தேவ சுப்பையா பற்றி…

தேவா என்று நான் மிகப் பிரியத்துடன் அழைக்கும் தேவ சுப்பையாவின் அறிமுகமும் நட்பும் எனக்கு சென்ற ஆண்டு ஷார்ஜா சென்ற போது கிடைத்தது. அமீரக நண்பர்களால் அண்ணன் என்று அழைக்கப்படும் தேவா ஒரு அற்புதமான மனிதர். அவரிடம் எனக்கு மிகப் பிடித்தது அவர் தன் உடல்நலத்தைப் பேணுவது. ஒரு இந்திப் பட ஹீரோ மாதிரி உடலைப் பேணுவது – வயிறும் முதுகும் ஒன்றையொன்று தொட்டுக் கொள்வது போல் வைத்துக் கொள்வது என்பதெல்லாம் இந்தக் காலத்தில் அத்தனை சுலபமான … Read more

ராஸ லீலா கலெக்டிபிளில் அருணாச்சலம் பற்றி எழுதியது:

மதுரையில் வசிக்கும் அருணாச்சலத்தைத் தெரியாத இலக்கிய வாசகர் யாரும் இருக்க முடியாது. அவருடைய மேகா பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்தார். நானும் ஒரு தேதியைக் கொடுத்திருந்தேன். அவரும் பணம் கொடுத்து அந்தத் தேதியில் அரங்கத்தை முன்பதிவு செய்து விட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதே தேதியில் வேறொரு தவிர்க்கவே முடியாத நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்தேன் போல. அது கேரளா. கடைசியில்தான் அந்த விஷயம் எனக்குத் தெரிந்து “வேறு பலரும் கூட பேசுகிறார்கள் இல்லையா, எப்படியோ சமாளித்துக் கொள்ளுங்கள் … Read more

ராஸ லீலா கலெக்டிபிள்

ராஸ லீலா கலெக்டிபிள் வேலை இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். அதில் சில நண்பர்களுக்கான டெடிகேஷன் பக்கத்தில் எழுதியது: அய்யனார் விஸ்வநாத் பற்றிய ராஸ லீலா கலெக்டிபிள் குறிப்பு கீழே: அய்யனார் விஸ்வநாத்தை, அவர் இந்தியாவில் இருந்த போது இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். முதல் சந்திப்பு திருவண்ணாமலையில். உடன் இருந்தவர் கருந்தேள் ராஜேஷ். எங்கள் பேச்சுக்களாலும் கொண்டாட்டங்களாலும் அந்த இரவு நிறைந்தது. விடியலில்தான் தூங்கப் போனோம். இரண்டாவது சந்திப்பு மிஷ்கின் அலுவலகத்தில். நந்தலாலா ப்ரிவியூ படம் … Read more

ராஸ லீலா கலெக்டிபிள்

சுமாராக 50 பேர் பணம் கொடுத்திருக்கிறார்கள். இது மிகப் பெரிய விஷயம். ஏற்கனவே வெளிவந்த ஒரு புத்தகத்தை 10000 ரூ. கொடுத்து வாங்க முன்வந்தது என் மீதும் என் எழுத்தின் மீது நீங்கள் கொண்ட அன்பினால் மட்டும்தான். அதற்கு என் மனமார்ந்த நன்றி. உலகில் வேறு எந்தப் புத்தகமும் இப்படி வெளிவந்திருக்குமா என்று தெரியவில்லை. இன்னமும், என்னுடைய 50க்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனையில் இருந்தும் ராயல்டி இரண்டு லட்சத்தைத் தாண்டவில்லை. இந்த நிலையில் ராஸ லீலா கலெக்டிபிளுக்கு … Read more

காஷ்மீர் (3)

அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் தேசத் துரோகியாக மாற முடிவு செய்து விட்டது எப்பேர்ப்பட்ட துரதிர்ஷ்டம்! காஷ்மீர் பிரச்சினை ஒரு சர்வதேசப் பிரச்சினை அல்லது இந்தியா பாகிஸ்தானுக்கான பிரச்சினை என்று சொல்லி காங்கிரஸ் கட்சி தேசத்துரோக முடிவை எடுத்து விட்டது. அடுத்த தேர்தலிலும் மோடி இதை விடவும் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற காங்கிரஸ் இப்போதே வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இப்படியே போனால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி இதை விட அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுவார். … Read more