
October 31st, 2011
எக்ஸைல் நாவல் எங்கே கிடைக்கும் என்று கேட்டு பல நண்பர்கள் எழுதியுள்ளனர். பின் கண்டுள்ள இணைப்பில் இது சம்பந்தமான எல்லாத் தகவல்களும் உள்ளன.
புத்தகத்தின் அட்டை இப்போதைக்குத் தற்காலிகமாக வடிவமைக்கப்பட்டதை நீங்கள் காண்கிறீர்கள். விரைவில் அட்டை தயாரானதும் அதுவும் மேற்கண்ட இணைப்பில் இடம் பெறும்.
வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எழுதலாம்.
charu.nivedita.india@gmail.com
எக்ஸைல் கிடைப்பது பற்றிய முழு விபரங்கள்: https://www.nhm.in/shop/978-81-8493-204-1.html
நண்பர்கள்/வாசகர்கள் யாவரும் முன்பதிவுத் திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று {!–more–>}

January 27th, 2012
வரும் 4-ஆம் தேதி சனிக்கிழமை பின்மதியம் 2 மணியிலிருந்து 5 மணி வரை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் எக்ஸைல் விமர்சனக் கூட்டம் நடைபெறும். வாசக நண்பர்கள் வந்து கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறேன். இது குறித்து சற்று நேரத்துக்கு முன்னால் என் நண்பரிடம் பேசினேன். அபசகுனமாக மூன்று விஷயங்கள் சொன்னார். நல்லது. எல்லாவற்றையும் மீறித்தான் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இறையருளின் உதவியும், வாசகர்களாகிய உங்களுடைய நல்லன்பும் மட்டுமே என் பலம். திரும்பவும் சொல்கிறேன். {!–more–>}

January 23rd, 2012
இதை எழுதுபவர் யார் என்று தெரியவில்லை. “இங்கே வந்திருக்கும் மற்ற எழுத்தாளர்களைப் போல் நான் ஆக்ஸ்ஃபோர்டிலோ கேம்ப்ரிட்ஜிலோ செய்ண்ட் ஸ்டீஃபன்ஸிலோ படித்தவன் அல்ல; நான் ஒரு கல்லூரி ட்ராப் அவ்ட்” என்று சொன்ன போது முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு அழகிய இளம் பெண் எழுந்து நின்று, “thats why we like you” என்று சொன்னார். அவர்தான் இதை எழுதுகிறாரோ என்று சந்தேகமாக உள்ளது. செஷன் முடிந்து அந்தப் பெண் வந்து கை குலுக்கியபோது அவர் பெயர் {!–more–>}

January 22nd, 2012
ugly words என்ற புனைப்பெயரில் ஜெய்ப்பூர் இலக்கிய விழா பற்றி எழுதியிருப்பவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய அவதானிப்பு மிகவும் கூர்மையாக இருக்கிறது. சேரன் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று தவறாகச் சொன்ன ஷோமா அது பற்றி ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை என்பதை நானும் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அடுத்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே நீண்ட நேரம் பேசினார்கள். எங்களைப் பேசவே விடவில்லை. உங்கள் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுங்கள் என்று நமீதா பாமாவைப் பார்த்து கேட்டு நிகழ்ச்சியைத் {!–more–>}

January 22nd, 2012
ஆங்கிலத்தில் என்னுடைய ஒரே ஒரு நாவல்தான் வந்துள்ளது. அதேபோல் சிறுகதையும் ஒன்றே ஒன்றுதான் வந்துள்ளது. தெஹல்கா சிறப்பிதழில் அந்த சிறிப்பிதழுக்காகவே எழுதப்பட்ட கதை. நான் தமிழில் எழுதி, ப்ரீதம் சக்ரவர்த்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது. தமிழ் வடிவம் இன்னும் பிரசுரமாகவில்லை.
என் எழுத்து இன்னும் அதிகமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று இப்போதெல்லாம் மிகுந்த பதற்றத்துடனேயே யோசிக்கிறேன்; கவலைப் படுகிறேன். நான் இங்கே ஜெய்ப்பூரில் சந்திக்கும் அத்தனை பேருமே மார்க் கீப்பர் கதையைப் படித்திருக்கிறார்கள். சிலாகித்தும் பேசுகிறார்கள். ஒரு பிரபலமான ஆங்கில {!–more–>}

January 19th, 2012
அப்படியே விட்டு விடுவார்கள் என்று நினைத்தேன். கடைசியில் விடவில்லை என்று தெரிகிறது. நானும் மிஸ்டர் அராத்துவும் கலந்து கொண்ட ‘ஒரு சொல் ஒரு லட்சம்’ நிகழ்ச்சி விஜய் டிவியில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகப் போகிறது.
அராத்து சொன்ன ஒரு க்ளூவைக் கூட கண்டு பிடிக்க முடியாமல் நான் திணறுவதை {!–more–>}

January 17th, 2012
நான் தொலைக்காட்சியே பார்ப்பதில்லை. நான் வரும் நிகழ்ச்சியையாவது பார்க்கலாம் என்று கண் விழித்துப் பார்த்ததில் லேசாக உடம்பு வலி வந்து விட்டது. டாக்டரிடம் கேட்டு ஓவரான் மாத்திரை சாப்பிட்டேன்.
இந்த லிங்கைப் படித்துப் பாருங்கள். நான் மட்டும் அரசியல் கட்சி ஆரம்பித்தால் இவரைத்தான் {!–more–>}

January 16th, 2012
நேற்று விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா பார்த்தீர்களா? பத்து மணி வரைக்கும் கூட ஒளிபரப்பாகவில்லை என்பதால் நான் தூங்கி விட்டேன். நண்பர்கள் சொன்னார்கள், மிட் நைட்டில் ஒளிபரப்பாகியது என்று. நல்லது. யூட்யூபில் கிடைத்தால் பார்க்கலாம்.
இன்று புத்தக விழாவுக்கு வருவேன். மாலை ஆறு மணிக்கு F.35 ஸ்டாலில் வாசகர் கலந்துரையாடல் உள்ளது. அதில் கலந்து கொள்கிறேன். இந்த ஸ்டால் ஞாநியின் ஸ்டாலுக்குப் பக்கத்துத் தெருவில் உள்ளது. ஞாநியின் ஸ்டால் எண் 310. வாசகர்கள் எடக்கு முடக்காகக் கேள்விகள் கேட்டால் என்ன {!–more–>}

January 15th, 2012
”எனக்கே எனக்காக எழுதுவதைப் பற்றி என்ன சொல்ல முடியும் ? எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை – எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்லவேண்டுமென்றால் பிறர் மனைவியைக் காதலிக்கற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ, உங்களுக்கும், எனக்கும் எழுதும் பொழுதோ, மனைவியைக் {!–more–>}