வைர சூத்திரத்தின் விலை

ஏற்கனவே பல முறை எழுதிய விஷயம்தான்.  மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது.  ஒரு இணைய இதழில் நான் கொடுத்த மிக நீண்ட நேர்காணலை நீங்கள் படித்திருப்பீர்கள்.  என் எழுத்து வாழ்விலேயே எனக்கு அதிக எதிர்வினைகள் வந்தது அந்த நேர்காணலுக்குத்தான்.  அதற்கு முன்பு ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையின் இணைய இதழில் கோணல் பக்கங்கள் என்ற பத்தியை எழுதியபோதுதான் அந்த அளவுக்கு எதிர்வினைகள் வந்தன.  அந்த நீண்ட நேர்காணல் ஒரு நூறு பக்க புத்தகமாக வரும்.  நூறு பிரதிகள் விற்கும்.  எனக்கு அதன் மூலம் ஆயிரம் ரூபாய் ராயல்டி கிடைக்கும்.  நேர்காணல் வந்த … Read more

Itipiso Bhagawa

“அண்மையில் பெட்டியோ நாவல் படிக்கும் போது இந்தப் பாடலை கேட்டேன். இதுவரை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கில்லை. Pure Bliss.” என் வாரிசுகளில் ஒருவனாகிய வளன் அரசு ஃபேஸ்புக்கில் மேற்கண்ட வாக்கியத்தை எழுதியிருக்கிறான். வளன் ஒரு பாதிரியாராக இருந்தாலும் எல்லா மதங்களையும் எல்லா தீர்க்கதரிசிகளையும் மதிப்பவன். என் வாரிசாகிய ஒருவன் அப்படித்தானே இருக்க முடியும்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதுதானே என் மதம்? வளன் அரசுவின் யூதாஸ் நாவலை நீங்கள் வாசித்துப் பார்க்க வேண்டும். … Read more

ஓர் உரையாடல்

இந்த உரையாடல் மற்றவற்றை விட நன்றாக வந்திருப்பதாகத் தெரிகிறது. கேட்டுப் பாருங்கள். அரை மணி நேரம். https://www.swellcast.com/harpercollins/bf3c756e-27a2-4a19-bc5b-38da8d786752/talkto-charu-nivedita-author-conversations

சுதந்திர காலம்

வரும் சனிக்கிழமை மதியத்திலிருந்து ஒரு பத்து தினங்கள் எனக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது.  அவந்திகா மும்பை செல்கிறாள்.  சுதந்திர காலத்தில் நான் அதிகம் எழுத மாட்டேன் என்பதுதான் ஒரே வருத்தம்.  என்னால் சிறையில்தான் அதிகம் எழுத முடிகிறது என்பதை அவதானம் செய்து வைத்திருக்கிறேன்.  சுதந்திர காலத்தில் இசை கேட்பேன்.  நான் வாழும் தாலிபான் சிறையில் இசைக்குத் தடை.  வைன் அருந்துவேன்.  சிறையில் வைனுக்கும் தடை.  நண்பர்களுடன் ஃபோனில் பேசுவேன்.  சிறையில் ஃபோனுக்குத் தடை இல்லை.  ஆனால் நான் யாருடனெல்லாம் … Read more

எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்? – 2

இதே தலைப்பில் உள்ள முந்தைய கட்டுரையைப் படித்து விட்டு இதைத் தொடரவும். முந்தைய கட்டுரை: எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்? – Charu Nivedita (charuonline.com) அந்தக் கட்டுரையில் சொல்ல மறந்த இன்னொரு விஷயம் இது: சென்ற வாரமோ என்னவோ நான் சீலே செல்வது பற்றியும், அதற்குத் தேவையான பணம் பற்றியும் எழுதியிருந்தேன். ஒருவர் கூட – ஆம், ஒருவர் கூட – ஒரு ரூபாய் கூட அனுப்பவில்லை. ஆனால் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சீலே … Read more