ரத்தத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்…

பிராமண நண்பர்களின் வீடுகளில் இன்று பாயசம்.  மற்ற இந்துக்களின் வீடுகளில் பல்வகை இனிப்புகள், கொண்டாட்டங்கள்.  நான் நேற்றே எழுதியபடி மோடியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் விவேகானந்தராகவும் ஆதி சங்கரராகவும் பார்க்கிறான்.  கிறித்தவர்களின் மிக மூர்க்கமான மதமாற்ற நடவடிக்கைகளாலும் இஸ்லாமியரின் ஜனத்தொகைப் பெருக்கத்தாலும் இந்து மதம் அழிந்து விடும் என்று மடத்தனமாக நம்பும் இந்து தன் வாக்கை மோடிக்குப் போட்டிருக்கிறான். தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களிலும் ஒட்டு மொத்தமாகவும் – அதாவது, தமிழ்நாட்டைத் தவிர மற்ற தேர்தல் … Read more

ஒரு வசை கடிதம்

தவறுக்கு மேல் தவறு செய்வது நான் அல்ல! நீங்கள்தான். எனக்கு அகங்காரமும் திமிரும் இல்லை. உங்களுக்குதான் இருக்கிறது. நான் “பாவம் இந்த மனிதர் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்” என்று ஒரு நல்லெண்ணத்தில்தான் யோசனை சொன்னேன். உங்களைக் கலாய்ப்பதற்கல்ல. ஆனால் நீங்கள்தான் இப்போது என்னைக் கலாய்த்துக்கொண்டிருக்கிறீர்கள். 40 ஆண்டுகளாக பதிப்புத் துறையிலும், எழுத்துத் துறையிலும் ஆழ்ந்து கிடப்பவன் நான் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். இருக்கட்டும். நான் மட்டும் என்ன உங்களுக்குக் குறைந்தவனா? நானும் பதிப்புத் துறையிலும், இலக்கியத் துறையிலும் … Read more

மோடியும் விவேகானந்தரும்…

நாளை தெரிந்து விடும்.  எக்ஸிட் போல் முடிவுகளில் மோடிதான் என்கிறார்கள்.  என் நண்பர்களுக்கெல்லாம் ஒரே குஷி.  உத்சாகம் ததும்புகிறது.  எல்லோருக்கும் ஒரே எண்ணம்.  அழிந்து கொண்டிருக்கும் இந்து மதத்தை மோடி காப்பாற்றி விடுவார்.  மோடி மட்டும் மீண்டும் பதவிக்கு வந்து விட்டால் முஸ்லீம்கள் ஏழெட்டு குழந்தைகள் கூட பெற்றுக் கொள்ளட்டும்.  கிறிஸ்தவர்களும் ஆன மட்டும் மதம் மாற்றட்டும்.  கவலையே இல்லை.  எல்லாம் மோடி பார்த்துக் கொள்வார்.  இந்து மதத்துக்கு ஆபத்து வராமல் காப்பாற்றி விடுவார்.  படித்தவர்களே இப்படி … Read more

தவறுக்கு மேல் தவறு

மேலே உள்ள இணைப்பில் உள்ளதைப் படித்து விட்டீர்களா?  இப்போது அதன் சொச்சத்தைப் படியுங்கள்.  பொதுவாக நான் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன் – நாம் ஒரு தவறைச் செய்து விட்டால் அதைத் தொடர்ந்து மேலும் மேலும் தவறு செய்கிறோம்.  சமயங்களில் அந்தத் தவறை சரி செய்வதற்காகவோ அல்லது அந்தத் தவறு தவறே அல்ல என்பதை நிரூபணம் செய்வதற்காகவோ அல்லது அபூர்வமாக மன்னிப்புக் கேட்பதற்காகவோ.  அது எப்படி, மன்னிப்புக் கேட்பதற்காகக் கூட தவறு செய்ய முடியும் என்று உங்களுக்குத் தோன்றலாம்.  ஒருமுறை … Read more

என்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…

என்னுடைய மிக முக்கியமான ஐந்து நூல்கள் இப்போது அமேஸானில் கிடைக்கின்றன. kanavugalin mozhiperyarpalan/கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் https://www.amazon.in/dp/9387707962/ref=cm_sw_r_wa_apa_i_rhb1CbQP51V4W kadavulum saithanum/கடவுளும் சைத்தானும் https://www.amazon.in/dp/9387707555/ref=cm_sw_r_wa_apa_i_wfb1Cb1SFWM2R AZADI AZADI AZADI/அஸாதி அஸாதி அஸாதி https://www.amazon.in/dp/9387707911/ref=cm_sw_r_wa_apa_i_Web1Cb7ZN9QRK ஒழுங்கின்மையின் வெறியாட்டம் https://www.amazon.in/dp/9387707679/ref=cm_sw_r_wa_apa_i_3db1CbAKFJ8MS MOODUPANI CHALAI/மூடுபனிச் சாலை https://www.amazon.in/dp/9387707687/ref=cm_sw_r_wa_apa_i_udb1Cb02H78P1

போட் கிளப்

நேற்றைய குறிப்பில் போஜன் பற்றி அதிகம் எழுதவில்லையே என்று ராமசேஷன் சொன்னார்.  வாஸ்தவம்தான்.  நாகேஸ்வரராவ் பூங்காவின் எதிரே வலது கைப்பக்கம் போனால் ஒரு சந்துக்குள் நுழையும்.  அங்கே ஃபோர்க் மாதிரி வலது இடது என்று இரண்டு பாதைகள் பிரியும்.  போட் கிளப் போட் கிளப் என்கிறார்களே, அதற்கு சவால் விடுவது போல் இருக்கும் அந்த இடம்.  ம்ஹும்.  உடனே போட் கிளப் மாதிரி மாட மாளிகை என்று கற்பனை செய்து விட வேண்டாம்.  போட் கிளப்பில் நடப்பது … Read more