பப்புவின் மறைவு…

நேற்று இரவு முகநூலில் எழுதிய குறிப்பு இது: 12 ஆண்டுகளாக என்னோடும் அவந்திகாவோடும் வாழ்ந்த பப்பு இன்று உயிர் நீத்தது. என்னை அதன் மரணத் துயரத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மூன்று மாதமாக உயிருக்குப் போராடி எங்கள் இருவருக்கும் பயிற்சி அளித்தது. அப்படியில்லாமல் ஸோரோ திடீரென்று ஒருநாள் இறந்து போனதால் மூன்று மாதம் நான் பைத்தியமாக வாழ்ந்தேன். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போனேன் என்பது கூட பிரச்சினை இல்லை. மூளை கலங்கிப் போனதுதான் கொடூரமாக இருந்தது. பைத்திய நிலை … Read more

தண்ணீர்

கடந்த முப்பது ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன்.  சென்னையில் வசிக்கிறேன் என்று பேர்தானே தவிர ஒவ்வொரு ஊருக்கும் உரிய ஏராளமான குணாம்சங்களோடு சென்னையை நான் அறிந்தவன் அல்ல.  சென்னையை விட எனக்கு தில்லி நன்றாகத் தெரியும்.  தில்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கும் எனக்கு அத்துப்படி.  அதற்குக் காரணம், தில்லியின் நான்கு மூலைகளிலும் நான் வசித்திருக்கிறேன்.  கிழக்கு மூலையான கல்யாண்வாஸ், கல்யாண்புரி, திர்லோக்புரியின் (ஞாபகம் இருக்கிறதா?) எதிரே உள்ள மயூர் விஹார், மேற்கு மூலையான பொஸங்கிப்பூர், ஜனக்புரி, தெற்குப் பகுதியான … Read more

NGK

செல்வராகவனின் என்.ஜி.கே. பற்றி கடந்த இரண்டு தினங்களாக ஒரே போன் அழைப்புகள்.  ஒருவர் தன் பிறந்த நாள் அன்று அந்தப் படத்துக்குப் போய் செத்து சுண்ணாம்பாகி வந்திருக்கிறார்.  ராஜப் பிளவை.  எல்லோருமே புதுப்பேட்டை எடுத்த செல்வாவாயிற்றே என்கிறார்கள்.  அப்படி ஒரு கல்ட் ஃபில்மாகியிருக்கிறது புதுப்பேட்டை.  ஆனால் நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருப்பது போலவே தமிழ் இயக்குனர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவே மறுக்கிறார்கள்.  மேற்கில், ஹாலிவுட்டில் 80 வயதில் 20 வயது இளைஞன் எடுப்பது போல் எடுக்கிறான்.  மார்ட்டின் … Read more

ரத்தத்தின் பாதை

இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் இருந்த சுதந்திரம் அத்தனையும் போய் விட்டது. ஜேஎன்யூ போன்ற சர்வகலாசாலைகளில் இந்துத்துவாவின் ஊடுருவல் அதிகமாகி விட்டது. இது பற்றி நடுநிலையான புத்திஜீவிகளும் பேராசிரியர்களும் அறிஞர்களும் என்ன சொல்கிறார்கள் என்றே தெரிந்து கொள்ளாமல் மோடி ஆதரவாளர்கள் பேசிக் கொண்டிருப்பது எனக்குக் கவலை அளிக்கிறது. மோடியை எதிர்க்கும் என்னைப் போன்றவர்கள் எதற்காக இத்தனை கவலைப்படுகிறோம் என்று செவி கொடுத்துக் கேட்பதற்குக் கூட நியாயவாதிகள் தயாராக இல்லை. வாஷிங்டன் போஸ்டின் இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் … Read more

தலைமுறைகள்…

மேற்கண்ட இணைப்பில் லவ் ஷாட் என்ற பாடலைப் பற்றியும் கே.பாப் பற்றியும் எழுதியிருந்தேன் அல்லவா?  அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.  அந்தக் குறிப்பு வந்தவுடனேயே அராத்து ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார்.  அந்தப் பாடல் தொடங்கிய அடுத்த கணம் அவர் மகள் இமையா – வயது 12 – ஆ, எக்ஸோ என்று சொன்னாளாம்.  உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கும் தென் கொரிய இசைக் குழு எக்ஸோ.  எக்ஸோவின் பாடல்தான் லவ் ஷாட்.  இப்படியாகத்தான் நான் இளைஞர்களோடு சிறுவர்களோடு தொடர்பு கொள்கிறேன்.  … Read more

ஆமாஞ்சாமி

சென்ற 2014 தேர்தலில் மோடியை நான் தீவிரமாக ஆதரித்தவன் என்பதை மறந்து விடாமல் பின்வரும் விஷயங்களை வாசியுங்கள்.  அப்போது மோடியை ஆதரித்ததற்காக மிகக் கேவலமான வசைகளை வாங்கிக் கட்டிக் கொண்டவன் நான்.  அது கூடப் பரவாயில்லை.  மோடி எதிர்ப்பாளர்கள் என் நண்பர்களை மிரட்டி எனக்குக் கிடைத்த உதவியை நிறுத்தி என் வயிற்றில் அடித்தார்கள்.  துக்ளக்கிலிருந்து விடை பெறும்போது சோ சொன்னார், ”உங்கள் கட்டுரைகளுக்கு பெருத்த வரவேற்பு இருந்தது; உங்கள் கட்டுரை வர ஆரம்பித்த பிறகு துக்ளக்கை பெண்கள் … Read more