ராஸ லீலா கலெக்டிபிளில் அருணாச்சலம் பற்றி எழுதியது:
மதுரையில் வசிக்கும் அருணாச்சலத்தைத் தெரியாத இலக்கிய வாசகர் யாரும் இருக்க முடியாது. அவருடைய மேகா பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்தார். நானும் ஒரு தேதியைக் கொடுத்திருந்தேன். அவரும் பணம் கொடுத்து அந்தத் தேதியில் அரங்கத்தை முன்பதிவு செய்து விட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதே தேதியில் வேறொரு தவிர்க்கவே முடியாத நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்தேன் போல. அது கேரளா. கடைசியில்தான் அந்த விஷயம் எனக்குத் தெரிந்து “வேறு பலரும் கூட பேசுகிறார்கள் இல்லையா, எப்படியோ சமாளித்துக் கொள்ளுங்கள் … Read more