார்கள்.  50 ஆண்டுக்குப் பிறகு சந்திக்கிறோம். ஆனால் நான் ஒரு எழுத்தாளன் என்பதால் மாணவர்களிடையே பேசுங்கள் என்றார்கள்.  வெறும் சினிமாவை மட்டுமே அறிந்த மாணவர்களிடையே என்ன நான் பேச முடியும்?  என்றாலும் யாரிடமாவது அந்தத் தீப்பொறி பற்றும் இல்லையா?  ஒருவரிடமாவது?  … Read more