Man, you rock as usual!

Today’s post ’ஒரு உரையாடல்’ was the most hilarious one. சத்தியமா  என்னாலே சிரிப்பு  அடக்கவே  முடியலே . ஆஃபீஸில்  சத்தம்  போட்டு  சிரிச்சுட்டேன்  . chancea இல்லே.   இதை எழுதின  கைக்கு  எதாவது  கொடுக்கணுமே;  என்ன  கொடுக்க?  இந்த post -க்கு அப்படியே நேர் எதிர்  மண்ணின் மைந்தர்களின் புழுதிக் காற்று . எவ்வளவு நேர்மையான அலசல் ,ஆழமான கருத்துக்கள், கூர்மையான விமர்சனம், its one of the best articles oflate . Man, you rock as usual .

சாய்ரா பானு,

புதுதில்லி {!–more–>}

ஒரு உரையாடல்

 

பின்வரும் உரையாடல் 5.9.2010 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் உயிர்மை அரங்கில் நிகழ்ந்தது.  உரையாடலில் பங்கு பெறுவோர் ஷாஜி, சாரு நிவேதிதா மற்றும் ஒரு பெயர் தெரியாத பாத்திரம்.

பெயர் தெரியாதவர்: (ஷாஜியிடம் வந்து) நீங்கள்தான் மலையாளியாக இருந்தும் தமிழ் சினிமாவில் நிறைய பாடல்கள் எழுதுபவரா?

ஷாஜி: யார் சொன்னது?

பெயர்: (எதிரே அமர்ந்திருந்த மனுஷ்ய புத்திரனைக் காட்டி) அதோ அவர்…

ஷாஜி: ஓ, அப்படியா?  இதோ இவர்தான் (சாருவைக் காண்பித்து) நீங்கள் கேட்ட பாடகர்.

பெயர்: என்ன, பாடகரா?

ஷாஜி: {!–more–>}

மண்ணின் மைந்தர்களின் புழுதிக் காற்று

 

தினமும் அரை டஜன் திரைப்படங்களுக்கு தினசரிகளில் விளம்பரங்கள் வருகின்றன.  பெரும்பாலும் கிராமத்துப் பின்னணி.  பரட்டைத் தலை, கறுப்பு உருவம், தொப்பை தொந்தியுடன் ஒரு ஹீரோ கழுதையுடனோ குதிரையுடனோ நின்று கொண்டிருக்கிறான்.  பக்கத்தில் அவனுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அழகான 13 வயதுப் பெண் பாவாடை தாவணியுடன் இளித்துக் கொண்டிருக்கிறாள். எல்லாம் பருத்தி வீரனால் வந்த வினை.  ஏதாவது ஒரு நல்ல படம் வெற்றி அடைந்தால் போதும், அதே பாணியில் பல மொக்கை {!–more–>}

என்ன சொல்லப் போகிறார் மனுஷ்ய புத்திரன்?

 

விஜய் டி.வி.யில் கமல்ஹாசனை ஆஹா ஓஹோ என்று வானளாவப் பாராட்டினார் மனுஷ்ய புத்திரன்.  இப்போது இந்தக் கட்டுரைக்கு அவர் என்ன பதில் சொல்வார்?

http://www.karundhel.com/2010/09/blog-post.html

”அட போய்யா, நீ கூடத் தான் நித்யானந்தரைப் பற்றி வானளாவப் புகழ்ந்தாய்?” என்று என்னைப் பார்த்து  கேட்பாரா?  அப்படிக் கேட்பதாக இருந்தால் நாம் நித்தியையும் கமலையும் ஒன்றாகச் சேர்த்து விடலாம்.

தணிக்கை செய்யப்பட்ட கடிதம்...

Charu ,

Aren’t any new books of you getting published this year before the book exhibition. I was wondering because its only 2 more months to book fair . பழசெல்லாம் படிச்சு முடிச்சிட்டியான்னு கேக்காதீங்க , its all the more reason to meet you .

மனுஷ்ய புத்திரன் கிட்டே சொல்லுங்க,  எங்க தல சாருவோட புது புத்தகங்கள் ஏதும் வெளியிடலைன்னா ரொம்ப கலீஜ் ஆயிடும்ன்னு. ……………………………………………(censored).  {!–more–>}

கூண்டைத் திறந்து விட்ட சிறுமி (2)

Dear Charu,

I was reading about the Jean Genet & Nabakov on wikkipedia. It was mentioned that pablo picasso had to write to the french president to keep jean off from the prison. he was a petty thief and he has commited lots of, lets just say petty crimes too..  if it was {!–more–>}

புலியின் கூண்டைத் திறந்து விட்ட சிறுமிக்கு…

Dear Charu,

I can see how much you are shuffled between your two lives of a good family man and a creator , but the truth is you cant excel in both . you got to choose . Most of the successful people didn’t have a great personal life thats because your {!–more–>}

