The Road to Mecca…

பூமியும் மணலும் எரிந்து கொண்டிருக்கின்றன நேசத்தால் காயப்பட்டவர்கள் அனைவருக்கும் முகத்தில் அதன் தடயங்கள் இருப்பது போல் – தணல் உமிழும் மணலில் கடக்கும் சாலையின் மீது உன் முகத்தை வை, அந்த வடு எல்லோருக்கும் தெரியும் வகையில் இருக்க வேண்டும் இதயத்தின் அந்த வடு அனைவராலும் பார்க்கப்பட வேண்டும் நேசத்தின் பாதையில் செல்கின்ற அந்த மனிதர்கள் அவர்களது தழும்பால் அறியபட வேண்டும்… இது யார் எழுதிய கவிதை தெரிகிறதா?  நபிகள் நாயகம்.  கவிதையாக எழுதினதில்லை.  அவரது வாசகங்கள் … Read more

Day 75

அன்புள்ள சாரு, உங்களின் வாழ்வை மாற்றியதாகவும் மேலும் சே குவேராவை தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்தியவருமாகிய நீங்கள் இன்று ஒரு பதிவு செய்தால் நான் மிகவும் மகிழ்வேன். Bolivian Diary புத்தகத்தை நீங்கள் Delhi defence -ல் வேலை செய்த பொழுது படித்ததையும், அந்த புத்தகம் தற்போது கிடைப்பதில்லை என்பதையும் எக்ஸைலில் படித்து அறிந்த பின்னர், நான் உங்களிடம் தானே ஏதாவது அறிய செய்தியை கேட்க முடியும் டாக்டர்.அயெந்தேவின் பதிவினைப் போன்று. Battle of chile பார்த்துக் கொண்டிருக்கிறேன். … Read more

காலா முன்வைக்கும் தலித் உளவியல்

இன்று காலை பா. வெங்கடேசன் பேசினார்.  கமல்ஹாசனின் படங்களை மதிப்பீடு செய்யும் போது என்னிடம் இருக்கும் சீரியஸான மனோபாவம் காலா விமர்சனத்தில் இல்லை என்று சொன்னார்.  உண்மைதான் என்றேன்.  காலா போன்ற ஒரு படத்தை நான் மதிப்பீடு செய்வதே தேவையில்லாததுதான்; ஆனால் அது தமிழக அரசியலோடு மிக நெருக்கமாகப் பிணைந்து விட்டதால் எழுதாமல் இருக்க முடியவில்லை என்று விளக்கினேன்.  பிறகு பா. வெங்கடேசன் சுமார் அரை மணி நேரம் பேசினார்.  பா. வெங்கடேசன் எழுத்தாளர், நாவலாசிரியர் மட்டும் … Read more

விஸ்வரூபம்

ரஜினியிடம் எந்த ஆபத்தும் இல்லை.  அவர் மிகத் தெளிவாகத் தன்னை முன்வைத்துக் கொள்கிறார்.  கொள்கை என்ன என்று கேட்டால் தலை சுத்துது என்கிறார்.  போராட்டக்காரர்கள் சமூக விரோதிகள் என்கிறார்.  அவர் படத்தில் வரும் வில்லன் ஹரி தாதா மாதிரியே நேர் வாழ்வில் பேசுகிறார்.  ஆனால் ஒரு ஆள் நம்மைப் போல் பேசி ஹரி தாதா போல் செயல்படுகிறார்.  அவர்தான் கமல்.  கமல் ஒரு இந்துத்துவா என்றால் என் இந்துத்துவ நண்பர்கள் சிரிக்கிறார்கள்.  அதுதான் கமலின் வெற்றி.  அவரது … Read more

காலா

நேற்று காலா பார்த்தேன். ஸ்ரீராம் மட்டும் பக்கத்தில் இருந்திராவிட்டால் அரை மணி நேரத்திலேயே எழுந்து வந்திருப்பேன். முதல் ஒரு மணி நேரம் தமிழ் டிவி சீரியலைப் போலவே இருந்தது. ரஞ்சித் பாவம் சின்ன பையர். இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு சூப்பர் ஸ்டாருக்கு இப்படியா ஓப்பனிங் சீன் வைப்பார்? பொடிப்பசங்களோடு சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் ஆடுகிறார். முதல் பந்திலேயே க்ளீன் போல்ட். இதுக்கு ஏன் ஐயா சூப்பர் ஸ்டார்? பேசாமல் ராஜ் … Read more

காலா – எண்டெர்டெயின்மெண்டா ? அரசியலா ? – அராத்து

முதலில் எண்டர்டெயின்மெண்ட் :- நான் ரஜினி படங்களை ஜாலியாக ஒரு எண்டர்டெயின்மெண்டாகத்தான் பார்ப்பேன். காலா என்னை இந்த விஷயத்தில் முழுமையாக ஏமாற்றியது. என்னால் தியேட்டரில் உட்காரவே முடியவில்லை. நெளிந்து கொண்டு இருந்தேன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற சுவாரசியம் ஒரு மண்ணும் இல்லை. சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் காட்சிக்கோர்வைகள் நகர்ந்து கொண்டு இருந்தன. சரி , ஒரு நச் காமடி , இல்லை , ஹீரோ – வில்லன் புத்திசாலி விளையாட்டுக்கள் என்று ஒன்றுமே இல்லை. ஏன் … Read more