ராஸ லீலா கலெக்டிபிள்

ராஸ லீலா கலெக்டிபிள் பிரதிக்குப் பணம் செலுத்த இன்றே கடைசி நாள் என்று எழுதியிருந்தேன். ஒரு நண்பர் இன்னும் ஒரு வாரம் நீட்டிக்கச் சொல்லி எழுதியதோடு அல்லாமல் பணமும் அனுப்பிப் பதிவு செய்து கொண்டார். இன்று ராஸ லீலா பிழை திருத்தம் முடித்துக் கொடுத்து விட்டேன். இனி ஒவ்வொருவருக்காக டெடிகேஷன் எழுத வேண்டும். அதை இரண்டு நாளில் முடித்து விடுவேன். சீக்கிரம் முடித்து விட்டு பெரூ-பொலிவியா- சீலே பயணத்துக்குக் கொஞ்சம் படிக்க வேண்டும். ஆயிரக் கணக்கான விஷயங்கள் … Read more

மௌனமும் பேச்சும்…

நேற்று ஜெயமோகனோடு பேசினேன். கோவை விழாவுக்கு அழைத்தேன். வருவதாக உறுதி அளித்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் கருத்து முரண்பாடுகள் என்று சொல்ல மாட்டேன். அவர் வட துருவம்; நான் தென் துருவம். இருவரும் இரண்டு வெவ்வேறு கருத்தியல்களையும் அழகியல் கோட்பாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். இது எங்கள் இருவருக்குமே தெரியும். இருந்தாலும் அது எங்கள் நட்பை ஒரு போதும் பங்கம் செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. எனக்கு ரத்த உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லை. அதாவது, யாரோடும் தொடர்பிலேயே … Read more

ஜென்மா

ஒரு இந்தியத் தாய். அவளுக்கு ஒரு மகன்.  மகனுக்கு ஒரு வயது ஆவதற்குள் கணவன் இறந்து விட்டான்.  வேறு எந்த ஆதரவும் இல்லாமல் மகனைத் தன் ரத்தத்தை வியர்வையாக்கிப் படிக்க வைத்தாள்.   மகன் பெரிய வேலைக்குப் போனான்.  கை நிறைய சம்பாதித்தான்.  அறுபது வயது ஆன அந்தத் தாய்க்கு ஏதோ பென்ஷன் கிடைக்கிறது.  மகன் எதுவும் பணம் அனுப்புவதில்லை.  அவனுக்கு ஏகப்பட்ட கடமைகள்.  அவனுடைய திருமணக் கடன் அடைக்க வேண்டும்.  வீடு வாங்கிய கடனை அடைக்க வேண்டும்.  … Read more

Flap

அதற்கு flap என்றுதான் பெயரா அல்லது வேறு பெயரா என்று எனக்குத் தெரியாது.  தெரிந்தவர்கள் என்னைத் திருத்தலாம்.  ஆனால் ஏதோ கொலைக் குற்றம் செய்து விட்டது போல் இது கூடத் தெரியாத நீயெல்லாம் ஒரு எழுத்தாளனா என்று அஞ்சல் போடாதீர்கள்.  ஃப்ளாப் என்ற வார்த்தையையே இன்றுதான் முதல்முதலாகக் கேள்விப்படுகிறேன்.  அதுவும் அருணாசலம் சொன்னதால். சற்று நேரத்துக்கு முன்புதான் அவர் ஒரு மெஸேஜ் அனுப்பினார்.  ”சென்னை வந்திருக்கிறேன்; இப்போது உங்களை ஃபோனில் அழைக்கலாமா? மதிய உணவுக்குச் சந்திக்கலாமா?”  இப்போது … Read more

புரியாத விஷயம்…

கோவையில் நடக்கும் கண்ணதாசன் விருது வழங்கும் விழாவுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.  15, 16, 17 ஆகிய மூன்று தினங்களும் கோவையில் விஜய் பார்க் இன் ஓட்டலில்தான் தங்கியிருப்பேன்.  அதற்கு முன்னால் ஒருசில வார்த்தைகள். சமீபத்தில் நண்பர்களுடன் சவேரா மூங்கில பாருக்குப் போயிருந்தேன்.  முன்பெல்லாம் அது என் வாசஸ்தலங்களில் ஒன்று.  மதியம் போனால் இரவு பதினோரு மணிக்குத்தான் கிளம்புவேன்.  இப்போது மதுவை நிறுத்திய பிறகு அந்த பாருக்கு பத்தடி முன்னால் உள்ள மால்குடி உணவகத்தோடு நிறுத்திக் கொள்வது.  … Read more

கண்ணதாசன் விருது

கோவை கண்ணதாசன் கழகத்தின் கண்ணதாசன் விருது அடியேனுக்கும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கும் வழங்கப்பட உள்ள செய்தியை முன்பே உங்களிடம் பகிர்ந்திருந்தேன். விழா வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவையில் மாலை ஆறேகால் மணிக்கு நடைபெறும். அழைப்பிதழை இங்கே இணைத்திருக்கிறேன். அனைவரையும் விழாவில் கலந்து கொள்ள அழைக்கிறேன். விழா நடக்கும் இடம்: சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, கோவை