ஆங்கிலக் கடிதங்கள்

எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் பெரும்பாலான நண்பர்கள்/வாசகர்கள் அப்படி ஆங்கிலத்தில் எழுதுவதற்காக மிகவும் குற்றவுணர்ச்சி கொண்டு மன்னிப்புக் கோருகிறார்கள்.  அப்படி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதற்குக் காரணம், தமிழில் தட்டச்சு செய்து அவர்களுக்குப் பழக்கம் இல்லை; அவர்களது மடிக் கணினியில் அதற்கான வசதி இல்லை (சீக்கிரம் அந்த வசதியை ஏற்படுத்துக் கொண்டு விடுகிறேன்; அது வரை பொறுத்துக் கொள்ளுங்கள் சாரு).  இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவதற்காக நான் கோபம் கொள்ளுவேனோ என்று அவர்கள் நினைப்பது … Read more

ஆனியன் ரவா, காஃபி, தேவாரம்…

இப்போதெல்லாம் ராமசேஷனும் நானும் ராகவனும் எங்கள் காலைச் சிற்றுண்டிக்கு மாடவீதியில் இருக்கும் ரத்னா கஃபேவுக்கு மாற்றி விட்டோம்.  மைலாப்பூருக்கு ரத்னா கஃபே வந்த புதிதில் கூட்டம் அலைமோதியது.  இப்போது அத்தனை கூட்டம் இல்லை.  நான் ரொம்ப நாளாக ரத்னா கஃபே பக்கமே போகக் கூடாது என்று இருந்தேன். காரணம், அந்த இட்லி. அது இட்லியே இல்லை. அதில் ஊற்றப்படும் சாம்பார் காரணமாகவே அதை எல்லோரும் ரசிக்கிறார்கள்.  இல்லாமல் போனாலும் இந்தியா பூராவும் அறம் வீழ்ந்தது போலவே இட்லியும் … Read more

பயணக் குறிப்புகள் – 1

அமெரிக்கர்களுக்கு பெரூவில் வீஸா தேவையில்லை.  ப்ரஸீலில் தேவை.  இந்திய அரசியல்வாதிகளின் திறமையின்மைக்கு ஒரு உதாரணம். அண்டோரா, ஆஸ்த்ரேலியா, ஆஸ்த்ரியா, பெல்ஜியம், ப்ரூனே, சீலே, செக், டென்மார்க், எஸ்தோனியா, ஃபின்லாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, க்ரீஸ், ஹங்கெரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லீஷ்டென்ஸ்டைன் (இந்த நாடு ஜெர்மனியின் கீழ்க் கோடியில் சுவிஸ்ஸுக்கும் ஆஸ்திரியாவுக்கும் பக்கத்தில் உள்ளது; ஒரு சிறிய ஊர் இது; ஆனால் தனி நாடு.  38,000 பேர்தான் மொத்த மக்கள் தொகையும்), லித்துவானியா, லக்ஸம்பர்க், மால்ட்டா, … Read more

வேண்டுதல்

ராஸ லீலா கலெக்டிபிளுக்குப் பணம் அனுப்ப xoom.com இல் என் முகவரி கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  அப்படித் தேவையெனில் எனக்கு எழுதுங்கள்.  அனுப்பி வைக்கிறேன்.    charu.nivedita.india@gmail.com *** மக்கள் ஏன் கோவிலுக்குப் போகிறார்கள்?  இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வதற்காக.  இல்லையா? எனக்கு முதலில் தெரிந்த கோவில் நாகூர் ஆண்டவர் தர்கா.  இன்னமும் அங்கே விபூதி தருகிறார்கள்.  எத்தனை வஹாபிஸம் வந்தாலும் விபூதி தந்து கொண்டேதான் இருப்பார்கள்.  ஏனென்றால், மக்கள் அன்புடன் எஜமான் என்று அழைக்கும் நாகூர் ஆண்டவரை … Read more

ராஜாவும் பாடிகார்டும்…

ஒரு ஊரில் ஒரு ராஜா. அவர் காட்டுக்கு வேட்டைக்குப் போனார். பாடிகார்டையும் அழைத்துக் கொண்டு போனார். பாடிகார்ட் பராக்கிரமசாலி. அன்றைய தினம் வேட்டையில் ஒரு விலங்கும் சிக்கவில்லை. கடுப்பான ராஜா பாடிகார்டிடம் சொன்னார், தம்பி நான் தூங்கப் போகிறேன். என் தூக்கத்தை யார் கெடுத்தாலும் கொன்று போடு என்று. மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாவின் முகத்தைச் சுற்றி ஒரு ஈ. ராஜாவும் தூக்கத்திலேயே கையால் அதை விரட்டி விரட்டிப் பார்த்தார். ஈ போன பாடு இல்லை. பார்த்தார் … Read more

கலையும் ஜனரஞ்சகமும்…

நான் இரங்கல் கட்டுரைகள் எழுதுவதில்லை.  நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும் என்ற என் சிறுகதையைப் படித்திருந்தீர்களானால் நான் ஏன் இரங்கல் கட்டுரைகள் எழுதுவதில்லை என்பதை யூகித்துக் கொள்ள முடியும்.  நம் தமிழ்ச் சமூகம் necrophelic மனப்பான்மை கொண்டதாக இருக்கிறது என்பது என் முடிவு. உயிரோடு இருக்கும் போது தெருநாயைப் போல் அலைய விட்டு விட்டு இறந்து போனதும் சிலை வைப்பதையும் மாலை போடுவதையுமே நெக்ரோஃபீலிக் மனப்பான்மை என்கிறேன்.  பாரதிக்குத் தமிழ்ச் சமூகம் செய்தது இதைத்தான்.  பாரதிக்கு … Read more