கல்ச்சர் வல்ச்சர் – 1

நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற தலைப்பில் மின்னம்பலம் இணைய இதழில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் எழுதி வருகிறேன்.  இன்றைய தினம் கல்ச்சர் வல்ச்சர் என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை.  இதன் அடுத்த பகுதி நாளை வெளிவரும்.  கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் விதமாக இந்தக் கட்டுரையை வெளியிட்ட மின்னம்பலம் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழு நண்பர்களுக்கும் என் நன்றி.  இந்தக் கட்டுரைக்காக பிரத்தியேகமாக புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்த என் அன்புக்கும் பிரியத்துக்கும் உரிய பிரபு காளிதாஸுக்கும் விசேஷ நன்றி.  விசேஷம் ஏன் என்றால், மற்றவர்களைப் போலவே அவருமே ஜல்லிக்கட்டு விஷயத்தில் என் கருத்துக்கு நேர் எதிர் நிலையில் இருப்பவர்.  தீவிர ஜல்லிக்கட்டு ஆதரவாளர்.  இருந்தும் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் அவருடைய நல்ல குணத்துக்கு நன்றி.

என் வீட்டில் அவந்திகா ஜல்லிக்கட்டின் தீவிர ஆதரவாளர்.  எந்நேரமும் ஜல்லிக்கட்டு பேச்சுதான்.  ஆனால் நான் வாயே திறப்பதில்லை. மௌனத்தைக் கடைப்பிடிப்பதை ஒரு ஆன்மீகப் பயிற்சியாக மேற்கொண்டு வருகிறேன்.

http://minnambalam.com/k/1485109801