ரெண்டாம் ஆட்டம் இலவசம்…

www.amazon.in/ebook/dp/B07DCZYRB3 26 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு நாடக விழாவில் நான் போட்ட ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது கொதித்து எழுந்த பார்வையாளர்கள் நாடகத்தை இயக்கிய என்னையும் நடிகர்களையும் அடித்துத் துவைத்து விட்டனர். பார்வையாளர்கள் யாரும் லும்பன் அல்ல; அவர்கள் அனைவருமே நாடகத் துறையைச் சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், ஆக முக்கியமாக கம்யூனிஸ்டுகள். அடி பலமாக விழுந்தது. தடுக்கப் போன கே.ஏ. குணசேகரனும் அடிபட்டார். வளாகத்தில்தானே அடிக்கக் கூடாது, வெளியே வா, அடிப்போம் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – 3 முன் பதிவுத் திட்டம்

”என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். அப்படி இருந்தும் இந்தச் செயலில் என் ஆத்மாவே ஈடுபட்டிருப்பதைப் … Read more

ரெண்டாம் ஆட்டம் – இலவசமாக

  சனி மற்றும் ஞாயிறு அன்று கிண்டலில் ரெண்டாம் ஆட்டம் நூலை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம். https://www.amazon.in/ebook/dp/B07DCZYRB3 ***   ரெண்டாம் ஆட்டம் நூலுக்கு எழுதிய முன்னுரை: நான் அடிக்கடி சொல்லி வருவது போல் என்னுடைய எழுத்து வெறுமனே படித்து இன்புறுவதற்கான பண்டம் அல்ல. ஒரு கலாச்சார அரசியல் செயல்பாட்டின் அங்கமாகவே என் எழுத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். நான் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறேன். ’எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ என்ற நாவலிலிருந்து … Read more

கஸல் காஸின் கவிதை

நிசிகளின் பிரேத கணங்களில் ஒன்று நான் உறங்கியிருக்க வேண்டும் அல்லது உன்மத்தங்களின் பிடியில் லயித்திருக்க வேண்டு்ம்.. நான் வெறுமனே இந்த இரவை பார்த்திருக்கிறேன்.. பச்சைகட்டங்கள் சூழ்ந்திருக்கும் உலகில் எனக்கென்று கேள்விகளும் இல்லை பதில்களும் இல்லை.. நான் மெளனித்திருக்கிறேன்.. நீ கடந்துபோகும் சிலநூறு பெண்களுள் என் பக்கங்கள் சற்று அசுவாரசியமானவை.. நான் சுயமிகள் எடுப்பதில்லை,நீளநீளமாய் கட்டுரைகள் எழுதுவதில்லை..அரசியலும் இலக்கியமும் பேசுவதில்லை மாறாக நான் இருக்கிறேன்.. இருத்தலின் நிமித்தம் இருத்தல்தான் என்பதை முழுதாக நம்புவதால் உங்களின் பரிபாஷனைகளில் நான் ஈடுபடுவதில்லை. … Read more

பிறைகளுக்கான நாளில் உனக்கு ஒரு கடிதம்… கஸல் காஸ்

பிறைகளுக்கான நாளில் உனக்கு ஒரு செய்தி அனுப்பவா.. முதலில் ஆறும் அருவியும் கொட்டும் உன் ஊரின் சௌகரியங்கள் எப்படியென்று சொல்.. இந்த உலகம் தன்பாட்டுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.. உன் சட்டையை மடித்துவிட்டு மீனுக்கு மஞ்சள்தடவி ஊற வைக்கும் நேரத்தில் தேவகுமாரரர்கள் அவதரிக்கிறார்கள்.. மரித்து போதல் பற்றி நீ சடைத்துக்கொண்டு எழுதியிருந்தாய்..மக்களுக்கு மரணம் என்றால் பயம்..உனக்கு அது சாகசம்..உன் அச்சில் அவர்களை பொருத்தாதே..மின்தடை நாட்களில் மெழுகுதிரிகளை ஏற்றும் உலகில் நின்றுக்கொண்டு இருளை வர்ணிக்காதே.. மரித்து போதல் என்பது வளம்.உனக்கு … Read more

பிரார்த்தனை – லக்ஷ்மி சரவணகுமார்

பிரார்த்தனைகளின் மீது நம்பிக்கை இருக்கிறாதென்கிற கேள்வி சமயங்களில் பிறரிடம் இருந்தும் என்னிடமிருந்தே எனக்கும் கேட்கப்படும் பொழுதெல்லாம் எது பிரார்த்தனை என்னும் குழப்பமான எண்ணங்களும் அதோடு வந்துவிடுகிறது. வாழ்வின் பிரதான தேவைகளைத் தேடி கண்டடைய நிகழும் பயணத்தில் நாம் இழந்தவைகளுக்கு ஆறுதல் சொல்வதற்கான ஒரு வழியாய் நினைத்துக் கொள்ளலாமா? அல்லது தனது எதிர்கால கனவுகள் ஒவ்வொரு நாளும் புதிதொன்றாய் மாறிக் கொண்டே இருப்பதும் அதை துரத்தி செல்வதற்கான நம்பிக்கை இழக்கும் தருணங்களில் எல்லாம் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓட … Read more