சாருவுடன் சில தினங்கள்…

வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது என்ற  கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின் வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால் அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது ஒரு தவறான கருத்து.  காரணம்? சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள்.  என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே … Read more

பிரளயம்

காலையில் நடைப்பயிற்சிக்குப் போகும்போது கூட தியாகராஜா நாவலுக்காக வேலை செய்துகொண்டேதான் இருக்கிறேன். தியாகராஜர் பற்றிய உரைகளைக் கேட்டபடியும், அவற்றிலிருந்து முக்கியமான தகவல்களைக் குறித்துக்கொண்டும்தான் போகிறது நடைப்பயிற்சி. இன்னும் இரண்டு வாரத்தில் முடித்து விடுவேன். கடைசிப் பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் பத்து முறையாவது திருத்தம் செய்கிறேன். பத்து முறை என்றால் பத்து விதமான அத்தியாயங்கள். அதில் சிறந்ததை எடுத்து நாவலில் சேர்க்கிறேன். இதற்கு இடையில் இந்தப் பிரளயத்தைக் கேளுங்கள்.

மேன்மையுற வேண்டும்!

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் அராத்து ஒரு விஷயத்தை எழுதியிருந்தார். ஒரு பெண்மணி ரூ. 12,000/- கொடுத்து ஒரு ஆன்மீக வகுப்பில் சேர்ந்திருக்கிறார். இரண்டு நாள் நிகழ்ச்சி. அந்த இரண்டு நாளும் ஒரு புதூ சாமியார் ஏதோ வாயில் வந்ததையெல்லாம் உளறி வைத்திருக்கிறார். இப்போது பிரபலமாக இருக்கும் ஆன்மீகவாதிகள் பற்றி யூகிக்காதீர்கள். இது ஒரு புதூ சாமி. உட்கார இடமில்லாமல் ஜமுக்காளத்தை விரித்து தரையிலெல்லாம் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள் மக்கள். இரண்டே நாளில் ஐம்பது லட்சம் வசூல். ஒரே மூலதனம், புதூ … Read more

பரவசம்

தியாகராஜா நாவலில் இருநூறு பக்கங்களை முடித்து விட்டேன். இன்னும் நூறு பக்கங்கள் போகலாம். இது இப்போதைய உத்தேசம். என் விஷயத்தில் எதுவும் நிச்சயமில்லை. திடீரென்று ஐநூறு பக்கமும் போகலாம். அல்லது, முந்நூறிலேயே முடியலாம். இதுவரை படித்த நான்கைந்து பேரும் எழுதிய வார்த்தைகளை நாவல் வெளிவரும்போது உங்களுக்கும் வாசிக்கத் தருகிறேன். ஆனால் அவர்கள் அனைவரும் தரும் செய்தி ஒன்றுதான். படிக்கும்போது ஒரு பரவச நிலை ஏற்படுகிறது. பரவசம் என்றால் என்ன? இசைக்கு மட்டும்தான் அந்த சக்தி உண்டு. மைக்கேல் … Read more

தியாகராஜா நாவலை எழுதுவதன் நோக்கம் என்ன?

இந்தக் கேள்விக்கு இதுவரை நான் சொல்லி வந்த பதில் இதுதான்: எந்த நோக்கமும் இல்லை. எனக்குக் கிடைத்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒரு தபால்காரன். அவ்வளவுதான். ஆனால் தியாகராஜா நாவலுக்கு அப்படிச் சொல்ல மாட்டேன். சமீபத்தில் இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, கர்னாடக சங்கீதம் பரவலாக ரசிக்கப்பட வேண்டும். ஒரு கச்சேரிக்குப் போனால் அங்கே ஐநூறு பேர் இருந்தால் அதில் நானூற்றுத் தொண்ணூற்றைந்து பேர் … Read more