விசாகப்பட்டினத்தில் ’ராஸ லீலா’…

நண்பரும் வாசகருமான அருண்குமார் விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். அங்கே ஒரு சிறிய நூலகமும் ஒரு வாசகர் சங்கமும் உள்ளன. அங்கே மாதத்தில் இரண்டு முறை புத்தக மதிப்புரை தொடர்பான வாசகர் சந்திப்பு நடந்து வருகிறது. இதுவரை பதினோரு புத்தகங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். அந்த நூலகத்தின் உரிமையாளர் ஹரி இந்த முறை ஏதாவது ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் பற்றி மதிப்புரை செய்யலாமே என்கிறார். இதுவரை அங்கே ஆங்கிலம் மற்றும் தெலுங்கு நூல்கள் மட்டுமே மதிப்புரைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. சென்ற வாரம் நண்பர் … Read more

காளியின் நர்த்தனம்…

இணைய தளத்தின் பக்கம் வந்து ஒரு மாதம் இருக்கும். ஸ்ரீராம்தான் என் உரைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நான் ஏஷியன் ரெவ்யூ இதழுக்காக மை லைஃப், மை டெக்ஸ்ட் என்ற என் சுயசரிதையை எழுதிக்கொண்டிருந்தேன். இருபது அத்தியாயங்கள் எழுதி விட்டேன். ஆங்கிலத்தில் எழுதுவதால் நேரம் எடுக்கிறது. தமிழ் என்றால் சிந்தனை வேகத்துக்கு கை பாயும். ஆங்கிலத்தில் கை காத்திருக்கிறது. இடையில் இன்று ஒரு சம்பவம் நடந்தது. நான் 1999 இல் எழுதிய உன்னத சங்கீதம் என்ற சிறுகதையை … Read more

இனிமேல் மம்முட்டி படங்களுக்கு மட்டும் வசனம் எழுத முடிவெடுத்திருக்கிறேன்…

ஊரே கொண்டாடுகிறதே என்று பிரம்மயுகம் படத்துக்குப் போனேன். ஏற்கனவே இப்படி ஊரே கொண்டாடுகிறதே என்று மம்முட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தைப் பார்த்து பதினைந்து நிமிடத்திலேயே நிறுத்தி விட்டேன். அப்படி ஒரு துர்சம்பவம் நடந்தும் பிரம்மயுகத்துக்குப் போனது என்னுடைய முட்டாள்தனம்தான். அப்படியும் சொல்ல முடியாது. என் நெருங்கிய நண்பர் ட்டி.டி. ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருப்பதால் அது எப்படி இருக்கிறது என்று பார்ப்பதும் என் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம் மட்டும் நிறைவேறி விட்டது. அடுத்து … Read more

My Life, My Text (Episode 01)

ஆங்கிலத்தில் நான் எழுதிய முதல் எழுத்து. இது கட்டுரை அல்ல. கதையும் அல்ல. சுயசரிதை. என் எழுத்தைத் தமிழில் பல காலமாகப் படித்து வந்திருக்கும் நண்பர்கள் இந்த முதல் அத்தியாயத்தைப் படித்ததும் என்னிடம் ஒரே விதமான கருத்தைக் கூறினார்கள். என் எழுத்தை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும்போது அது என்னதான் அட்டகாசமான மொழிபெயர்ப்பாக இருந்தாலும் அதில் நான் கம்மியாகவே தெரிகிறேனாம். ”சாருவின் அட்டகாசம், சாருவின் துள்ளல், சாருவின் கொண்டாட்டம், குசும்பு, நையாண்டி, எள்ளல் எல்லாமே அதில் காணாமல் போய் … Read more

கவிஞர் ஆசையின் உலக சாதனைக்கு வாழ்த்துக்கள்

கவிஞர் ஆசை கடந்த 105 மணி நேரத்தில் 174 கவிதைகளை எழுதி முடித்திருக்கிறார். சில கவிதைகளைப் படித்தேன். பரவசத்தின் உச்சம். களிவெறியின் உச்சம். பித்தநிலையின் உச்சம். அவர் திரும்பவும் லௌகீக உலகுக்கு வந்து விட பிரார்த்திக்கிறேன். இன்னொரு விஷயமும் உண்டு. இதையே வேறு ஏதாவது ஒரு மொழியில் யாராவது ஒரு கவிஞன் செய்திருந்தால் அது உலக அளவில் செய்தியாகி இருக்கும். தமிழர்கள் ஒரு ஃபிலிஸ்டைன் சமூகமாக வாழ்கிறார்கள். இங்குள்ள இளவட்டமோ நரகலை வண்டுகள் உருட்டிச் செல்லும் அல்லவா, … Read more

சலுகை விலையில் புத்தகங்கள்

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் நாளையும் (14 ஃபெப்) நாளை மறுநாளும் முப்பது சதவிகிதத் தள்ளுபடியின் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். பயன்படுத்திக் கொள்ளுங்கள். விவரங்களுக்கு: Zero Degree Publishing – Book Publishing Company – Zero Degree Publishing 1