Morgue Keeper [Kindle Edition]

Buy Exile from New Horizon Media

அடியேனைப் பற்றி அராத்து

பின்வரும் பொன்மொழிகள் அடியேனைப் பற்றி அராத்து எழுதியிருப்பது.

சாரு நிவேதிதாவை பற்றி பெரும்பாலும் நான் எங்கும் எழுதுவதில்லை.அவர் என்னை அடிக்கடி பாராட்டி தள்ளி சாருவை தெரிந்த அனைவருக்கும் அராத்துவையும் தெரியும்படி வைத்து விட்டார். சச்சின் லோக்கல் கிரவுண்டில் ஆடும் ஒரு சிறுவனை பாராட்டுகிறார் என வைத்துக்கொள்வோம் , பதிலுக்கு அந்த பயலும் சச்சின் திறமையான ஆட்டக்காரர் என பாராட்டினால் எப்படி ? அந்த லூஸுத்தனத்தையும் வலிய போய் ஏன் செய்யணும் என்றுதான். அ:அடுத்து , இணையத்தில் பலராலும் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகும் ஆள் , தினமும் பலராலும் வெறி கொண்டு கெட்ட வார்த்தையால் திட்டு வாங்கும் ஆள் .

நான் எங்கும் போய் இது விஷயமாக

Continue reading அடியேனைப் பற்றி அராத்து

50 Writers 50 Books

50 Wrtiers 50 Books என்ற புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  Harper Collins பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது.  இந்தியாவின் மிகச் சிறந்த ஐம்பது புத்தகங்களில் ஒன்றாக ஸீரோ டிகிரியும் தெரிவு செய்யப்பட்டு அதைப் பற்றி ஒரு கட்டுரையும் இந்த நூலில் உள்ளது.  இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர்களில் ஒருவரான Chandra Siddan தான் ஸீரோ டிகிரி பற்றிய கட்டுரையையும் எழுதியிருக்கிறார்.  அந்தக் கட்டுரையின் தலைப்பு என்ன தெரியுமா?  Dick wants (to be) Cunt  எவ்வளவு பொருத்தமான தலைப்பு பாருங்கள்!  இதில் என்ன விசேஷம் என்றால், தமிழ் இலக்கியத்தில் சிறந்த புத்தகங்களைத் தெரிவு செய்த யாரும் என் புத்தகத்தைத் தெரிவு செய்யவில்லை.  500 ஆண்டுகள் ஆனாலும்

Continue reading 50 Writers 50 Books

இமயமலைப் பயணம் (2)

மே 17, 18 தேதிகளில் மாசாணி அம்மனை தர்ஸித்து விட்டு 19-ஆம் தேதி காலை பத்து மணி அளவில்  பொள்ளாச்சியிலிருந்து நெல்லியம்பதி கிளம்புகிறேன்.  நெல்லியம்பதி ஒரு அற்புதமான மலை வாசஸ்தலம்.   திருப்பூரில் எனக்கு அலெக்ஸ் என்று ஒரு நண்பர் உண்டு.  வருஷத்துக்கு ஒருமுறை தொடர்பு கொண்டு சந்திப்போம்.  இப்போது நான் பொள்ளாச்சி வருவது அறிந்து தொடர்பு கொண்டார்.  அவருடன்  19 காலை பத்து மணி அளவில் கிளம்பி நெல்லியம்பதி செல்கிறேன்.  அன்று பூராவும் மறுநாள் காலையும் நெல்லியம்பதியிலேயே இருந்து விட்டு மதியம் போல் கோவை கிளம்புகிறேன்.  கோவைக்கு மதியம் மூன்று மணி அளவில் வருவேன்.  அங்கே அன்று மாலை நண்பர்களை சந்திப்பேன்.  மறுநாள் காலை

Continue reading இமயமலைப் பயணம் (2)

இமயமலைப் பயணம்

அடுத்த வருடம் ஜூலை மாதம் காசா கல்பா கேலாங்க் லே ல்டாக் ஶ்ரீநகர் போன்ற இடங்களுக்கு பைக்கில் பயணம் போகலாம் என்பது அராத்துவின் யோசனை.  சில நண்பர்கள் வருவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர்.  வர விரும்புபவர்கள் தனியாக பைக் எடுத்து வரவேண்டும்.பில்லியன் பயணம் வேலைக்காகாது என்று எழுதியிருக்கிறார் அராத்து.   சிறந்த பைக்குகள் – பல்சர், அவெஞ்சர், என்ஃபீல்டு , ஹார்லி டேவிட்ஸன்.

