|
|
 October 31st, 2011
எக்ஸைல் நாவல் எங்கே கிடைக்கும் என்று கேட்டு பல நண்பர்கள் எழுதியுள்ளனர். பின் கண்டுள்ள இணைப்பில் இது சம்பந்தமான எல்லாத் தகவல்களும் உள்ளன.
புத்தகத்தின் அட்டை இப்போதைக்குத் தற்காலிகமாக வடிவமைக்கப்பட்டதை நீங்கள் காண்கிறீர்கள். விரைவில் அட்டை தயாரானதும் அதுவும் மேற்கண்ட இணைப்பில் இடம் பெறும்.
வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எழுதலாம்.
charu.nivedita.india@gmail.com
எக்ஸைல் கிடைப்பது பற்றிய முழு விபரங்கள்: https://www.nhm.in/shop/978-81-8493-204-1.html
நண்பர்கள்/வாசகர்கள் யாவரும் முன்பதிவுத் திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று {!–more–>}
 February 3rd, 2012
என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் சுவாரசியமாகப் பேசியதில்லை. நண்பர்களுக்கு நன்றி கூறுவதும், தமிழ்நாட்டில் எழுத்தாளனாக வாழ்வதன் துயரம் பற்றிய சுய புலம்பலும்தான் அதில் இருக்கும். இதற்கு முதல் காரணம், நாவலை எழுதி முடித்த மனச் சோர்வு. மேலும், நாவலைப் பற்றியும் விரிவாகப் பேச முடியாத நிலை. ஆனால், நாளை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடக்கும் எக்ஸைல் விமர்சனக் கூட்டத்தில் கடுமையாகப் பேச இருக்கிறேன். ரஜினிகாந்துக்கு சில கேள்விகளும் உள்ளன.
பத்திரிகையாளர் நண்பர்களுக்கு நான் தனியாக அழைப்பு அனுப்ப முடியவில்லை. {!–more–>}
 February 2nd, 2012
Pareeksha
presents
Ramaavum Umaavum
featuring actors Fathima Babu, Vinodhini and Gnani in
a play-reading of script by Tamil writer Dilip Kumar.
Direction: Gnani
February 5, 2012, Sunday at 6 pm at Spaces, 1, eliot beach road, besant nagar, chennai 90.
the play is about an ordinary writer and two ordinary women who together live under extraordinary circumstances of literature and sexuality.
———————————
பரீக்ஷா
வழங்கும்
ரமாவும் உமாவும்
நடிகர்கள் பாத்திமா {!–more–>}
 February 2nd, 2012
 January 30th, 2012
வரும் 4-ஆம் தேதி சனிக்கிழமை பின்மதியம் 2 மணிக்கு சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் எக்ஸைல் விமர்சனக் கூட்டம் நடைபெறும். மாலை 5 மணி வரை கூட்டம் நடக்கும். சிறப்புப் பேச்சாளர் ஞாநி. மற்றும் பல வாசக நண்பர்களும் பேசுவர். அதோடு, பிரபல பதிவர்களான கேபிள் சங்கர், தண்டோரா மணி, பொன். வாசுதேவன், யுவ கிருஷ்ணா மற்றும் பலரும் பேச இருக்கின்றனர். பத்ரி, மனோஜ் மற்றும் அராத்துவும் பேசுவார்கள். பார்த்திபன் நெடுஞ்செழியன் உட்பட {!–more–>}
 January 29th, 2012
எனது நண்பரும் பல் மருத்துவருமான திருவேங்கடம் சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தக விழாவில் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பின் போது நான் பேசியதை தனது மொபைலில் பதிவு செய்து, அதை டைப் செய்து அனுப்பி இருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. 13.12.11 அன்று நடந்த எக்ஸைல் வெளியீட்டு விழா பதிவு விடியோ இன்னும் நெட்டில் ஏற்றப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் அந்த நிகழ்ச்சியின் விடியோவை நாம் பதிவேற்றம் செய்ய முடியாதா? அதற்குப் பணம் {!–more–>}
 January 29th, 2012
மத்தியதர வாழ்க்கை பெண்ணடிமைத்தனத்தை ஆதாரமாகக் கொண்டது. நான் அப்படிப்பட்ட மத்தியதர வாழ்வை நிராகரித்தவன். என்னால் ஒரு பெண்ணை அடிமையாக்கி அவளை எனக்கு சமையற்காரியாகவும் வேலைக்காரியாகவும் வைத்திருந்து சொகுசு வாழ்க்கை வாழ முடியாது. அதனால் ஏற்படும் சங்கடங்களுள் ஒன்று அவ்வப்போது உணவு தேடி அலைவது.
நேற்று காலை 5 மணிக்கு எழுந்து அர்க்கைக் குடித்தேன். அதைக் குடித்தால் ஒரு மணி நேரத்துக்கு வெறும் வயிறாக இருக்க வேண்டும். பிறகு ஆறு {!–more–>}
 January 28th, 2012
1. இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எக்ஸைல் ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றிய விரிவான செய்தி வந்திருப்பதாக அறிந்தேன். அண்ணா நகர் டைம்ஸ் ஆஃப் இந்தியவில் வந்திருக்கிறதாம்.
2. இன்றைய ஜூனியர் விகடனில் என்னுடைய சிறிய பேட்டி ஒன்று வந்துள்ளது. ஜெய்ப்பூர் இலக்கிய விழா பற்றியது. ஜூவிக்கு நன்றி. (ஒரு வேண்டுகோள்: என் கெட்-அப் ரொம்பவே மாறி விட்டது).
3. வரும் 5-2-12 அன்று வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன்.
4. வரும் {!–more–>}
 January 27th, 2012
வரும் 4-ஆம் தேதி சனிக்கிழமை பின்மதியம் 2 மணியிலிருந்து 5 மணி வரை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் எக்ஸைல் விமர்சனக் கூட்டம் நடைபெறும். வாசக நண்பர்கள் வந்து கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறேன். இது குறித்து சற்று நேரத்துக்கு முன்னால் என் நண்பரிடம் பேசினேன். அபசகுனமாக மூன்று விஷயங்கள் சொன்னார். நல்லது. எல்லாவற்றையும் மீறித்தான் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இறையருளின் உதவியும், வாசகர்களாகிய உங்களுடைய நல்லன்பும் மட்டுமே என் பலம். திரும்பவும் சொல்கிறேன். {!–more–>}
 January 23rd, 2012
இதை எழுதுபவர் யார் என்று தெரியவில்லை. “இங்கே வந்திருக்கும் மற்ற எழுத்தாளர்களைப் போல் நான் ஆக்ஸ்ஃபோர்டிலோ கேம்ப்ரிட்ஜிலோ செய்ண்ட் ஸ்டீஃபன்ஸிலோ படித்தவன் அல்ல; நான் ஒரு கல்லூரி ட்ராப் அவ்ட்” என்று சொன்ன போது முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு அழகிய இளம் பெண் எழுந்து நின்று, “thats why we like you” என்று சொன்னார். அவர்தான் இதை எழுதுகிறாரோ என்று சந்தேகமாக உள்ளது. செஷன் முடிந்து அந்தப் பெண் வந்து கை குலுக்கியபோது அவர் பெயர் {!–more–>}
 January 22nd, 2012
|
சாரு நிவேதிதா வாசகர் வட்டம் on Facebook Group
|
Buy Books! Zero Degree from Blaft
Books in Tamil from Uyirmmai
|