
May 16th, 2012
1. http://www.youtube.com/watch?v=iJBYa8DXydQ&feature=related
2. http://www.youtube.com/watch?v=TKLhoNm9K-Y&feature=related
3. http://www.youtube.com/watch?v=zt1R8LQ5-LI&feature=related
(Guns N’ Roses என்ற இந்தக் குழு என்னுடைய எழுத்துடன் மிக நெருக்கமான தொடர்பு உடையது)
4.Guess who? {!–more–>}

May 16th, 2012
சாரு எனக்கு நீண்ட காலமாக ஒரு வருத்தம் இருந்து வந்தது. ஏன் இந்த சமூகம் தங்களை கொண்டாடவில்லை, தங்களுடன் பழகி பேசுவதில் (ஒரு சிலரை தவிர) என்ன தயக்கம் என என் மனம் சில சமயம் ஏங்கும் தவிக்கும். உங்களை மாயத்திரை கொண்டு யாரோ மறைப்பது போல கூட சில சமயம் நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன். என் மனதில் இவ்வளவு நாளாக குத்தி குடைந்து கொண்டிருந்த இந்த கேள்விக்கான பதிலை நேற்று ஒரு அரங்கத்தில் ஒரு கவிஞர் எதர்ச்சியாக {!–more–>}

May 13th, 2012
பறவையைப் போலே பறந்து செல்லும் சக்தி உங்களுக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? இந்தப் பாடலைக் கேட்ட போது எனக்கு அப்படி இருந்தது. உலகின் குதூகலம், சந்தோஷம், கொண்டாட்டம் எல்லாவற்றையும் காற்றின் அலைகளைப் போலே பரவ விடும் மகா அற்புதமான பியானோ இது…
இதைக் கேட்டுக் கொண்டிருந்த போது ராஜேஷின் மெஸேஜ் வந்தது: ஆமிர் கானின் ஆவணப் படம் டிவியில் ஓடிக் கொண்டிருக்கிறது; பாருங்கள். ஐயா, குகையில் வாழும் ஒரு முனிவனைப் போல் நானும் இசையுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை விட்டு {!–more–>}

May 13th, 2012
மதிப்பிற்குரிய ஐயா,
தாங்கள் வெளிநாட்டு புத்தகங்களை எவ்வாறு
வாங்குகிறீர்கள். அந்த புத்தகங்கள் அங்கு கிடைக்கிறது என்று எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்.
நன்றி
இப்படிக்கு
நவீன்
***
அன்புள்ள நவீன்,
இந்தக் கடிதத்தை நீங்கள் இரண்டாவது முறையாக அனுப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு வரும் எல்லா கடிதங்களுக்கும் பதில் எழுதி விடும் வழக்கமுடையவன் என்றாலும் முதல் முறை இந்தக் கடிதத்தைப் படித்த போது பதில் எழுதவில்லை. இப்போதும் அப்படியே செய்ய மனம் இல்லாமல் எழுதுகிறேன்.
முதலில் உங்களுக்கு என் நன்றி. வெளிநாட்டு ரெமி மார்ட்டினை எவ்வாறு வாங்குகிறீர்கள் என்று கேட்காமல் இருந்ததற்காக. மற்றபடி {!–more–>}

May 12th, 2012
என்னுடைய 18-ஆவது வயதிலிருந்து மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதிலும் நான் தில்லியில் இருந்த காலத்தில் (1978-90) அதிகம் கேட்டேன். கடந்த பத்து ஆண்டுகளாக அதிகம் கேட்கவில்லை. கேட்பதென்றால் நாள் முழுவதும் அதிலேயே கழியும். அதில் எனக்குப் பிடித்தது baroque style. அவர்களில் Bach, Vivaldi அதிகம் பிடிக்கும். விவால்டியின் four seasons மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கேட்க வேண்டியது. இவர்கள் தவிர, ட்சைக்காவ்ஸ்கி, ரிச்சர்ட் வாக்னர் ஆகியவர்களை அதிகம் கேட்பேன். மொட்ஸார்ட் ஒரு இசைக் கடவுள். {!–more–>}

May 12th, 2012
நான் எழுதிய நாவல்களில் மிக முக்கியமானதாக வாசகர்கள் கருதுவது ராஸ லீலா. இந்த நாவல் பற்றி அதிகமாக யாரும் விவாதிக்கவில்லை. மார்ச் 2009-இல் வெளிவந்த ரா. கிரிதரனின் விமர்சனம் ஒன்று மட்டுமே இதுவரை ராஸ லீலா பற்றி வந்துள்ள விமர்சனம். ரொம்ப நாட்களாக பல வாசகர்கள் ராஸ லீலா கிடைக்கவில்லை என்று என்னிடம் வந்து பிராது பண்ணிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுக்காக ஒரு தியாகம் செய்தேன். (எனக்கும் பப்ளிஷருக்குமான நட்பு). நாவல் பிரதிகள் இப்போது உயிர்மையிலும் மற்றும் பல {!–more–>}

May 11th, 2012
தோல்நோய்களை நீக்கும் பசு கோமியம்
பசுவானது புனித விலங்காக போற்றப்படுகிறது. பசுவின் சிறுநீரில் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதன் காரணமாகவே வீடுகளில் கிருமிகள் அண்டாமல் பாதுகாக்க அடிக்கடி பசுவின் சிறுநீர் தெளிக்கின்றனர் முன்னோர்கள். மனிதர்களின் பல நோய்களை நீக்கும் மருந்தாக பசு கோமியம் செயல்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கோமியத்தில் உள்ள சத்துக்கள்
பசுவின் சிறுநீரில் உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி, டி, இ போன்றவை அடங்கியுள்ளன. தாது உப்புக்களும், லாக்டோஸ், என்ஸைம் போன்றவை காணப்படுகின்றன. மேலும் நைட்ரஜன், சல்ஃபர், {!–more–>}