எனக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது.  அதனால் பல்ஸர் போன்ற பெயர்களையும் அறியேன்.  அந்தக் காலத்தில் அட்லஸ் என்ற பெயரில் ஒரு சைக்கிள் இருந்தது.  இப்போதெல்லாம் ஒரு லட்சம் ரூபாய்க்கு சைக்கிளும், 30 லட்சம் ரூபாய்க்கு பைக்கும் இருப்பதாக அறிகிறேன்.  சைக்கிளுக்கே கியர்

Continue reading இமயமலைப் பயணம்

கோவை: வாசகர் சந்திப்பு

மாசாணி அம்மனை தர்ஸித்து விட்டு 19-ஆம் தேதி மாலை கோவை வருவேன்.  20 முழுவதும் கோவையில் இருப்பேன்.  அப்போது வாசக நண்பர்களை சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

charu.nivedita.india@gmail.com

மாசாணி அம்மன்

17, 18, 19 தேதிகளில் மாசாணி அம்மனை தர்ஸிக்க ஆனைமலை செல்ல இருக்கிறேன்.  அந்தத் தேதிகளில் பொள்ளாச்சியில் இருப்பேன்.  ஆனைமலையில் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமண குகை இருப்பதாகவும் அறிகிறேன்.  அங்கேயும் போக வேண்டும்.  ஆதலால்,  இந்தத் தேதிகளில் என்னால் நண்பர்களை சந்திக்க முடியாது என்று நினைக்கிறேன்.  அதனால்  20, 21 தேதிகளில் கோவையில் தங்கலாமா என்று யோசிக்கிறேன்.  21-ஆம் தேதி விமானத்தைப் பிடித்து சென்னைக்கு வந்து விடலாம் என்று திட்டமிடுகிறேன்…  கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

charu.nivedita.india@gmail.com

50 writers; 50 books: the best of indian writing

Pradeep Sebastian மற்றும் Chandra Siddan இருவரும் தொகுத்த இந்தப் புத்தகம் harpers collins மூலம் வெளிவந்துள்ளது.

லிங்க்: http://www.harpercollins.co.in/BookDetail.asp?Book_Code=3730

another link: http://pinterest.com/pin/277675133247623713/

இந்தத் தொகுப்பில் தமிழிலிருந்து ஸீரோ டிகிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டு அதைப் பற்றிய கட்டுரை ஒன்றும் வந்துள்ளது.  கொஞ்சம் நேரம் முன்பு பெங்களூரிலிருந்து நண்பர் தியோடர் பாஸ்கரன் என்னை போனில் அழைத்து இந்தச் செய்தியைச் சொன்னார்.  இந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஞானம் (2)

நேற்று அவசரமாக எழுதியதில் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன. இன்னமும் இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட அந்த அதிர்ச்சியிலிருந்து நான் மீளவில்லை.  கோபிநாத்தின் புத்தகம் இரண்டு லட்சம் விற்கிறது.  என் புத்தகம் இருநூறு பிரதி விற்கிறது.  என்னடா உலகம் இது என்ற அதிர்ச்சி.  அதில் இந்த ஆன்மீகவாதிகள் செய்யும் அக்குறும்பு வேறு சகிக்கவில்லை.  தியான வகுப்பு முடிந்து வந்திருந்த நாற்பது பேருக்கும் கோபிநாத்தின் புத்தகத்தை அன்பளிப்பு கொடுக்கும் கொடுமை!  இந்த ஆன்மீகவாதிகள் எப்படி ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?  24 மணி நேரமும் தொலைக்காட்சியைப் பார்த்து தொலைக்காட்சி அடிமைகளாக இருப்பவர்களுக்கு எப்படி ஆன்மீகம் வரும்?  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவை மிக விரசமானவை.  ஆபாசமானவை.  அதில்

Continue reading ஞானம் (2)

மாசாணி அம்மன்

மே மாதம் 17, 18, 19 தேதிகளில் நான் பொள்ளாச்சியில் தங்கி இருப்பேன்.  ஆனைமலையில் உள்ள மாசாணிஅம்மனை தரிசிப்பதற்காகச் செல்கிறேன்.  என்னோடு வர விருப்பம் உள்ளவர்கள் என்னைச் சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

charu.nivedita.india@gmail.com

ஞானம்

அன்புள்ள சாரு,

உங்களுக்கு தமிழ்நாட்டில் / இந்தியாவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று புலம்புவதை நீங்கள் என்றைக்கு நிறுத்தப் போகிறீர்கள்?

கிராமத்து சந்தையில் பொருள் விலை போகவில்லை என்றால் ஒரு வியாபாரி என்ன செய்வான்? எங்கே விலை கிடைக்குமோ அங்குதானே கொண்டுபோவான்?

உங்கள் எழுத்து உங்களுக்கு சம்பாதித்து தரவேண்டுமானால் நீங்கள் அதற்கான இடத்தில் விற்பனை செய்ய ஏன் முயற்சிக்கவில்லை? இன்றைய தேதியில் சினிமாதான் அதற்கு தோதான இடம்.

உங்கள் புலம்பலும் தற்பெருமையும் சகிக்கவில்லை. உங்கள் எழுத்துலக தொடர்புகளை வைத்து சினிமா உலகத்துக்குள் நுழைய பாருங்கள். இல்லையென்றால் உங்கள் ஆயுள் முழுவதும் நீங்கள் ஏழை எழுத்தாளர்தான். ஏழையாக பிறப்பது நம் தவறில்லை. ஏழையாக மரிப்பது நம் தவறு

Continue reading ஞானம்