கூண்டுப் புலி

அன்பு மனுஷ்யபுத்திரன்,

உங்கள் கவிதைகளை சாரு ஆன்லைனில் படித்தேன். உண்மையைச் சொல்லிவிடுகிறேன். எனக்குக் கவிதைகளை புரிந்துகொள்ளும் மனோபக்குவம் இதுவரை வாய்த்ததில்லை. கவிதைகளை ரசிக்கும் திறமை எனக்கு இதுவரை இல்லை. பலமுறை, சாரு பல கவிதைகளைப் பற்றி எழுதும்போதெல்லாம், அது எப்படி கவிதைகளைப் படித்து சில பேரால் இவ்வளவு இன்புற முடிகிறது என்று எண்ணியிருக்கிறேன். ஆனால், இன்று உங்களது கவிதைகளைப் படித்தபோதுதான், எனக்கும் அந்த மனப்பான்மை வாய்த்ததைப் புரிந்துகொண்டேன். உங்கள் {!–more–>}

மனுஷ்ய புத்திரனின் புதிய கவிதைகள்

(கவிதைகளின் கடைசியில் என்னுடைய ஒரு சிறு குறிப்பு உள்ளது: சாரு)

manushyaputhiran@gmail.com

கூண்டுப் புலி

 

கூண்டுப் புலிக்கு

கேரட் தரும்

சிறுமியொருத்தி

அதன் பசித்த கண்களைக்

கவனிக்கவேயில்லை

 

கூண்டுப் புலியைச்

சீண்டும்

சிறுமியொருத்தி

அது நகைச்சுவை உணர்ச்சியற்றது

என்பதை அறிந்திருக்கவில்லை

 

கூண்டுப் புலியைச்

சவாலுக்கு அழைக்கும்

சிறுமியொருத்திக்கு

புலி மிகவும் தந்திரமானது

என்பது தெரியவில்லை

 

கூண்டுப் புலியைப்

புகைப்படம் எடுக்கும்

சிறுமியொருத்தி

தான் எடுப்பது

புலியின் ஒரு பொய்த் தோற்றம்

என்பதைக் கண்டுபிடிக்கவே இல்லை

 

கூண்டுப் புலியோடு

பேச முற்படும்

சிறுமியொருத்தியால்

அதன் மௌனத்தின் ஆழத்தை

நெருங்கவே இயலவில்லை

 

கூண்டுப் புலிக்குக்

கதை சொல்ல முற்படும்

சிறுமியொருத்தி

கானகத்தின் கதைதவிர

புலிக்கு எந்தக் கதையும் புரியாதென்பதை

அறிந்திருக்கவில்லை

 

கூண்டுப் புலிக்குக்

கவிதை எழுதக் கற்றுக்கொடுக்கும்

சிறுமியொருத்தி

வார்த்தைகளின் ரத்த வேட்கை குறித்துப்

புரிந்துகொள்ளவே இல்லை

 

கூண்டுப் புலியின்

பிறந்த நாளுக்குப் பரிசளிக்கும்

சிறுமியொருத்தி

கூண்டுப் {!–more–>}

சில முன்னோடிகள்…

சாரு,

வணக்கம்.

நான் இதுவரை புதுமைப்பித்தன், கு அழகிரிசாமி, கி.ராஜநாராயணன்,தி.ஜானகிராமன்,சுந்தர ராமசாமி,அசோகமித்திரன் ஆகியோரின் கதைகளை மட்டுமே படித்துள்ளேன்.

சுந்தரராமசாமியின் படைப்புகள் அவ்வளவு உவப்பானவையாக இல்லை.ஆனால் புதுமைப்பித்தனை எனக்குப் பிடித்துள்ளது.

நீங்கள் சிலாகித்துச் சொன்ன ஆதவனின் படைப்புகளை இப்பொழுது படிக்க ஆரம்பித்து உள்ளேன். முதலில் சிறுகதைகளில் இருந்து தொடங்கியுள்ளேன்.பத்து சிறுகதைகளை மட்டுமே இப்பொழுது வாசித்துள்ளேன்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அற்புதம். ஆதவனை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.
தங்களைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அவ்வப்போது அறிமுகம் செய்தால் தன்யனாவேன்.
பணிவன்புடன்,
பெருமாள்.
கரூர்.

அன்புள்ள பெருமாள்,

என் வாசகர்களிடம் ஒரு பொதுவான பண்பை கவனித்திருக்கிறேன்.  என் எழுத்தை மட்டுமே படிக்கும் அவர்கள் நான் பரிந்துரை செய்யும் எழுத்தாளர்களைப் படிப்பதில்லை.  சிலர் மட்டுமே விதிவிலக்கு.  இல்லாவிட்டால் {!–more–>}

Log In

Forgotten Password
Cancel

Archives

Calendar

September 2010
S M T W T F S
« Aug    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Who's Online

61 visitors online now
60 guests, 1 members