கடல் கன்னி

ரொஹேலியோ சினான் பனாமா நாட்டைச் சேர்ந்த Bernardo Domínguez Alba என்பவரின் புனைப்பெயர் ரொஹேலியோ சினான் (Rogelio Sinán 1902-1994). 1938-ஆம் ஆண்டு கல்கத்தாவில் பனாமா நாட்டுத் தூதராக நியமிக்கப்பட்டவர். பிறகு தொடர்ந்து பல ஆசிய நாடுகளில் பனாமாவின் தூதராக இருந்தார். பனாமா திரும்பிய பிறகு பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராக இருந்தார். கவிதை, நாடகம், நாவல் மற்றும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது ‘சிவப்புத் தொப்பி’ என்ற கதை இங்கே ‘கடல் கன்னி’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  இந்தக் … Read more

காந்தியின் ஆசீர்வாதம்

ஃபெப்ருவரி பத்தாம் தேதி எழுதிய இந்தக் குறிப்பை சாரு ஆன்லைனில் பதிவேற்றம் செய்தேனா என்று ஞாபகம் இல்லை.  ஏற்கனவே படித்தவர்கள் க்ஷமிக்கவும். *** எழுத்தாளன் என்றால் யார்?  அவன் என்ன பிஸினஸ்மேனா?  ஒரு பிஸினஸ்மேனுக்கு உரிய லாவகங்களும் நெளிவுசுளிவுகளும் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டுமா?  அவன் தன் காலத்திய பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போக வேண்டுமா? என் ஆசான்கள் என நான் கருதும் ஒருத்தர் கூட அப்படி வாழவில்லையே?  அம்மா வந்தாள் என்ற நாவலில் குடும்பத்தின் … Read more

கமீலா

கமீலா கபேயோ (Camila Cabello) கூபாவில் பிறந்தவர் எனினும் சிறு வயதிலேயே பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறியவர்.  பிறவிப் பாடகி.  இவரது பாடும் முறையைக் கேட்கும் போது எனக்கு மைக்கேல் ஜாக்ஸன் ஞாபகம் வருகிறது.  முக்கியமாக ஹபானா என்ற பாடலையும் Crying in the Club என்ற பாடலையும் கேட்டுப் பாருங்கள்.  அமெரிக்கா வந்தால் கமீலாவின் லைவ் கான்ஸர்ட்டைக் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  அமெரிக்க வாழ் நண்பர்கள் யாரேனும் இந்த மகத்தான பாடகியைக் கேட்டிருக்கிறீர்களா?

குற்றங்கள் நடுவே பிறந்த ஞானி

ஃப்ரெஞ்ச் இலக்கியத்தின் ஞானி என்றும் கிரிமினல் என்றும் அழைக்கப்பட்ட ஜான் ஜெனே, 1910-ஆம் ஆண்டு பாரிஸில் 21 வயது பாலியல் தொழிலாளி ஒருவருக்குப் பிறந்தார். அவர் ஏழு மாதக் குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தாய் இறந்துபோனதால் அரசாங்கத்தின் அனாதை இல்லங்களில் வளர்ந்தார். அப்பா யார் என்று தெரியாது. அனாதை இல்லத்திலிருந்த சிசுவை ஒரு தச்சர் குடும்பம் தத்தெடுத்தது வேறு ஓர் ஊருக்கு எடுத்துச் சென்றது. பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த ஜெனே, வெளியே எல்லா ‘கெட்ட பழக்கங்’களையும் … Read more

சீனத்துக் குதிரைகள்

இப்போதைய பாராளுமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக இருக்கப் போவது எது என்று அர்னாப் கோஸ்வாமி தலைமையில் விவாதம்.  கமல்ஹாசன் மற்றும் ஸ்மிருதி இரானி. இதற்கு முந்தைய தேர்தலில் மையப் பொருளாக இருந்தது எது என்பதைப் பார்த்தால் இப்போதைய தேர்தலின் விவாதப் பொருளைப் புரிந்து கொள்ளலாம்.  கடந்த தேர்தலில் ஊழலும் விலைவாசி உயர்வுமே பிரச்சினையாக இருந்தது. ஊழலுக்கு எதிராகவே மக்கள் அலையாகத் திரண்டு மோடிக்கு வாக்களித்தனர். மக்கள் எதிர்பார்த்தது போலவே இந்த ஆட்சியில் காங்கிரஸ் அளவுக்கு (2 ஜி) … Read more